புத்தாண்டில் கஜலட்சுமி யோகம் பெறும் ராசிகள்

mahalakshmi jathagam
- Advertisement -

ஜோதிடத்தில் கஜலட்சுமி ராஜயோகம் மிகவும் மங்களகரமான அதே நேரத்தில் அதிர்ஷ்டகரமான யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகமானது 12 ராசிக்காரர்களுக்கும் மாறி மாறி வரும். வரக்கூடிய 2024 ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் அமையப் போகிறது இதன் மூலம் அவர்கள் நல்ல பணவரவை பெறப் போகிறார்கள். யார் அந்த ராசிக்காரர்கள் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக கருதப்படுவது வியாழன். இந்த கிரகமானது டிசம்பர் 31 அன்று நேரடியாக தன்னுடைய பெயர்ச்சியை தொடங்க இருக்கிறது. இதன் மூலம் இது வரை பின்னோக்கி இருந்த இந்த கிரகமானது முன்னோக்கி நகர்வதாக சொல்லப்படுகிறது. இப்படி நேரடியாக திரும்புவதால் கஜலட்சுமி யோகம் உருவாகும். இப்போது இந்த யோகத்தினால் அதிர்ஷ்டம் பெறக் கூடிய ராசிகளை பார்க்கலாம்.

- Advertisement -

கடகம்

எதிர்வரும் புத்தாண்டு இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் யோககரமானதாக இருக்கும். கஜலட்சுமி யோகத்தின் பலனாக ஆண்டின் தொடக்கத்தில் எல்லா விதமான வெற்றி வாய்ப்புகளும் பெருகும். வியாழன் இந்த ராசிக்காரர்களுக்கு பத்தாவது வீட்டில் நுழைகிறார். இதன் காரணமாக தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். சுற்றி உள்ளவர்களிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

பல மாதங்களாக இருந்து வந்த பண பிரச்சனை, குடும்பப் பிரச்சனை அனைத்தும் தீரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல சம்பள உயர்வும் பதவி உயர்வு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை தொடங்கும். வருடத்தின் முதலில் நல்ல வேலை வாய்ப்புகள் பெருகும் இந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டு இந்த ஆண்டில் பொருளாதார ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் நல்ல முன்னேற்றத்தை அமைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

சிம்மம்

இந்த ராசிக்காரர்களுக்கு கஜலட்சுமி யோகம் ஒரு வரப்பிரசாதமாகவே அமையப் போகிறது. வியாழன் இவர்களின் ஒன்பதாவது வீட்டை பார்க்கிறார். இதனால் வருமானத்தில் நல்ல உயர்வை காணலாம். இது வரை அடைந்த தோல்விகள் அனைத்தும் வெற்றியாக மாறக் கூடிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். புதிய வியாபாரம் தொழில் தொடங்குபவர்கள் இந்த நேரத்தில் தொடங்கலாம். பொருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் நல்ல முன்னேற்றத்தை காணக் கூடிய காலம்.

தனுசு

இந்த ராசிக்காரர்களுக்கு கூடுதல் பலனை பெறுவார்கள் என்று சொல்லலாம். இவர்களுடைய ராசிக்கான அதிபதியே வியாழன்தான். அவர் சரியான திசையில் பயணம் செய்வது உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். இந்த ஆண்டில் வீடு, கல்வி, தொழில் என அனைத்திலும் நல்ல முன்னேற்றத்தை பெறலாம். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வருமானம் தடையில்லாமல் வந்து கொண்டே இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபமும் உத்தியோகத்தில் நல்ல சம்பள உயர்வும் கிடைக்கும். சீரான நல்ல செல்வ செழிப்புடன் வாழக் கூடிய அருமையான காலம்.

இதையும் படிக்கலாமே: சுக்கிர பகவானால் யோகம் பெரும் லக்னக்காரர்கள்

இந்த பதிவில் உள்ள தகவல்கள் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. இதில் உள்ள கருத்துக்கள் உங்களுக்கு பயன்படுமே ஆனால் பயன்படுத்தி பலன் அடையலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -