கணவன் மனைவிக்குள் சண்டை வருகிறதா? ரெண்டு பேரும் சேர்ந்து மீனுக்கு இத செய்யுங்க! அப்புறம் நோ சண்டை, நோ சச்சரவு.

fight-fish-food
- Advertisement -

கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்தால் எதற்காக சண்டை வருகிறது? என்பதைத்தான் முதலில் பார்க்க வேண்டும். உப்பு சப்பில்லாத விஷயத்துக்கெல்லாம் கோவப்படுவதால் உண்டாக கூடிய இந்த குட்டி குட்டி சண்டைகளை நாளுக்கு நாள் ஊதி பெரிதாக்கி பெரிய பிரச்சினையாக மாற்றி விடுகிறார்கள். இப்படி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் ஜோடிகளை சேர்த்து வைக்க ரெண்டு பேரையும் சேர்ந்து மீனுக்கு இதை பண்ண சொல்லுங்க! எதை பண்ணனும்னு இந்த பதிவை தொடர்ந்து படிங்க தெரிஞ்சுக்கலாம்.

எங்களுக்குள்ள பெருசா எந்த சண்டையும் வராது. வருகிற சண்டை எல்லாம் முன் கோபம், அவசரம் அல்லது கருத்து வேறுபாடுகளால் மட்டுமே வருகிறது என்பவர்கள், சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் உண்டு. பெரிதாக எந்த ஒரு காரணமும் இல்லாமல், சிறிய விஷயங்களுக்காக சண்டை போட்டுக் கொண்டு உங்களுடைய நிம்மதியை இழக்க வேண்டுமா? யாராவது ஒருவர் அமைதியாக செல்லலாமே? அவள் தான் செல்ல வேண்டும் என்று இவரும், இவர் தான் செல்ல வேண்டும் என்று அவளும் நினைத்தால் செய்வதற்கு ஒன்றுமில்லை.

- Advertisement -

அமைதியின்மை, நிம்மதி இன்மை, குடும்பம், குழந்தைகளுடைய மன ஆரோக்கியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு ஐந்து நிமிடம் அமைதியாக இருந்தால் அந்த சண்டை அப்படியே அமைதியாகிவிடும். ஐந்து நிமிட கோபம் 5 மணி நேரமோ அல்லது ஐந்து நாட்களோ நம்முடைய நிம்மதியை பறித்துக் கொள்கின்றன. எனவே இந்த ஐந்து நிமிடத்தை கண்களை மூடி நீருக்குள்ளே கண்ணீரை விடும் மீனை நினையுங்கள். மீனை நினைத்தால் வரக்கூடிய கோபம் பின் வாங்கி விடுமாம்.

அது போல் இதுபோல அடிக்கடி சண்டை வரக்கூடாது, இனி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இருவரும் சேர்ந்து உங்கள் வீட்டில் மீன் தொட்டி இருந்தால் அதற்கு தீனி போடுங்கள். மீன் தொட்டிக்கு தீனி போட்டா சண்டை வராதா? என்று குதர்க்கமாக கேள்வி கேட்கக் கூடாது. இருவருடைய கைகளாலும் ஒன்றாக சேர்ந்து மீனுக்கு இறை கொடுத்தால் தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

சரி, உங்களிடம் அப்படி மீன் தொட்டி இல்லை என்றால், கோவில் குளங்களில் இருக்கக்கூடிய மீனுக்கு பொரி வாங்கி கொடுங்கள் அல்லது அதற்கு உரிய தீனியை காசு கொடுத்து வாங்கி தம்பதிகளாக இருவரும் சேர்ந்து போட்டு பாருங்கள், அதன் பிறகு உங்களுக்குள் சண்டை வருவது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிடும். இது போல தொடர்ந்து வாரம் ஒருமுறையாவது செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை செய்ய முடியாவிட்டால், மாதம் ஒருமுறை செய்யுங்கள் போதும்.

மீனுக்கு தம்பதிகளை சேர்த்து வைக்கும் சக்தி உண்டு. இந்த மீனுக்கு இறையை கொடுத்தால் மீன் உங்களை வாழ்த்துமாம். மீனுடைய வாழ்த்தை பெற்றவர்கள் எப்பொழுதும் அன்னோன்யமாக, நெருக்கமாக, மகிழ்ச்சியாக இருப்பார்களாம். மீன் தொட்டி வாங்கி வைத்தால் வீட்டில் நிறையவே நன்மைகள் நடக்கும். மீன் வளர்ப்பவர்கள் இல்லத்தில் துர் சம்பவங்கள் நடப்பதில்லை. பெரிய பெரிய மீன் தொட்டிகள் வாங்க முடியாவிட்டாலும், சிறிய தொட்டிகளில் அழகிய வண்ண மீன்களை வாங்கி வையுங்கள். நீங்கள் எப்பொழுதாவது இறுக்கமாக உணர்ந்தால், உடனே அந்த மீன்களுக்கு தீனி போட்டு அது சாப்பிடுவதையும், விளையாடுவதையும் பார்த்து மகிழுங்கள். உங்களுக்கு இருக்கும் கவலை எல்லாம் காணாமலேயே போய்விடும், அதிசயத்தை பாருங்கள்.

- Advertisement -