வெள்ளிக்கிழமையில் இதை மட்டும் செய்தால் பண மழை பொழியுமாம்! ஆனா இதை மட்டும் தெரியாம கூட செஞ்சிடாதீங்க.

cash-mahalakshmi
- Advertisement -

ஒவ்வொரு நாட்களும், ஒவ்வொரு விதமான கிரகங்களுக்கு உரியதாக இருக்கிறது. ஒரு மனிதனின் வாழ்க்கையை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கும் நவகிரகங்களும் இந்த கிழமைகளுக்குள் அடங்கியுள்ளது. ஒவ்வொரு கிழமைகள் வரும் பொழுதும் அந்தந்த கிரகத்திற்குரிய பொருட்களை வாங்குவதும், வாங்க கூடாததும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிட்டு சிலவற்றை கூறுகிறது. அந்த வகையில் வெள்ளிக்கிழமையில் என்ன விஷயத்தை செய்ய வேண்டும்? எந்த விஷயத்தை செய்யவே கூடாது? என்பதை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக வெள்ளிக்கிழமையில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடத்தலாம். வெள்ளிக் கிழமையில் நல்ல நேரத்தில் செய்யும் எந்த ஒரு சுப நிகழ்ச்சியும் நல்ல பலன்களை கொடுக்கும். நாள் பார்க்காமல், நட்சத்திர பார்க்காமல் செய்பவர்கள் வெள்ளிக்கிழமையில் எந்த ஒரு விஷயத்திலும் அஞ்சாமல் செய்யலாம் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு மிகுந்த சிறப்பை பெற்றுள்ள இந்த வெள்ளிக் கிழமையில் கண்டிப்பாக வீட்டில் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றாத வீடுகளில் வறுமை தாண்டவம் ஆடும். எவ்வளவு வேலைகள் இருந்தாலும், ஒரு விளக்கையாவது ஏற்றி வைத்து விடுங்கள். பின்னர் வெள்ளிக்கிழமையில் கடன் வாங்குவது நல்லது. ஆனால் கடனை கொடுப்பது தான் ரொம்பவும் தவறான விஷயம் ஆகும். கையில் இருக்கும் பணத்தை வட்டிக்கு கடனாக வெள்ளிக்கிழமையில் நீங்கள் கொடுத்தால் பெரும் பாவம் வந்து சேரும். மகாலட்சுமி வம்சம் நிறைந்த இந்த வெள்ளிக்கிழமையில் ஒருவருடைய வறுமையை பயன்படுத்தி வட்டிக்காக பணத்தை அதாவது மகாலட்சுமியை நீங்கள் இன்னொருவருக்கு கொடுத்தால் அது உங்களுக்கு புண்ணியத்தை சேர்க்காது பாவத்தை மட்டுமே சேர்க்கும். அவசரத்திற்கு உதவி செய்வது வேறு ஆனால் இது போல வட்டிக்கு பணம் கொடுப்பது பாவம் தான்.

திடீரென அவசரம் என்ன செய்வது? பணத்தை கொடுக்கக் கூடாதா? என்று கேட்பார்கள். வெள்ளிக்கிழமையில் பணத்தை ரொக்கமாக நேரடியாக உங்கள் கைகளால் கொடுக்கக் கூடாது, தவிர ஆத்திர அவசரத்திற்கும், உயிர் போகும் விஷயத்திற்கும் நீங்கள் தாராளமாக உங்கள் வங்கி கணக்கு அல்லது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றின் மூலம் பண பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள். அதில் தவறு இல்லை! வெள்ளிக்கிழமையில் பணம் கொடுக்கக் கூடாது என்பதற்காக இது போன்ற அவசரத்தில் பணத்தை கொடுக்காமல் இருந்து விடாதீர்கள். இதுவும் உங்களுக்கு பாவத்தை தான் கொண்டு வந்து சேர்க்கும்.

- Advertisement -

விலை உயர்ந்த பொருட்கள், வாகனங்கள், நகைகள், ஆபரணங்கள், ரத்தினங்கள், சொத்துக்கள் போன்றவற்றை வெள்ளிக்கிழமையில் தாராளமாக வாங்கலாம். இதனால் மென்மேலும் உங்களுக்கு பணவரவு மற்றும் செல்வங்கள் சேரும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. மேலும் வெள்ளிக்கிழமையில் பணத்தை சேமித்து வைக்கவும், உகந்த நாளாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியின் பக்கத்தில் ஒரு உண்டியல் வைத்து சேகரித்து பாருங்கள், மடமடவென சேர ஆரம்பிக்கும். உங்கள் வீட்டில் எங்கிருந்து தான் பணம் வரும் என்று தெரியாது வருமானம் பெருகி பணம் வரவும் அதிகரிக்க துவங்கும். அந்த அளவிற்கு வெள்ளிக்கிழமையில் பணம் சேமிப்பு என்பது விசேஷமானது.

மேலும் வெள்ளிக்கிழமையில் வங்கி கணக்கு துவங்கலாம். புதிதாக வங்கி கணக்கு துவங்கி அதிலும் நீங்கள் பணத்தை போட்டு வைப்பது சுப செலவுகள் வருவதற்கு வாய்ப்புகளை கடுக்கும். மேலும் அன்றைய நாளில் பணத்தினை வீண்விரயம் செய்யக்கூடாது. தேவையற்ற பொருட்களை வாங்குவது, தேவையற்ற விஷயங்களுக்காக செலவு செய்வது, போதை பொருட்கள் வாங்க பணத்தை பயன்படுத்துவது போன்றவற்றை செய்தால் மகாலட்சுமி நீங்கி உங்களை மூதேவி தொற்றிக் கொள்வாள் என்பதிலும் சந்தேகம் இல்லை.

- Advertisement -