அட, முகத்தில் இருக்கும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை தர, உங்கள் சமையலறையில் இருக்கும் இந்த 3 பொருட்கள் போதுமே! 20 நிமிடத்தில் உங்கள் முகம் பளிங்கு கல் போல ஜொலிக்கும்.

face
- Advertisement -

நம்முடைய முகத்தில் இருக்கும் பல வகையான பிரச்சனைகளுக்கு இயற்கையான முறையில் நிரந்தர தீர்வை பெற, என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதிகப்படியான செலவில்லாமல், நம் சமையலறையில் இருக்கும் இந்த பொருட்களை சரியான அளவில் கலந்து, முகத்தில் அப்ளை செய்வதன் மூலம் முகப்பரு பிரச்சனை, முகத்தில் உள்ள தழும்புகள், கரும்புள்ளிகள், பிக்மெண்டேஷன், முகசுருக்கம் இவை அனைத்திற்குமே நிரந்தர தீர்வு கிடைத்துவிடும்.

arisimavu

உங்களுடைய சமையலறையில் இருக்கும் அந்த 3 பொருட்கள் என்னென்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம் அரிசிமாவு, புளிக்காத கெட்டி தயிர், தக்காளி பழச்சாறு. நிறைய பேர் அரிசி மாவை பயன்படுத்தி முகத்தில் ஸ்கரப் செய்வார்கள். அதில் தவறொன்றும் கிடையாது. வெறும் அரிசி மாவை பயன்படுத்துவதோடு இந்த குறிப்பிட்ட 2 பொருட்களை சேர்க்கும்போது, முகம் மேலும் அழகாக மாறி நீண்ட நாட்களுக்கு இளமையை தக்க வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

- Advertisement -

முதலில் ஒரு சுத்தமான பௌலில் அரிசி மாவு 1 ஸ்பூன், எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் அளவு புளிக்காத கெட்டித் தயிர், 1 ஸ்பூன் அளவு தக்காளி பழச்சாறை ஊற்றிக்கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்றக்கூடாது. இந்த 3 பொருட்களையும் நன்றாக கலந்து, முகத்தில் கீழ் பக்கத்திலிருந்து மேல் பக்கத்திற்கு தடவி 20 லிருந்து 30 நிமிடங்கள் தாராளமாக ஊற விடலாம். அதாவது இந்த ஃபேஸ் பேக் உங்களுடைய முகத்தில் 30 நிமிடத்திற்கு மேல் இருக்கக்கூடாது.

face1

20 நிமிடம் உங்களுடைய முகத்தில் இந்த பேக் நன்றாக ஊறிய பின்பு, உங்களது கையில் சுத்தமான தண்ணீரை தொட்டு முகத்தில் உள்ள ஃபேஸ் பேக்கை ஈரமாக்கி விட்டு அதன் பின்பு, வட்டவடிவமாக மசாஜ் செய்து தரவும்.

- Advertisement -

அழுத்தி மசாஜ் செய்யக்கூடாது. சருமத்தில் கீறல் விழுந்தால், சீக்கிரமே சுருக்கம் விழுந்து விடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வெறும் 5 நிமிடங்கள் மசாஜ் செய்து விட்டு முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவி விடுங்கள். 20 நிமிடத்தில் உங்களுடைய முகம் பளிச் பளிச் என்று ஜொலிஜொலிக்கும்.

face

வாரத்திற்கு 1 நாள் இந்த ஃபேஸ் பேக்கை போட்டாலே முகத்தில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக குறைவதை உங்களால் காண முடியும். நேரம் உள்ளவர்கள் ஒரு நாள் விட்டு ஒருநாள் உங்கள் முகத்திற்கு இந்த ஃபேஸ்புக்கை பயன்படுத்தலாம். தினமும் மசாஜ் செய்ய வேண்டாம். அப்ளை செய்து விட்டு முகத்தை சாதாரணமாக கழுவி விடுங்கள். வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் ஸ்கரப் செய்து மசாஜ் பண்ணினால் போதும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். நல்ல ரிசல்ட் கிடைத்தால் தொடர்ந்து ஃபாலோ பண்ணுங்க.

- Advertisement -