இங்கிலாந்து அணி தற்போது மேற்கு இந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று (20-02-19) பார்படாஸில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான கெயில் ஒரு ஆண்டுக்கு பிறகு நேற்றைய போட்டியில் அணிய இணைந்து விளையாடினார்.
அவரின் ஆட்டம் நேற்று தொடக்கத்தில் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும் பிறகு தனது அதிரடி பாணிக்கு இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்தார். நாலாபுறமும் பந்தை சிதறடித்து இவர் ஒருநாள் போட்டிகளில் தனது 24ஆவது சதத்தினை பதிவுசெய்தார். மேலும், 39 ஆவது வயதில் சதமடித்த 3 ஆவது சர்வதேச வீரர் என்ற சாதனையும் படைத்தார்.
இந்த போட்டியில் 129 பந்துகளை சந்தித்த இவர் 135 ரன்களை குவித்தார். இதில் 12 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும். இவரின் ஆட்டத்தினால் அந்த அணி 360 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே :
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்