அஷ்ட ஐஸ்வர்யம் தரும் புவனேஸ்வரி வழிபாடு

bhuvaneswari
- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் செல்வ செழிப்புடன் வாழ வேண்டுமென்றால் அதற்கு மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி மகாலட்சுமி அருள் மட்டும் இருந்தால் போதுமா? தனம் மட்டும் கிடைத்தால் போதுமா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதனால் தான் பலரும் அஷ்டலட்சுமிகளை வழிபடுவார்கள்.

ஒவ்வொரு லட்சுமிக்கும் ஒவ்வொரு வகையான ஐஸ்வரியத்தை தரக்கூடிய ஆற்றல் இருக்கிறது. அஷ்ட லட்சுமிகளையும் நாம் வழிபடும் பொழுது நமக்கு அஷ்ட ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தருவதற்கு அஷ்டலட்சுமிகளை வழிபடுவதற்கு இணையான புவனேஸ்வரி வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

புவனங்களை காத்து ரட்சிக்கும் தாயாக விளங்க கூடியவள் தான் புவனேஸ்வரி தாயார். புவனம் என்றால் உலகம் என்று அர்த்தம். ஈஸ்வரி என்றால் இரட்சிக்கும் தாய் என்று அர்த்தம். அதனால் தான் உலகத்தை காத்து ரட்சிக்கும் தாயாக புவனேஸ்வரி விளங்குகிறார். அப்படிப்பட்ட புவனேஸ்வரியை நாம் மனதாக மந்திர ரூபத்தில் வழிபடும் பொழுது அதன் பலன் நமக்கு பல மடங்கு கிடைக்கும் என்றுதான் கூற வேண்டும்.

இந்த வழிபாட்டை தினமும் செய்தால் மிகவும் அற்புதமான பலன்கள் கிடைக்கும். தினமும் செய்ய இயலாதவர்கள் வெள்ளிக்கிழமை அன்று மட்டுமாவது செய்ய வேண்டும். வாரவாரம் செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் தங்களுடைய பிறந்த நட்சத்திர நாள் அன்று செய்ய வேண்டும். இப்படி தங்களால் இயன்ற ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்து தொடர்ந்து செய்வதன் மூலம் புவனேஸ்வரி தாயாரின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஒரு பெரிய தாம்பாளம் தேவைப்படும். பித்தளை தாம்பாளமாக இருப்பது மிகவும் சிறப்புக்குரியது. அந்த தாம்பாளத்திற்கு மஞ்சள் குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். பிறகு அந்த தாம்பாளத்தில் வாழை இலை, வெற்றிலை அல்லது மாயிலை இந்த மூன்று இலைகளில் எந்த இலை கிடைக்கிறதோ அந்த இலையை வாங்கி வைக்க வேண்டும்.

அந்த இலைக்கு மேல் நாணயத்தை வைக்க வேண்டும். இந்த நாணயம் தங்கம், வெள்ளி போன்ற உலோகத்தில் இருந்தால் மிகவும் சிறப்பு. அப்படி இல்லாத பட்சத்தில் நம்மிடம் இருக்கக்கூடிய ஒரு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயத்தையும் வைக்கலாம். எங்கெல்லாம் நமக்கு அஷ்ட ஐஸ்வரியங்கள் பெருக வேண்டும் என்று நினைக்கின்றோமோ அங்கெல்லாம் நாணயத்தை வைக்க வேண்டும் என்பதால் அதற்கேற்ற எண்ணிக்கையில் நாணயத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு அந்த நாணயத்தை சுற்றி 11 அகலில் நெய் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபங்கள் தாம்பாளத்தில் தான் இருக்க வேண்டும். தீபம் ஏற்றிய பிறகு “ஓம் புவனேஸ்வரி தாயே போற்றி, ஓம் மகாலட்சுமியே போற்றி” என்ற மந்திரங்களை 108 முறை கூறி அந்த நாணயத்திற்கு தாழம்பூ குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். தங்களால் இயன்ற ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை படைக்க வேண்டும்.

அர்ச்சனை செய்து முடித்த பிறகு அந்த தாம்பாளத்தை வடக்கு பார்த்தவாறு சிறிது நகர்த்தி வைத்துவிட்டு அதில் இருக்கும் குங்குமத்தை நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த குங்குமத்தை நிலை வாசலில் வைப்பதன் மூலம் அந்த குடும்பத்தையே காப்பாள் புவனேஸ்வரி தாயார்.

இதையும் படிக்கலாமே: தடைகளையும் எதிரி தொல்லைகளையும் நீக்கும் ரத்த சந்தனம்

உலகத்தை காத்து ரட்சிக்கும் புவனேஸ்வரி தாயாரை நம்பிக்கையுடன் நாம் வழிபட்டால் நம் இல்லத்தையும் காத்து ரசிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -