நீங்கள் அரசாங்க வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா? உங்களின் முயற்சி வெற்றி பெற குலதெய்வத்தை நினைத்து இந்த எளிய பரிகாரத்தை செய்து நல்ல பலன் பெறுங்கள்

arasu-panil-1
- Advertisement -

நமது தாத்தா பாட்டி காலத்திலெல்லாம் அரசாங்க வேலை என்று சொன்னால் பெரிய அளவில் மதிப்பு கிடைக்கும். பெண் கொடுத்தாலும் அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு பெண் கொடுக்க வேண்டும் என்று பலரும் திட்டவட்ட முடிவுடன் இருப்பார்கள். அவ்வாறு அரசாங்க வேலை என்பது நிரந்தர வேலை என்றும் வருமானத்திற்கு எந்தவித தடையும் இல்லாமல் இருக்கும் என்பதும் அனைவரின் அசைக்க முடியாத கருத்தாகும். இதற்காகவே பலரும் அரசாங்க வேலையை எப்படியாவது பெற வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். அரசாங்க அதிகாரி என்றாலே அதில் தனிப்பட்ட பெருமிதம் இருக்கிறது. இவ்வாறு அரசாங்க வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு அவர்களது முயற்சி வெற்றி பெற இந்த எளிய பரிகாரத்தை முறையாக செய்திட வேண்டும். அவ்வாறு அந்த பரிகாரம் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Government Jobs

இப்பொழுதெல்லாம் சாதாரண வேலை கிடைப்பது என்பதே மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. அதிலும் அரசாங்க வேலையை பெற வேண்டும் என்றால் அதற்கு மிகவும் போராட வேண்டி இருக்கிறது. அதற்காக பலவித தேர்வுகள் எழுதி அதில் தகுந்த மதிப்பெண் எடுத்து வெற்றி பெற வேண்டும். அப்பொழுதுதான் அரசாங்க வேலையில் அமர முடியும்.

- Advertisement -

இந்தத் தேர்வினை ஒரே முறை எழுதி வெற்றி பெறுபவர்கள் என்பவர் சிலரே. பலமுறை விடாமுயற்சியுடன் தேர்வெழுதிய இறுதி வரை ஏதாவது ஒரு தேர்வில் வெற்றி பெற்று அதன் மூலம் அரசாங்க வேலையில் தகுந்த பணியிடத்தை பெறமுடியும். இவ்வாறு தொடர்ந்து முயற்சி செய்து சற்று வருத்தத்தில் இருப்பவர்கள் தங்களின் முயற்சியை கைவிடாமல் முழு தைரியத்துடனும், விடாமுயற்சியுடனும் தொடர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறானவர்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்கள் அரசாங்க வேலை விரைவில் கைகூடி வர மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Govt job

அதற்காக முதலில் அரசமரத்தின் வேர் பகுதியில் இருக்கும் பட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை கூர்மையான கத்தி அல்லது அரிவாள் போன்றவற்றினால் வெட்டி எடுத்தால் அதன் பலன் கிடைக்காமல் போய்விடும். எனவே ஏதாவது ஒரு கருங்கல்லை எடுத்து அதனை வைத்து நசுக்கி சிறிதளவு வேர் பட்டையை எடுத்து கொள்ள வேண்டும். அவ்வாறே வெள்ளெருக்கன் செடியின் வேரையும் நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இந்த இரண்டு வேர்களையும் சந்தனாதி தயலத்தில் 3 நாட்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு அவற்றை வெளியே எடுத்து துடைத்து விட்டு, இழுப்பை எண்ணெயில் 3 நாட்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு 3 நாட்கள் நெய்யில் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 நாட்கள் ஊற வைத்த பின்னர் அந்த வேர்களை வெளியே எடுத்து சுத்தமாக துடைத்துவிட்டு, ஒரு தாயத்தில் அடைத்து கொள்ள வேண்டும்.

velleruku

பிறகு உங்கள் இஷ்ட தெய்வத்தின் கோவிலுக்குச் சென்று அங்கு கொடுக்கப்பட்ட திருநீரை வாங்கி வந்து சிறிதளவு திருநீரை இந்த தாயத்தில் சேர்த்து மூடியை ஒட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த தாயத்தை குலதெய்வ கோவிலுக்குச் எடுத்துச் சென்று பூஜை செய்து கழுத்து அல்லது கையில் கட்டிக் கொள்ளலாம். குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாமல் போனால் வீட்டிலேயே பூஜை அறையில் வைத்து பூஜை செய்தும் கட்டிக்கொள்ளலாம். இந்த வேர்களின் சக்தி மூலம் அரசாங்க வேலை எளிதில் கிடைத்துவிடும்.

- Advertisement -