சனி பகவானுக்கு சுத்தமாக பிடிக்காதவர்கள் யார் யார் என்று தெரியுமா உங்களுக்கு?

sanibagavan2
- Advertisement -

ஏழரை சனி என்று சொன்னாலே எல்லோர் மனதிலும் ஒரு பயம் வந்துவிடும். ஆனால் மனிதர்களாக பிறந்து விட்டால் கட்டாயம் இந்த ஏழரை சனியில் விழுந்து எழுந்து தான் ஆக வேண்டும். 27 வயது கொண்டவர்களுக்கு ஒரு முறையாவது கட்டாயம் ஏழரை சனி வந்திருக்கும்.

இது எழுதப்பட்ட விதி. இன்றைய சூழ்நிலையில் கும்ப ராசிக்கு ஜென்ம சனி நடந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இன்னும் ஐந்து ஆண்டு காலம் சனி பகவானின் தாக்கம் இருக்கும். மகர ராசிக்கு கடைசியாக 2 1/2 வருடம் நடந்து கொண்டிருக்கிறது. மீன ராசிக்கு இப்போது ஏழரை சனி தொடங்கி இருக்கிறது.

- Advertisement -

சனிபகவானின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வேண்டும். ஏழரை சனி நடந்து கொண்டிருந்தாலும் சனி பகவானால் நமக்கு பாதிப்பு வரக்கூடாது என்றால், நாம் என்னென்ன விஷயங்களை செய்யணும். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சனி பகவான் தாக்கத்திலிருந்து தப்பிக்க செய்ய வேண்டிய பரிகாரம்

அயராது உழைத்து வியர்வை சிந்துபவர்களை சனிபகவானுக்கு சுத்தமாக பிடிக்காதாம். உங்களுடைய உடம்பில் வியர்வை வாசம் அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். வியர்வை சொட்ட சொட்ட நீங்கள் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது சனி பகவான் உங்களை நெருங்கவே மாட்டார். அப்படி என்றால் நன்றாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

- Advertisement -

நன்றாக வெகு தூரம் நடக்க வேண்டும். சோம்பேறித்தனத்தோடு உட்காராமல் உங்களுடைய வேலைகளை சுறுசுறுப்பாக செய்து கொண்டே இருக்க வேண்டும். ஊரை சுற்றிக் கொண்டே வேலை செய்பவர்களுக்கு சனி பகவானின் தாக்கம் குறைவாக இருக்கும். ஏசி ரூமில் உட்கார்ந்து இடத்திலிருந்து ஒரு சொட்டு வியர்வை கூட வராமல் வேலை செய்பவர்களுக்கு சனி பகவானின் மூலம் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும். காலையில் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்து நீண்ட தூரம் நடந்து உங்களுடைய உடம்பை வியர்க்க வைக்க வேண்டும். அதேபோல உங்களை தாழ்த்தி பேசுபவர்களுடன் சேராதீங்க. நீ தோத்து போயிடுவ. உனக்கு ஏழரை சனி நடக்குது.

- Advertisement -

உனக்கு வாழ்க்கையில் முன்னேறுவது கஷ்டம் என்று சொல்பவர்களை உங்களை விட்டு தள்ளி வைக்க வேண்டும். உன்னால் முடியும், ஏழரை சனி உனக்கு நன்மையை செய்யும், என்று உங்களை ஊக்கப்படுத்துபவர்களை உங்கள் கூடவே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக உங்களுடைய ஆரோக்கியத்தில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

ஏதாவது ஆரோக்கிய குறைபாடு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். டீன் ஏஜில் இருப்பவர்களுக்கு ஏழரை சனி நடக்கும் பட்சத்தில் அவர்களுடைய அவசர புத்தி அவர்களை தடுமாறச் செய்யும். டீன் ஏஜில் இருப்பவர்களுக்கு சைக்கிள் ஓட்டுபவர்கள், பைக் ஓட்டுபவர்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கவும். அதிவேகமாக இயங்கக்கூடிய வாகனத்தை ஓட்டக்கூடாது.

இறுதியாக எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இருந்தாலும் பதிவு செய்து கொள்கிறோம். நரசிம்மர், ஹனுமன், பிள்ளையார் வழிபாடு செய்ய வேண்டும். ஹனுமன் சாலிசா படிப்பது வீட்டில் நரசிம்மர் மந்திரத்தை ஒலிக்க வைப்பது, விநாயகர் அகவல் ஒலிக்க வைப்பது, போன்ற விஷயங்களை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தொழில் நன்றாக சிறந்து நடைபெறுவதற்கு செய்யக்கூடிய வழிபாடுகளும் தானமும்.

அரசுக்கு புறம்பான காரியத்தில் ஈடுபடாதீங்க. கூடாத நட்பு வைத்துக் கொள்ளாதீர்கள். விவேகத்தை மறந்து வேகத்தோடு செயல்படாதீங்க. இதை எல்லாம் பின்பற்றி வந்தாலே சனி பகவான் உங்களுக்கு எந்த பாதிப்பையும் கொடுக்க மாட்டார். ஏழரை வருடங்கள் கடந்து போனதே தெரியாது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த குறிப்புகளை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -