பி.பி.எல் போட்டிகள் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன. அதில் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் என அனைத்து உலக கிரிக்கட் வீரர்கள் என அனைவரும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் பங்கேற்ற ஆரோன் பின்ச் எதிர்பாராத விதமாக பந்துவீச்சாளர் கையில் பட்டு ரன் அவுட் ஆனார். அதன் விரக்தியில் ஓய்வு அறையை நோக்கி சென்ற அவர் ஓங்சி அடித்த அடியில் அங்கிருந்த சேர் பறந்தது.
அவரின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விடியோவாக வெளியான இவரின் செயல் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ இணைப்பு :
பி.பி.எல் போட்டிகளில் இவ்வாறு நடைபெறும் சின்ன சின்ன செயல்கள் அனைத்தும் இணையத்தில் ஹிட் அடிக்க தவறியதில்லை. இந்த வகையில் இந்த வீடியோவும் ஹிட் அடித்துள்ளது.
இதையும் படிக்கலாமே :
புல்வாமா தாக்குதல் : சேவாக்கை தொடர்ந்து கல்விக்காக இதனை நிச்சயம் அளிப்பேன் என்று முழுச்செலவினையும் ஏற்றுக்கொண்ட – கம்பீர்
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்