பிப்ரவரி மாத மைத்ரேய முகூர்த்தம்: நாளை வரக்கூடிய அதி அற்புதம் வாய்ந்த இந்த நேரத்தை யாரும் தவறவிடாதீர்கள். கடனை அடைக்க இதைவிட வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கவே கிடைக்காது.

kadan
- Advertisement -

தீராத கடன் பிரச்சனை சீக்கிரம் தீர வேண்டும் என்றால் உங்களுடைய கடனை, இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும். இந்த பிப்ரவரி மாதம் மைத்ரேய முகூர்த்தம் வரக்கூடிய தேதியும் நேரமும் என்ன என்பதைப் பற்றிய தகவலையும், அந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் நாம் என்ன பரிகாரத்தை செய்தால், நம்முடைய கடன் பிரச்சனை படிப்படியாகக் குறையும் என்பதை பற்றிய விரிவான தகவலை தான் இந்த பதிவு மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த பிப்ரவரி மாதத்தில் நமக்கு இரண்டு மைத்ரேய முகூர்த்தங்கள் வரவிருக்கின்றது. அது எந்தெந்த தேதியில் எந்த நேரத்தில் வருகிறது என்று முதலில் பார்த்து விடுவோம். பிப்ரவரி மாதத்திற்கான மைத்ரேய முகூர்த்தம் உங்களுக்காக இதோ.

- Advertisement -

பிப்ரவரி 7, திங்கட்கிழமை, 10:19 AM to 12:07 PM
பிப்ரவரி 22, புதன்கிழமை, 11:38 PM to 1:54 AM (23rd Feb 2022)

இதில் நாளைய தினம் திங்கட்கிழமை வரக்கூடிய மைத்ரேய முகூர்த்தை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். புதன்கிழமை அன்று வரக்கூடிய மைத்ரேய முகூர்த்தமும் பரிகாரத்திற்கு உகந்த நாள் தான். இருப்பினும் அது நடு ராத்திரியில் வருவதால் யாராலும் பரிகாரம் செய்வதற்கு உகந்த நேரமாக இருக்காது அல்லவா அதற்காகத்தான்.

- Advertisement -

நாளைய தினம் சரியாக காலை 11.00 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்தால் நமக்கு உண்டான பலன் என்பது முழுமையாக கிடைக்கும். அதாவது மைத்ரேய முகூர்த்ததின் நடு நேரம் 11.00 மணி என்று இதனை வைத்துக் கொள்வோம். உங்களுக்கு எந்த கடன் இருந்தாலும் சரி, பணம் வாங்கி அதை கடனாக திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்றாலும் சரி, நகையை அடமானம் வைத்து விட்டு அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் நகையை மீட்க முடியாமல் இருந்தாலும் சரி, வீட்டில் லோன், வண்டி லோன், இப்படி எந்த லோன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் கடன் பிரச்சனையில் சிக்கி இருந்தாலும் சரி, அந்தக் கடனை சுலபமாக அடைப்பதற்கு இது ஒரு சிறந்த பரிகாரம்.

உங்களால் முடிந்தால் நாளையதினம் வரக்கூடிய மைத்ரேய முகூர்த்த நேரத்தில், யாரிடம் கடன் வாங்கினீர்களோ, அவர்களுக்கு கடன் தொகையை ஒரு பாதியாவது உங்கள் கையால் திருப்பிக் கொடுக்கலாம். குறிப்பிட்ட நபரின் வங்கிக் கணக்கில் கடன் தொகையை செலுத்தலாம். கூகுள் பே பண்ணலாம். உங்களால் எப்படி முடிகின்றதோ ஒரு சிறிய தொகையை கொடுக்க முடியும் என்றால் கொடுத்து விடுங்கள்.

- Advertisement -

ஒருவேளை உங்களால் பணத்தை அந்த நபருக்கு கொடுக்க முடியாத சூழ்நிலை என்றால், கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை கொடுத்தால் திருப்பி வாங்கி கொள்ளமாட்டார்கள். எனக்கு லட்சக் கணக்கில் கடன் உள்ளது எனும் பட்சத்தில், இந்த பரிகாரம் உங்களுக்காக. நாளைய தினம் 11 மணிக்கு கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். ஒரு பிரியாணி இலையை எடுத்து கொள்ளவேண்டும். அந்த பிரியாணி இலையில் நீலநிற பேனாவை கொண்டு என்னுடைய ‘கடன் அடைய வேண்டும்’. ஒரு வரியில் எழுதிக்கொள்ளுங்கள்.

ஒரு சின்ன கவரை எடுத்துக் கொள்ளுங்கள். மொய் கவர் போல இருந்தால் கூட போதும். அந்த கவருக்குள் 100 ரூபாயை வைத்து, இந்த பிரியாணி இலையை வைத்து கூடவே ஒரு பச்சைக் கற்பூரத்தையும் வைத்து மடித்து எடுத்து வைத்துவிடுங்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா. நீங்கள் கடன் வாங்கியவருக்கு கடன் தொகையை இந்த நேரத்தில் திருப்பிக் கொடுத்து விட்டதாக அர்த்தம்.

நீங்கள் தயார் செய்த இந்த கவரை பத்திரமாக வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் எடுத்து வைத்துவிடுங்கள். அடுத்த மாதம் மைத்ரேய முகூர்த்தம் வரும் போது அந்தக் கவருக்கு உள்ளே இருக்கும் பழைய பிரியாணி இலையை மட்டும் எடுத்து நெருப்பில் பொசுக்கிய விட்டு, அந்த சாம்பலை தண்ணீரில் கரைத்து கீழே கொட்டி விடுங்கள்.

மீண்டும் புதிதாக வரக்கூடிய மைத்திரேய முகூர்த்தத்தில் புது பிரியாணி இலையை எடுத்து கடன் தீர வேண்டும் என்று எழுதி, அதே கவரில் வைத்து மற்றொரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து அந்த கவரில் சேர்த்து வரலாம். (100 ரூபாய் என்பது ஒரு எடுத்துக்காட்டாக தான் சொல்லப்பட்டுள்ளது. 500 ரூபாய், 2000 ரூபாய், வெறும் 10 ரூபாயை கூட வைக்கலாம். அது நம் விருப்பம் தான்.)

நீங்கள் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், ஒரு பிரியாணி இலை, ஒரு கவர், உங்கள் கையில் இருந்தால் போதும். நீங்கள் உட்கார்ந்து இருக்கும் இடத்திலிருந்தே பிரியாணி இலையில் பேனாவை கொண்டு கடன் அடைய வேண்டும் என்று எழுதி, அந்த கவரில் வைத்து, 100 ரூபாய் பணத்தை எடுத்து அந்த கவரில் போட்டு அப்படியே ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டிற்கு வந்தவுடன் அந்த கவரை எடுத்து வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான். பரிகாரம் முடிந்தது. இதைத்தொடர்ந்து நம்பிக்கையோடு செய்து வந்தால் நிச்சயமாக உங்களுடைய கடன் படிப்படியாக குறையத் தொடங்கும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -