இந்த எண்ணெயை மட்டும் தலையில் தேய்த்து வந்தால், காடு போல முடி வளர தொடங்கும். முடி வளர்ச்சியை உங்களால் கட்டுப்படுத்தவே முடியாது.

hair27
- Advertisement -

கரு கருவென அடர்த்தியாக முடி வளர வேண்டும். வளர்ந்த முடியை இரண்டு கைகொண்டு பிடிக்கக் கூட முடியாத அளவுக்கு அடர்த்தி தேவை என்று எல்லோருக்கும் நிச்சயம் ஆசை இருக்கும். அப்படிப்பட்ட முடியை பின்னி போட்டால் தான் பெண்களுக்கு ஒரு அழகு. அதாவது கருகரு கூந்தல். இப்போது யாருக்கும் இல்லை. எல்லோருக்கும் இருப்பது கொஞ்சமாக முடி. கருகரு கூந்தலை பெற எளிமையான முறையில் வீட்டிலேயே ஆளி விதை எண்ணெய் தயார் செய்வது எப்படி என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

கரு கரு கூந்தலை பெற ஆளி விதை எண்ணெய் தயார் செய்யும் முறை:
இதற்கு கால் கப் அளவு சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெயை தயாராக எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு டேபிள் ஸ்பூன் ஆளி விதை. ஐந்திலிருந்து ஆறு பாதாம். ஒரு மிக்ஸி ஜாரில் ஆளி விதையையும், பாதாம் பருப்பையும், போட்டு கொரகொரப்பாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்து லேசாக சூடு செய்யவும்.

- Advertisement -

எண்ணெய் சூடாகி வந்தவுடன், அரைத்து வைத்திருக்கும் ஆளி விதையையும் பாதாம் பருப்பையும் அந்த எண்ணெயில் சேர்த்து சூடு செய்யவும். அடுப்பு சிம்மிலயே இருக்கட்டும். எண்ணெய் நன்றாக சூடாகி அந்த பருப்பு வகையில் இருக்கும் சத்துக்கள் எல்லாம் எண்ணெயில் இறங்கும். மொத்தமாக ஐந்து நிமிடம் எண்ணெயை சூடு செய்தால் போதும். அடுப்பை அணைத்து விடுங்கள். எண்ணெய்க்கு உள்ளே இருக்கும் பொருட்கள் கருதக்கூடாது ஜாக்கிரதை.

இந்த எண்ணெய் நன்றாக ஆரிய பிறகு ஒரு சல்லடையில் ஊற்றி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஒரு காட்டன் துணியில் ஊற்றியும் வடிகட்டிக் கொள்ளலாம். பிறகு இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்யவும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த எண்ணெயை வேர்க்கால்கள் முழுவதும் படும்படி தடவி மசாஜ் செய்து 2 மணி நேரம் கழித்து மைல்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த எண்ணெயை ஒரு காட்டன் பஞ்சில் தொட்டு முடியை பாகம் பாகங்களாக பிரித்து கவனம் செலுத்தி வேர் கால்களில் அப்ளை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு நுனி முடி வரை இந்த எண்ணெயை தேய்க்கும் போது முடி ஷைனிங் ஆகவும் அடர்த்தியாகவும் வலுப்பெறும். அது மட்டும் அல்லாமல் முடியும் வெடிப்பு வருவது தடுக்கப்படும்.

இதையும் படிக்கலாமே: பிரசவத்துக்கு பிறகு கூட பெண்களுக்கு முடி உதிராமல் இருக்க இப்படிப்பட்ட ஐடியாவை தான் அவர்கள் பின்பற்ற வேண்டும். பிறகு வாழ்நாள் முழுவதும் முடி கொட்டும் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

உடனடியாக ஒரே ஒருமுறை இந்த எண்ணெயை தலையில் அப்ளை செய்யும்போதே முடி உதிர்வில் உங்களால் வித்தியாசத்தை பார்க்க முடியும். கருகரு முடி வளர்ச்சிக்கு இந்த எளிமையான அழகு குறிப்பு படிச்சிருந்தா முயற்சி செய்து பார்க்கவும்.

- Advertisement -