நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது வங்கதேச அணி. ஆனால், அவர்களின் இந்த முடிவு சோதனையில் முடிந்தது.
ஆம் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 330 ரன்களை குவித்தது. இதனால் 331ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கினை நிர்ணயித்தது. அதனை தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 242 ரன்கள் மட்டுமே குவித்து 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் வங்கதேச அணியின் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய லிட்டன் தாஸ் 4 பந்துகளை சந்தித்து வெறும் 3 ரன்கள் மட்டுமே அடித்தார். இந்த தொடரின் 3 போட்டிகளிலும் ஆடிய இவர் வெறும் 3 ரங்களே குவித்து மோசமான சாதனையை படைத்தார்.
இந்த மோசமான சாதனை இப்போது இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது. உபரிகள் வரும் ரன்கள் கூட இவரால் அடிக்க முடியவில்லையா என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்கலாமே :
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்