வேலை கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்

manthiram job
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் எல்லோருக்கும் இருக்கக் கூடிய மிகப் பெரிய பிரச்சனை என்றால் அது வேலை தான். ஏனெனில் ஒருவருடைய வாழ்க்கை முறை அமைவது அவருடைய வேலையும் வருமானத்தையும் பொறுத்து தான். இன்று பல்லாயிரம் கணக்கானோர் படித்து முடித்து வேலையில்லாமல் துன்பப்படுகிறார்கள். அது மட்டும் இன்றி பலரும் பிடித்த வேலையை செய்ய முடியாமல் கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

புதிதாக வேலை தேடுபவர்களும் ஏற்கனவே வேலையில் இருந்து வேறு வேலை தேடுபவர்களும் இந்த ஒரு மந்திரத்தை சொல்லும் பொழுது நிச்சயம் அதற்கான வாய்ப்புகள் தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வேலை கிடைக்க மந்திரம்

யாருக்கு தான் மனதிற்கு பிடித்த வேலை கைநிறைய சம்பளத்துடன் கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்காது. எந்த ஒரு ஆசையும் இல்லாத மனிதர்கள் கூட வேலை கிடைக்க வேண்டும். அதுவும் நல்ல சம்பளத்துடன் நிறைவான வேலை கிடைக்க வேண்டும் என்பது இல்லாமல் இருக்காது. ஆனால் அது தான் இன்றைய காலக்கட்டத்தில் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது.

அப்படியான இந்த சூழ்நிலையில் இந்த ஒரு மந்திரத்தை நாம் தினமும் உச்சரித்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு நம்மை தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய வழிபாட்டு முறைகளிலும் கூட மந்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஏனெனில் நாம் என்ன நினைக்கிறோமோ அதை மந்திரங்களின் மூலம் கடவுளுக்கு தெரிவிக்கும் போது அதற்கான பலன் நிச்சயம் விரைவில் கிடைக்கும் என்று நம்பப்படுவதால் தான்.

- Advertisement -

அப்படியான ஒரு மந்திரத்தை தான் இப்பொழுது நீங்கள் தெரிந்து கொள்ள போகிறீர்கள். இந்த ஒரு மந்திரத்தை சொல்ல நீங்கள் நாள், நேரம் எதையும் பார்க்காமல் நினைத்த நேரத்தில் சொல்லலாம்.

அம்பிகா ஆனந்தினி தன
அஸ்வரூத அபர்ஜிதா

- Advertisement -

இந்த மந்திரத்தை சொல்வதற்கு என ஒரு முறை உள்ளது. ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை உங்களுடைய இடது கையில் வைத்துக் கொண்டு வலது கையால் மூடிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த மந்திரத்தை 21 முறை சொல்ல வேண்டும் அதற்கு மேலும் சொல்லலாம். அது உங்கள் விருப்பம் ஆனால் குறைந்தது 21 முறை சொல்ல வேண்டும்

அதன் பிறகு இந்த தண்ணீரை நீங்கள் அருந்தி விட வேண்டும். இதை யாருக்கு வேலை வேண்டுமோ அவர்கள் தான் செய்ய வேண்டும். மற்றவர்களுக்காக இது போல செய்யும் பொழுது அதற்கான பலன் நிச்சயம் குறைவாகத் தான் இருக்கும். வேலை கிடைக்க வேண்டும் என்ற உங்கள் கனவுடன் நல்ல முயற்சிகளையும் கடின உழைப்பையும் கொடுத்து அத்துடன் இந்த மந்திரத்தையும் சொல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: வேண்டியது கிடைக்க சனி மகா பிரதோஷ மந்திரம்

எந்த முயற்சியும் உழைப்பையும் போடாமல் மந்திரத்தை மட்டும் சொன்னால் நிச்சயமாக பலன் கிடைக்காது. நீங்கள் நினைத்த வேலை நினைத்ததை விட விரைவில் உங்களை வந்து சேர்வதற்கான வாய்ப்பை இந்த மந்திரம் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த மந்திரப் பரிகாரத்தை செய்யுங்கள்.

- Advertisement -