முகம் பளபளக்க இந்த ஃபேஸ் பேக்கை போட்டு பாருங்க. இந்த பேக் தயார் செய்ய சமையலறையில் இருக்கக்கூடிய இந்த 4 பொருட்கள் மட்டும் போதும்.

face19
- Advertisement -

நம்முடைய முகம் பார்ப்பதற்கு எப்போதுமே பளபளப்பாக இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி ஃபேசியல் ப்ளீச்சிங் செய்து கொள்ள முடியாது. அதே சமயம் முகத்தை அழுக்கோடு அப்படியே போட்டு வைக்கவும் முடியாது. வீட்டில் இருந்தபடியே இயற்கையான பொருட்களை வைத்து முகத்தை எப்படி அழகாக பளபளவென மாற்றுவது‌. ஒரு சின்ன ஃபேஸ் பேக் உங்களுக்காக இதோ. வெளியே போகக் கூடிய பெண்கள்தான் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வீட்டில் இருக்கும் போதும் பெண்கள் அழகாக இருக்கவேண்டும். கண்ணாடியை பெண்கள் தங்களுடைய முகத்தை பார்த்துக் கொள்ளும் போது அவர்களுக்குள்ளேயே ஒரு தன்னம்பிக்கை பிறக்க வேண்டுமென்றால் இந்த அழகு நிச்சயம் தேவைப்படும்.

ஃபேஸ் பேக் செய்ய ஒரு மிக்ஸி ஜாரை முதலில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பழுத்த தக்காளி பாதி அளவு, வெள்ளரிக்காய் ஒரு சிறிய துண்டு, வேக வைத்த உருளைக்கிழங்கு பாதி அளவு, 2 டேபிள்ஸ்பூன் ரொம்பவும் புளிக்காத தயிர், இந்த பொருட்களை போட்டு இதை ஒரு பேஸ் பேக் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக்கை முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ள வேண்டும். கழுத்துப் பகுதியிலும் போட்டுக்கொள்ளுங்கள். 15 நிமிடம் முகத்தில் இந்த பேக் அப்படியே இருக்கட்டும். முகத்தில் போட்ட இந்த பேக் நன்றாக காய்ந்து வரும் வரை காத்திருங்கள்.

ஃபேஸ் பேக் நன்றாக காய்ந்த பின்பு இன்னொரு பாதி அளவு இருக்கக்கூடிய தக்காளியை எடுத்து உங்களுடைய முகத்தில் வைத்து இந்த ஃபேஸ் பேக்கை அப்படியே வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். ஜென்டிலாக 5 லிருந்து 7 நிமிடங்கள் இந்த மசாஜை முகத்திற்கு கொடுக்கலாம். அதன் பின்பு சுத்தமான தண்ணீரில் உங்களுடைய முகத்தை கழுவி விடுங்கள். குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் இன்னும் நல்லது.

- Advertisement -

அதன்பின்பு ரோஸ் வாட்டர் இருந்தால் அதை வைத்து உங்களுடைய முகத்தை நன்றாக துடைத்து விடலாம். அப்படி இல்லையென்றால் நல்ல மாய்ஸ்சுரைசர் அப்ளை செய்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் அலோ வேரா ஜெல்லில் வீட்டிலேயே ஐஸ்க்யூப் தயாரித்து அந்த ஐஸ் கியூபை வைத்து உங்களுடைய முகத்தை மசாஜ் செய்து கொடுக்கலாம்.

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்தி வர முகத்தில் இருக்கக்கூடிய எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும். முகம் வெள்ளையாக மாறும். முகத்தில் இருக்கும் குழிகள் கூட படிப்படியாக குறையத் தொடங்கும். சன்டேன் முகத்தில் இருக்கவே இருக்காது. இத்தனை விதமான பயன்களையும் கொடுக்கக்கூடிய ஃபேஸ்பேக் தான் இது. பக்க விளைவுகள் வருவதற்கும் வாய்ப்பே கிடையாது‌. ஒரு சிலர் சருமத்திற்கு தயிர் செட்டாகாது. அப்படிப்பட்டவர்கள் தயிருக்கு பதிலாக ரோஸ் வாட்டர் ஊற்றி கூட இந்த பேக்கை அரைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருக்கா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -