பண பற்றாக்குறையை போக்கும் பொருட்கள்

mangala porutkal
- Advertisement -

செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின் கனவாக திகழ்கிறது. அதற்காக நாம் பல வழிகளில் போராடுகிறோம். அந்தப் போராட்டத்தின் வெளிப்பாடாக தான் நமக்கு பணம் என்பது கிடைக்கிறது. இந்த பணத்தை நம்முடன் தக்க வைத்துக் கொள்வதற்கும் அதே சமயம் அதிகரித்துக் கொள்வதற்கும் பல வழிமுறைகளை பின்பற்றினாலும் அந்த வழிமுறைகளுடன் மகாலட்சுமி தாயாரின் அருளையும் பரிபூரணமாக நாம் பெற வேண்டும். அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு நம் வீட்டில் என்றென்றைக்கும் நிரந்தரமாக சில பொருட்கள் பற்றாக்குறை இல்லாமல் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பொருட்கள் என்ன என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஒரு வீட்டில் தெய்வ கடாட்சம் என்றும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் அந்த வீடு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ள வேண்டும். வீடு நறுமணமாக இருக்க வேண்டும். இந்த முறைகள் அனைத்தும் பலரும் அறிந்ததே. இருப்பினும் ஒரு சில பொருட்கள் நம் வீட்டில் பற்றாக்குறை இல்லாமல் நிரந்தரமாக இருந்தால் நம் வீட்டில் பண வரவும் நிரந்தரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த பொருட்களைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

முதலில் நம் வீட்டில் உப்பு என்றுமே குறையாமல் நிறைவாக இருக்க வேண்டும். அனைவருக்கும் உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் என்று தெரியும். இந்த உப்பை நாம் கொட்டி வைக்கும் பாத்திரம் ஆனது காலி ஆகாத அளவிற்கு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி காலியாகும் பட்சத்தில் நம் வீட்டில் வறுமை ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதனால் உப்பு வைக்கும் பாத்திரம் காலியாக ஆவதற்கு முன்பாகவே நாம் உப்பை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். கல் உப்புதான் மகாலட்சுமியின் அம்சம் அதனால் தூள் உப்பு காலியான பிறகு வாங்குவோம் என்று விட்டு விடாமல் இரண்டு உப்புகளையுமே காலியாவதற்கு முன்கூட்டியே வாங்கி வைப்பது நன்மையை தரும்.

அடுத்ததாக மங்களகரமான பொருளாக கருதக்கூடிய மஞ்சள். இந்த மஞ்சளும் மகாலட்சுமி தாயாரின் அருள் பெற்ற பொருளாக கருதப்படுகிறது. சமையலுக்கு உபயோகப்படுத்தும் மஞ்சளாக இருந்தாலும் சரி பெண்கள் குளிக்க உபயோகப்படுத்தும் மஞ்சளாக இருந்தாலும் சரி காலியாகும் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னதாகவே வாங்கி வைத்துக் கொள்வது மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு உதவும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அடுத்த மங்களகரமான பொருளாக கருதப்படுவது குங்குமம். இன்றைய காலத்தில் பலரும் குங்குமத்தை வைப்பது கிடையாது என்றாலும் பூஜை அறையில் கண்டிப்பான முறையில் குங்குமம் என்பது இருக்க வேண்டும். அதற்கு அடுத்தார் போல் வீட்டு சமையல் அறையிலும் குங்குமத்தை நாம் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த குங்குமத்தை உபயோகப்படுத்தினாலும் உபயோகப்படுத்தாவிட்டாலும் வீட்டிற்கு வரக்கூடிய சுமங்கலி பெண்களுக்கு கொடுப்பதற்காக கண்டிப்பான முறையில் வீட்டு சமையல் அறையிலும், பூஜை அறையிலும் குங்குமம் நிறைவாக இருக்க வேண்டும்.

நான்காவது பொருளாக திகழ்வதுதான் அரிசி. அன்னபூரணியாக கருதப்படும் அரிசி என்றென்றைக்கும் நம் வீட்டில் நிறைவாக இருக்க வேண்டும். அரிசி கொட்டி வைக்கும் பாத்திரத்தை காலி ஆகும் அளவிற்கு அரிசியை வாங்காமல் வைத்திருக்கக் கூடாது. அது காலியாவதற்கு முன்பாகவே அரிசியை வாங்கி வைத்துக் கொள்வது அன்னபூரணியின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு உதவும்.

- Advertisement -

கடைசியாக நாம் சொல்லக்கூடியது அன்பும் பாசமும். எந்த ஒரு வீட்டில் அன்பும் பாசமும் நிறைவாக இருக்கிறதோ அந்த வீட்டில் சண்டை சச்சரவுகள் என்பது ஏற்படாது. அப்படி நிறைவாக இருக்கும் வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். எந்த வீட்டில் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த வீட்டில் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக இருக்கும். பண வரவிருக்கும் எந்தவித குறையும் இருக்காது.

இதையும் படிக்கலாமே: பண பிரச்சினை தீர்ந்து லட்சுமி கடாட்சம் ஏற்பட உதவும் தீபம்.

அன்றாடம் நம் வாழ்வில் ஏதாவது ஒரு ரூபத்தில் பயன்படுத்தக்கூடிய இந்த ஐந்தும் என்றென்றைக்கும் நிறைவாக இருக்கும் பட்சத்தில் நம் வாழ்வில் பணவரவும் நிரந்தரமாக இருக்கும்.

- Advertisement -