சொந்த வீடு கட்டக்கூடிய யோகம் வெகு சீக்கிரத்தில் உங்களைத் தேடி வரும். நிலை வாசல் படியில் இந்த வழிபாட்டை செய்தால்.

new-house-graga
- Advertisement -

பறவைகள் கூட தனக்கென, ஒரு தனி கூட்டைக் கட்டிக் கொள்கின்றது. அப்படியிருக்கும்போது மனிதர்களாக இருக்கக்கூடிய நமக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்காதா. வாடகை வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் கனவாக இருக்கக் கூடிய இந்த ஆசையை, நினைவாக்குவதற்கு ஒரு சுலபமான ஆன்மீக ரீதியான வழிபாட்டு முறை சொல்லப்பட்டுள்ளது. மனதார நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு கூடிய சீக்கிரத்தில் சொந்த வீடு கட்டக்கூடிய யோகம் வரும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

ஒருசிலருக்கு சொந்தவீடு சீக்கிரத்தில் அமையக் கூடிய யோகம் கிடைத்துவிடும். காரணம் அவர்களுடைய ஜாதகத்தில் செவ்வாய், குரு, சுக்கிர பகவான், பலமாக இருப்பது தான். சில பேருக்கு இந்த யோகம் கைகூடி வர கொஞ்சம் நாட்கள் எடுக்கும். காரணம் அவர்களுடைய ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலை. செவ்வாயும் குருபகவான் சுக்கிர பகவானும் வலுவிழந்து காணப்படும் போது அதற்கான நேரமும் காலமும் கொஞ்சம் தள்ளி போகத்தான் செய்யும்.

- Advertisement -

யோகம் நம்மை தேடி வரும் வரை காத்திருக்க வேண்டாம். நாம் கொஞ்சம் அந்த யோகத்தை தேடித்தான் செல்வோமே. சரி, யோகம் நம் அருகில் வருவதற்கும், யோகத்தின் அருகில் நாம் செல்வதற்கும், இந்த ஒரு சுலபமான வழிபாட்டுமுறை போதும். தினமும் காலையில் எழுந்ததும் சுத்தமாக குளித்து விடுங்கள். நீங்கள் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் ஆக இருந்தாலும் சரி, உங்கள் வீட்டு நிலை வாசல்படியை துடைத்து மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து வாசனை நிறைந்த பூக்களை வாசல்படிக்கு இரண்டு பக்கங்களிலும் வைத்துவிட வேண்டும்.

நிலை வாசல் படியில் தான் கிரக லட்சுமி வாசம் செய்வாள். கிரகலட்சுமி மனதார நினைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த பூமி தாய். பூமி மாதா மனசு வைத்தால் தான் நம்மால் நிலத்தை சொந்தமாக்கிக் கொள்ள முடியும். பூமியைத் தொட்டு ஒரு முறை மனதார பூமா தேவியை வணங்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு நிலை வாசல் படியின் அருகிலேயே நின்று கொண்டு கிரகலட்சுமி தாயே, எங்களுக்கு வீடு வாங்கும் யோகம் சீக்கிரத்தில் கிடைக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அதன் பின்பு பூஜை அறைக்கு வந்து செவ்வாய் பகவானையும் குரு பகவானையும் சுக்கிர பகவானை மனதார நினைத்து பூஜை அறையில் நெய்தீபம் ஏற்றி முருகப் பெருமானை மனதார வேண்டி வர, நிச்சயமாக வீடு கட்டும் யோகம் உங்களை தேடி வரும். குறிப்பாக இந்தப் பூஜையை தினமும் காலை 5.45 மணிக்கு முன்பாக நிறைவு செய்திருக்க வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்பு இந்த பூஜை செய்வது பலனை வெகு சீக்கிரத்தில் கொடுக்கும்.

உங்களுடைய வீட்டின் நிலை வாசலுக்கு உள்பக்கத்தில் மேலே, வீட்டிற்கு உள்ளே வருவது போல ஒரு கிரகலட்சுமியின் திருவுருவப் படத்தை மாட்டி வையுங்கள். தினம் தினம் இந்த கிரகலட்சுமியை பார்க்கும்போதெல்லாம் உங்களுக்கு சொந்த வீடு வாங்கவேண்டும் என்ற எண்ணம் வரும். அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான முயற்சிகளை எடுத்துக் கொண்டே இருப்பீர்கள். சீக்கிரமாக கிரகலட்சுமி உங்கள் வீட்டிற்குள் காலடி எடுத்துவைத்து உங்களுக்கான சொந்த வீட்டை அமைத்துக் கொடுப்பாள் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. வழிபாட்டை நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு கைமேல் பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -