எதிர்மறை ஆற்றல்கள் வராமல் இருக்க பரிகாரம்

negative in home
- Advertisement -

கண் திருஷ்டி, தீய சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள் என்று நம் வாழ்க்கையில் பல விஷயங்கள் தடைகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட தடைகளை விலக்குவதற்கும் இந்த எதிர்மறை ஆற்றல்கள் நம் வீட்டிற்குள் வராமல் இருப்பதற்கும் செய்யக்கூடிய ஒரு எளிய தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக நம் வீட்டில் மகாலட்சுமி தாயார் குடியேற வேண்டும் என்றால் நம் வீடு லட்சுமி கடாட்சமாக இருக்க வேண்டும் என்று பலரும் கூறி இருப்பார்கள். அதே போல் தான் எந்தவித எதிர்மறை ஆற்றல்களும், தீய சக்திகளும், கண் திருஷ்டியும் நம்மையும் நம் வீட்டையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கான சில வழிமுறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். எளிமையான அந்த வழிமுறையை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

அன்றைய காலத்தில் நம் முன்னோர்கள் வீட்டிற்கு வெளியே சென்று விட்டு உள்ளே வரும்பொழுது கை கால்களை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு வீட்டிற்குள் வருவார்கள். இதற்கு காரணம் சென்ற இடத்தில் ஏதாவது எதிர்மறை ஆற்றலோ, தீய சக்திகளோ பின் தொடர்ந்தால் அது அந்த தண்ணீரில் போய்விடும் என்பதுதான். இதே போல் வீட்டிற்கு விருந்தினராக வருபவர்களுக்கும் தண்ணீரை கொடுத்து கை கால்களை கழுவி விட்டு வர சொல்வார்கள்.

இதற்கு காரணம் அவர்களிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலால் நமக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படக்கூடாது என்பதுதான். ஒரு சிலர் வீட்டிற்கு வந்து இது இப்படி இருக்கிறது அது அப்படி இருக்கிறது என்று சொன்னால் அதனால் பாதிப்புகள் ஏற்பட்டு பல பிரச்சனைகள் வரும். இதை நாம் கண்கூடாக பார்த்திருப்போம். இன்றைய காலத்தில் கால்களை கழுவி விட்டு வரும் பழக்கம் யாருக்கும் இருப்பதில்லை.

- Advertisement -

நேராக உள்ளே வந்து விடுகிறார்கள். அவர்களை நம்மால் தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மிகவும் எளிமையாக நம் வீட்டு வாசலில் இருக்கக் கூடிய ஒரு பொருளை வேறு விதமாக மாற்றி வைப்பதன் மூலம் எந்த விதமான எதிர்மறை ஆற்றல்களும் வீட்டிற்குள் வராது. அந்த பொருள்தான் கால்மிதி.

அனைவரின் வீட்டு வாசலிலும் கால்மிதி என்ற ஒன்று கண்டிப்பான முறையில் இருக்கும். அப்படிப்பட்ட கால்மிதி கால்களை துடைப்பதற்கு மட்டும் பயன்படாமல் எதிர்மறை ஆற்றல்களையும் விலக்க உதவும் என்று கூறினால் நம்புவீர்களா? ஆம். இந்த மாதிரி எதிர்மறை ஆற்றல்கள் நம் வீட்டிற்குள் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் கருப்பு நிறத்தில் இருக்கக்கூடிய கால்மிதியை பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

அந்த கால்மிதியின் நான்கு ஓரங்களிலும் சிவப்பு நிறத்தில் இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடைகளில் இந்த நிற ஒற்றுமையில் கால்மிதிகள் கிடைப்பது மிகவும் சிரமம் என்பதால், கருப்பு கால் மிதியை வாங்கிக்கொண்டு அதை சுற்றி சிவப்பு நிற ரிப்பனை பயன்படுத்தி தைத்து விடலாம் அல்லது சிவப்பு நிற டேப்பை வைத்து ஒட்டி விடலாம். அந்த கால்மிதிகளில் காலை துடைத்து விட்டு வருவதன் மூலம் எதிர்மறை ஆற்றல்கள் வெளியே சென்று விடும். வீட்டிற்குள் வராது என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: அஷ்ட ஐஸ்வர்யம் தரும் புவனேஸ்வரி வழிபாடு

மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்து நம் வீட்டிற்குள் எந்த வித தீய சக்திகளையும் அனுமதிக்காமல் பார்த்துக் கொள்வோம்.

- Advertisement -