அழகை அள்ளித்தரும் ஃபேஸ் க்ரீம்

face cream
- Advertisement -

இந்த உலகில் அழகை ஆராதிக்காத நபர்களே இருக்க முடியாது என்றுதான் கூற வேண்டும். அதனால் தான் அழகை பெறுவதற்காக பல வழிகளில் பலரும் முயற்சி செய்கிறார்கள். ஆண்கள் பெண்கள் என்று இருப்பாலரும் அழகை விரும்பி தாங்களும் அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதால் தான் இன்றைய காலகட்டத்தில் பியூட்டி பார்லர் என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எந்த செலவும் செய்யாமல் நம் முகத்தை அழகாக்க கூடிய அற்புதமான ஒரு கிரீமை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் வரக்கூடாது. பருக்களால் ஏற்படக்கூடிய வடுக்கள் வரக்கூடாது. கரும்புள்ளிகள் வரக்கூடாது. கருந்திட்டுகள் வரக்கூடாது. சுருக்கங்கள் வரக்கூடாது. முகம் பிரகாசமாக இருக்க வேண்டும். முகம் நல்ல நிறமாக இருக்க வேண்டும். மென்மையாக இருக்க வேண்டும் என்று பல வழிகளில் யோசிப்பார்கள். இவை அனைத்திற்கும் உதவக்கூடிய ஒரே ஒரு கிரீமை எப்படி நம் வீட்டிலேயே தயார் செய்வது என்று தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த கிரீமை தயார் செய்வதற்கு நமக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது இரண்டு பொருள்கள் தான். ஒன்று உருளைக்கிழங்கு மற்றொன்று தக்காளி. உருளைக்கிழங்கில் இருக்கக்கூடிய சத்துக்களால் நம் முகத்தில் இருக்கக்கூடிய மாசு மருக்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதேபோல் தக்காளியை நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றத்தை பெற முடியும் என்பதும் அனைவரும் அறிந்த உண்மையை. இவை இரண்டையும் சேர்த்து நாம் செய்யும்பொழுது நமக்கு எண்ணில் அடங்காத பலன்கள் கிடைக்கும்.

இதற்கு முதலில் இரண்டு தக்காளியை எடுத்து அதை கேரட் துருவுவது போல் நன்றாக துருவி வடிகட்டியை பயன்படுத்தி சாறை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இதே போல் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து கேரட் துருவுவது போல் உரசி வடிகட்டியை பயன்படுத்தி உருளைக்கிழங்கு சாறையும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது தக்காளி சாறு 2 ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு 2 ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

கலந்த இந்த கலவையில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு வைட்டமின் இ கேப்ஸ்யூல் இவற்றை சேர்க்க வேண்டும். நன்றாக கலக்க வேண்டும். இது க்ரீம் பதத்திற்கு வரும் அளவிற்கு நன்றாக கலக்க வேண்டும். அவ்வளவுதான் இந்த க்ரீமை காலையிலோ அல்லது மாலையிலோ அல்லது சன்ஸ்க்ரீமாகவோ எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

இந்த கிரீமை பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கருமைகள் நீங்கும். கருந்திட்டுகள் குறையும். பருக்கள் வராது பருக்கள் ஏற்பட்ட வடுக்கள் மறையும். சுருக்கங்கள் நீங்கும். மென்மையான முகத்தை பெற முடியும். அதே சமயம் நிறத்தையும் இது அதிகரிக்கும் ஆற்றல் கொண்டதாக திகழ்கிறது.

இதையும் படிக்கலாமே: சுருட்டையாக இருக்கும் முடி நேராக மாற டிப்ஸ்.

ஒரே க்ரீம் அனைத்து விதமான பிரச்சினைகளையும் சரி செய்யும் அதுவும் நம் வீட்டில் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய இரண்டே இரண்டு பொருட்களை வைத்து தயாரிக்க கூடிய கிரீம் என்பதால் இதில் எந்தவித பக்க விளைவுகளுமே ஏற்படாது.

- Advertisement -