உச்சி முதல் பாதம் வரை அழகாக வல்லாரை

beauty tips
- Advertisement -

இன்றைய அதிநவீன காலத்தில் எல்லாமே வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் நாம் எதையும் என்று நிதானித்து செய்ய கால அவகாசம் கிடையாது. குறிப்பாக நம்முடைய ஆரோக்கியம் முதற்கொண்டு அழகு வரை கவனத்தில் கொள்ள கூட சரியான நேரம் கிடைப்பதில்லை. இதனால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றோம்.

இந்தப் பிரச்சினைகளை சரி செய்ய கிடைக்கும் கிரீம்கள் அனைத்தையும் பயன்படுத்துகிறோம். அதிலும் அழகிற்கென பயன்படுத்தும் கிரீம்களின் எண்ணிக்கையோ கணக்கில் அடங்காது. தலைக்கு ஒன்று முகத்திற்கு ஒன்று கை கால்களுக்கு ஒன்று என விதவிதமாக பயன்படுத்துகிறார்கள்.

- Advertisement -

இது பிரச்சனைகளை நிரந்தரமாக சரி செய்யாது என்பதுடன் பக்க விளைவுகளை கட்டாயமாக ஏற்படுத்தும். நம்முடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் எளிய ஒரே தீர்வை பற்றி தான் அழகு குறிப்பு குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

உச்சி முதல் பாதம் வரை அழகாக வல்லாரை பேஸ்ட்

நம்முடைய முழு உடலையும் பாதுகாக்க இயற்கை நமக்கு பல வரப்பிரசாதங்களை தந்திருக்கிறது. அதை நாம் சரியான முறையில் பின்பற்றுவதும் பயன்படுத்துவதும் கிடையாது. நல்ல உணவு பழக்கங்களை சூழ்நிலை இவற்றுடன் சேர்த்து இயற்கையான முறைகளை பின்பற்றும் போது நிச்சயம் ஆரோக்கியமாகவும் அழகுடனும் இருக்கலாம்.

- Advertisement -

இதற்கு வல்லாரைக் கீரையை தான் பயன்படுத்த போகிறோம். வல்லாரைக் கீரை பொறுத்த வரையில் ஞாபகசக்தியை அதிகரிக்க கூடியது என்று தான் பலருக்கும் தெரியும். ஆனால் நம் முழு உடலையும் ஆரோக்கியமாக வைக்க வல்லாரை ஒரு சிறந்த மருந்து.

இந்த பேஸ்ட் தயாரிக்க ஒரு கைப்பிடி அளவு வல்லாரைக்கீரை எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் நாட்டு மருந்து கடையில் வல்லாரை பொடி கிடைக்கும் அதை வாங்கிக் கொஞ்சம் பன்னீர் ஊற்றி பேஸ்ட் ஆக குழைத்துக் கொள்ளுங்கள்.ஒரு வேளை இலைகளாகவே கிடைத்தது என்றால் அதை சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை முகத்திற்கு போடுவதாக இருந்தால் அதற்கு முன் முகத்தை நன்றாக சுத்தம் செய்து விடுங்கள். முகத்தில் இந்த பேஸ்ட்டை போட்டு பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை அப்படியே விட்டுவிட்டு முகத்தை சுத்தம் செய்தால் போதும். முகம் பளிச்சென்று மாறும். இதே போல் முழு உடலுக்கும் இதை பயன்படுத்தலாம்.

தலை முடிக்கு பயன்படுத்தும் பொழுது தலையில் எண்ணெய் வைத்திருக்கக் கூடாது. தலைக்கு குளித்து சுத்தம் செய்த தலையில் இந்த பேஸ்ட்டை வைப்பது நல்லது. இந்த பேஸ்டை தலையில் அப்ளை செய்து அரை மணி நேரம் வரை அப்படியே விட்டுவிட்டு அதன் பிறகு தலைமுடியை எந்தவித ஷாம்பு கெமிக்கல் கலந்த பொருட்கள் சேர்க்காமல் அலசி விடுங்கள்.

வாரத்திற்கு இரண்டு முறை இது போல் முகம் உடல் தலை என அனைத்திலும் இந்த வல்லாரை பேஸ்ட்டை தேய்த்து குளிக்கும் பொழுது முழு உடலும் பொலிவு பெறும். முகத்தில் ஏற்படும் கருமைகள் நீங்கும் முகப்பருக்கள் முகப்பரு தழும்புகள் நீங்கும்.

தலைமுடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும். அதுமட்டுமின்றி முடி உதிர்வு, பொடுகு என அனைத்து விதமான பிரச்சனைகளும் சரியாகும். இதில் எந்த விதமான கெமிக்கலும் கலக்கவில்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: முடி வளர வெற்றிலை ஹேர் மாஸ்க்

உடனே சரியாக வேண்டும் என்று வேண்டும் என்று அதிகப்படியான கெமிக்கலை பயன்படுத்துவதால் முடியவில்லை ஆரோக்கியத்திற்கு நிச்சயம் கேடு விளைவிக்கும். ஆகையால் இதன் மூலம் எந்த விதமான பக்க விளைவும் இல்லாமல் இயற்கையான முறையில் அழகையும் ஆரோக்கியத்தையும் பெற முடியும்.

- Advertisement -