தெய்வ வழிபாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் நெய்யினை இவ்வாறு பயன்படுத்திப்பாருங்கள். தீராத நோய்களும் தீரும். சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்.

gee
- Advertisement -

நெய் உலகம் முழுவதுமே உணவுப் பொருட்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதிலும் இந்தியாவில் நெய் பயன்படுத்தப்படாத இடங்கள் என்று எதுவுமே கிடையாது. நாம் சமையலில் நெய்யை சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை கொடுக்கிறது என்பதை அனைவரும் அறிந்திரிக்கிறோம். ஆனால் ஆன்மீக தகவலின்படி நெய்தீபம் ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள் என்னென்ன? என்பதனை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

gee1

நெய்யின் மகிமைகள்:
இந்தியாவில் அதிலும் முக்கியமாக தமிழ்நாட்டில் நமது மரபுகளின் படியே பண்டிகைகளையும், வீட்டில் நடைபெறும் விசேஷங்களையும், தெய்வ வழிபாடுகளையும் முறையாக மேற்கொள்கின்றோம். அவ்வாறு நாம் தெய்வமாக பார்க்கும் பசு தரக்கூடிய பாலில் இருந்து செய்யப்படும் நெய்யினை அமிர்தமாகவே கருதுகின்றோம். இவ்வாறு புனிதமான இந்த நெய் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பது மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் பல பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது.

- Advertisement -

ஆரோக்கியம்:
வீட்டில் எவரேனும் ஆரோக்கியம் இல்லாமல் நோய்வாய் பட்டிருந்தால் அவர்கள் இருக்கும் அறையில் தினமும் மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் ஒரு அகல் விளக்கில் நெய் மற்றும் குங்குமப்பூ சேர்த்து, அதில் பஞ்சு திரியை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு தீபம் ஏற்றும் பொழுது நெய் மற்றும் குங்குமப்பூ சேர்ந்து ஒரு வித தெய்வீக மணத்தைக் கொடுக்கும். இதனால்அந்த அறையின் வளிமண்டலத்தில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அழிந்து அங்கு நேர்மறை ஆற்றல் உண்டாகும். இவ்வாறு நோயாளி இருக்கும் அறையில் தினமும் இந்த நெய் தீபத்தை ஏற்றி வர அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

panjakavya-vilakku0

கணவன் மனைவி ஒற்றுமை:
திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவி இடையே சண்டை வருவது என்பது ஒரு சாதாரண விஷயமாக மாறிவிடுகிறது. ஆனால் இவ்வாறு வரும் சண்டைகளே அவர்கள் நிரந்தரமாக பிரிவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இவ்வாறு கணவன் மனைவி இருவரும் காரணமில்லாமல் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருப்பதற்கு அவர்களுக்கு இருக்கும் கண் திருஷ்டி கூட காரணமாக இருக்கலாம்.

- Advertisement -

இதற்காக வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் பூஜை செய்ய தூபம் போடுவதற்காக நெருப்பை உண்டாக்கும் பொழுது அதில் ஒரு ஸ்பூன் நெய்யை சேர்த்து எரியவிட வேண்டும். இவ்வாறு செய்வதனால் உங்கள் வீடு எப்பொழுதும் தெய்வாம்சம் பொருந்தியதாக இருக்கும். இதனால்தான் எப்பொழுதும் ஹோமங்கள் நடக்கும் பொழுது ஹோமத்தினுள் நெய் சேர்த்து அதனை வேகமாக எரிய விடுவார்கள். அதில் இருந்து வரும் புகை அந்த இடம் முழுவதும் நிறைந்து இருப்பதனால் தெய்வத்தின் அருள் முழுவதுமாக கிடைக்கப் பெறும் என்பது ஐதீகமாகும்.

dhubam

அதேபோல் வீட்டில் தூபம் காட்டிய பிறகு இறுதியாக இருக்கும் கறித்துண்டுகளை எடுத்து வைத்துக்கொண்டு அதில் சிறிதளவு நெய் சேர்த்து குழைத்து நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இதனை எப்போதும் நீங்கள் வெளியில் செல்லும்பொழுது நெற்றியில் வைத்துக் கொண்டு சென்றால் உங்களுக்கு இருக்கும் கண் திருஷ்டிகள் அனைத்தும் அகன்று கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்.

karuppu

இவ்வளவு அற்புதங்கள் நிறைந்துள்ளதால் தான் நெய்யினை எப்பொழுதும் கோவில்களில் யாகம் செய்வதற்கும், இறைவனுக்கு தீபம் ஏற்றுவதற்கும் தவறாமல் பயன்படுத்தி வருகின்றார்கள். இதேபோல் நீங்களும் உங்கள் வீட்டில் நெய்யைப் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெற வாழ்த்தி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கின்றோம்.

- Advertisement -