குரு ஆதித்ய ராஜயோகத்தல் அதிஷ்டம் பெற போகும் ராசிகள்

guru athithiya raja yogam
- Advertisement -

நாளைய தினம் சித்திரை ஒன்றாம் தேதி குரோதி தமிழ் வருடம் மிக சிறப்பாக பிறக்க உள்ளது. இந்த தமிழ் வருடத்தின் முதல் மாதமானது சில ராசிகளுக்கு சிறப்பு வாய்ந்த மாதமாக அமையப் போகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சியும் அனைத்து ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் மன்னனான சூரிய பகவான் ஏப்ரல் 13 ஆம் தேதி மேஷ ராசியில் பயிற்சியாகி உள்ளார்.

ஏற்கனவே அந்த ராசியில் குரு பகவான் இருக்கிறார். இதனால் குரு ராஜ ஆதித்ய யோகம் உருவாக உள்ளது. ஜோதிடத்தில் இது மிகவும் மங்களகரமானதாக கணிக்கப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் இந்த ராஜ யோகத்தால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட த்தை அள்ளி செல்ல போகிறார்கள். அவர்கள் யார் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

குரு ஆதித்ய ராஜ யோகத்தால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

மேஷ ராசி

இந்த ராசியில் வியாழன் குருவின் சேர்க்கை இருப்பதால் இவர்கள் அதீத பலனை பெற போகிறார்கள். மனதளவில் மிகவும் வலிமையானவர்களாக உணர்வார்கள். இவர்களின் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பல நல்ல வாய்ப்புகளை பெறுவார்கள். மாணவர்களுக்கு இது சாதகமான காலம். குடும்பத்தில் இருந்து சண்டை சச்சரவுகள் நீங்கும். கூட்டுத் தொழில் நல்ல முன்னேற்றம் அடையும். தடைப்பட்ட காரியங்கள் எல்லாம் சிறப்பாக நடக்கும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை பெறலாம்.

ரிஷப ராசி

குரு ஆதித்ய ராஜ யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் குத்தாட்டம் போடப் போகிறார்கள் என்றே சொல்லலாம். எதிரிகளின் தொல்லை, நோய், கடன் என அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவார்கள். குடும்பத்தலைவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். வேலை வாய்ப்புகள் பெரிதும் அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் ஆடம்பரப் பொருட்கள் வாங்க கூடிய யோகங்கள் உருவாகும். ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

- Advertisement -

மிதுன ராசி

இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் மிதுன ராசிக்காரர்களுக்கும் சாதகமான சூழ்நிலையை உள்ளது. உடன் பிறந்தவர்கள் நண்பர்கள் குடும்பத்தாருடன் இணக்கமாக இருப்பீர்கள். கல்வி துறைகளில் உள்ளவர்களுக்கு நல்ல செய்திகள் வாய்ப்புகள் பெருகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் அதில் முன்னேற்றத்தை அடையலாம். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு ஆதாயங்கள் பெருகும். புதிய வேலை வாய்ப்புகள் தொடங்குவதற்கான நல்ல காலம் இது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும். பொருளாதார நிலையில் பல மடங்கு முன்னேற்றத்தை பெறலாம்.

கடக ராசி

குரு ஆதித்ய ராஜ யோகத்தை பண விஷயத்தில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். குடும்ப சூழ்நிலைகள் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமையும். வீடு, மனை, வாகனம் வாங்கக் கூடிய யோகம் அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு ஏற்படும். வெளியூர் செல்லக் கூடிய யோகங்கள் உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் மட்டும் சற்று கவனமாக இருங்கள்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கும் இது அதிர்ஷ்டமான காலக்கட்டம் தான். அரசியல் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். சமூக அந்தஸ்து அதிகரிக்கும். வேலையில் பதவி, உயர்வு, சம்பள உயர்வுடன் என அதிர்ஷ்டங்கள் உங்களை தேடி வந்து கொண்டே இருக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல சாதகமான சூழ்நிலை அமையும் வருமானம் பல மடங்கு பெருகும்.

இதையும் படிக்கலாமே: குருவால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிக்காரர்கள்

ஜோதிடம் குறித்த இந்த பதிவில் உள்ள தகவல்கள் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் படி தொகுக்கப்பட்ட வையே. இது அவரவர் கிரத சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறுதலுக்கு உட்பட்டது தான் என்ற இந்த தகவலை கருத்தில் கொண்டு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -