இந்த ஒரு சூப்பரான ஆயிலை வீட்டிலேயே தயார் செய்து கொண்டால் போதும். கருமை நிறத்தில் இருப்பவர்களும் பளபளப்பாக மாறிவிடுவார்கள்

eetroot
- Advertisement -

ஆண் பெண் இருவருக்குமே தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் இருக்கிறது. அதிலும் நமது தமிழ்நாட்டில் பெரும்பாலோனோர் கருமை நிறத்தில் இருப்பார்கள். சிலர் மாநிறமாகவும், ஒரு சிலர் மட்டுமே நல்ல வெள்ளையாகவும் இருப்பார்கள். கலர் சற்று குறைவாக இருப்பவர்களுக்கு எப்போதும் கொஞ்சம் ஏக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒரு சிலர் கருப்பாக இருந்தாலும் பார்ப்பதற்கு அழகாக அவர்களின் சருமம் மினுமினுப்பாக இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் ஏதேனும் ஒரு மூலிகை பொருளையோ அல்லது க்ரீமையோ பயன்படுத்தி வருவார்கள். அவ்வாறு நாமும் வீட்டிலேயே இந்த மூலிகை ஆயிலை தயார் செய்து வைத்துக்கொண்டால் போதும். உங்களது சருமமும் நிறமும் பளபளவென மாறிவிடும். வாருங்கள் இந்த ஆயிலை எவ்வாறு தயார் செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

face-skin

தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் – 50 கிராம், பாதாம் எண்ணெய் – 50 கிராம், கேரட் – 1, பீட்ரூட்– 1, அதிமதுர பொடி – ஒரு ஸ்பூன், மஞ்ஜிஷ்டா பொடி – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் இவற்றுக்குத் தேவையான பொருட்களை கடையில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் சூப்பர்மார்க்கெட்டிலலோ அல்லது மளிகைகடைகளிலலோ கிடைத்துவிடும். அதிமதுரப் பொடி மற்றும் மஞ்ஜிஷ்டா பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

oil

கேரட் மற்றும்பீட்ரூடடை காய் துருவலை பயன் படுத்தி துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

எண்ணெய் லேசாக சூடானதும் அரைத்து வைத்துள்ள பீட்ரூட், கேரட்டை இதனுடன் சேர்த்து நன்றாகக் கொதிக்க விட வேண்டும். பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் அதிமதுரப் பொடி, ஒரு ஸ்பூன் மஞ்ஜிஷ்டா பொடி சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டே இவற்றை நன்றாக கலந்துவிட வேண்டும்.

carrot-oil2

பிறகு இதனை நன்றாக ஆற வைத்து வடிகட்டிக் ஒரு டப்பாவில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிதளவு எண்ணெயை எடுத்து முகத்தில் தடவி 5 அல்லது 7 நிமிடம் நன்றாக மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். பிறகு ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை நன்றாக கழுவி விட வேண்டும்.

carrot-oil1

இந்த எண்ணெய் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் நன்றாக இருக்கும். அந்தஎண்ணெயயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள் மற்றும் கருமை நிறம் மறைந்து முகம் பளிச் பளிச்சென்று மாறிவிடும்.

- Advertisement -