குருவின் அருள் பெற்ற மூன்று ராசிகள்

Guru home astrology
- Advertisement -

குரு பார்க்கின் கோடி நன்மை இந்த வார்த்தையை கேள்விப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஒருவருடைய ஜாதகத்தில் குருவின் பார்வை பலம் பெற்று விட்டால் அவர்கள் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத உயரத்தை எட்டுவார்கள். கல்வி செல்வம் பெயர் புகழ் என அனைத்திலும் உச்சத்திற்கு கொண்டு செல்லக் கூடியவர் இந்த குரு பகவான்.

இந்த குருவின் ஆசியானது நமக்கு பரிபூரணமாக கிடைத்து விட்டால் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதித்து முன்னேறி விடலாம் என்பது ஐதீகம். அது மட்டும் இன்றி சீரும் சிறப்புடனும் செல்வாக்குடனும் வாழலாம். அந்த வகையில் குரு பகவானின் பார்வை இந்த வருடம் 3 ராசிக்காரர்களுக்கு அமோகமான பலனை தரவுள்ளத. இதன் மூலம் அவர்கள் சொந்த வீடு வாங்க கூடிய யோகத்தை பெறுகிறார்கள்.

- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தை பொருத்த வரையில் ஒரு கிரகத்தின் பெயர்சியானது 12 ராசிக்காரர்களுக்கும் மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி குரு பகவான் மேஷத்தில் பிற்போக்கு நகர தொடங்கியுள்ளார். இதன் பலனாக பல ராசிகளுக்கு மாற்றங்கள் ஏற்பட்டாலும் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்கள் உண்டு. அது குறித்தான தகவலை ஜோதிடம் பற்றிய இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

இந்த ராசிக்காரர்களுக்கு எல்லா நாட்களுமே நல்லதாக நடக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்கள் அதில் வெற்றி பெறுவார்கள். சொந்த வீடு மட்டும் அல்லாது நிலம் வாகனம் வாங்கக் கூடிய யோகத்தையும் இந்த காலத்தில் இவர்கள் பெறப் போகிறார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

- Advertisement -

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கும் குரு பகவான் அருள் மழை வாரி பொழிய உள்ளார். சிம்ம ராசிக்காரர்களுக்கு நண்பர்களின் மத்தியில் பெயரும் செல்வாக்கும் உண்டாகும். புதிய தொழில் துவங்க வாய்ப்புகள் ஏற்படும். இதனால் வருமானம் பல மடங்கு உயரும். பணியிடங்களில் சாதகமான சூழ்நிலை நிலவும். பணவரவு தாராளமாக இருப்பதால் புதிதாக நிலம் வீடு போன்றவற்றை வாங்கக் கூடிய யோகத்தை இந்த ராசிக்காரர்கள் பெறுகிறார்கள்.

கன்னி ராசி

இந்தப் புத்தாண்டில் கன்னி ராசிக்காரர்களை அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பொருளாதார நிலை மேம்பட உள்ளது. புதிய தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். இதன் மூலம் வருமானம் பல மடங்கு பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். புதிதாக நிலம், வீடு சொத்துக்களை வாங்கி குவிக்க கூடிய யோகம் இவர்களுக்கு அமோகமாக உள்ளது.

- Advertisement -

இந்த மூன்று ராசிக்காரர்களை தவிர மற்ற ராசிகாரர்களுக்கு இத்தகைய யோகங்கள் இல்லையா? என்ற கேள்வி எழலாம். இந்த காலகட்டத்தில் குரு பகவானின் அருல் இவர்களுக்கு உள்ளது. மற்ற ராசிக்காரர்களுக்கும் அவரின் கிரக சூழ்நிலைக்கு ஏற்ப யோகங்கள் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: ராகு கேது உச்சம் தொடும் ராசிகள்

இந்த பதிவில் உள்ள ஜோதிடம் குறித்தான தகவல்கள் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. இதில் அவரவரின் கிரக சூழ்நிலைக்கு ஏற்ப சிற்சில மாற்றங்கள் ஏற்படும் என்பதை தெளிவு படுத்திக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -