உங்கள் கையில் இந்த 1 பொருளை வைத்துக் கொண்டு குபேரர் பெயரை சொல்லிவிட்டால், குபேரர் உங்களுக்கு வசியமாகிவிடுவார். பிறகு கோடி கோடியாக செல்வ வளத்தை கொட்டிக் கொடுக்க தொடங்கி விடுவார்.

- Advertisement -

குபேரர் என்ற இந்த பெயரை சொல்லும் போதே நம் மனதிற்குள் ஒரு ஆனந்தம். காரணம், குபேரர் என்ற வார்த்தை பணத்தைக் குறிக்கின்றது. பணம் என்றால் நாம் நினைவுக்கு வருவது இந்த குபேரன். பணத்துக்கு அதிபதியாக இருக்கும் இந்த குபேரனை என்ன செய்தால் நாம் வசியம் செய்து கொள்ளலாம். குபேரரது கடைக்கண் பார்வை நம் மீது விழ நாம் என்னதான் செய்வது. இதோ ஒரு எளிமையான ஆன்மீகம் சார்ந்த வழி உங்களுக்காக. இந்த வழிபாட்டு முறையை சரியான முறையில் செய்து விட்டால், உங்களுடைய பண கஷ்டம் விரைவில் தீர்த்துவிடும். வருமானம் முன் வாசல் வழியாக வர தொடங்கிவிடும். வறுமை பின் வாசல் வழியாக ஓட தொடங்கிவிடும்.

குபேரரை வசியம் செய்ய பரிகாரம்:
குபேரரை வசியம் செய்ய வேண்டும் என்றால் முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது குபேர முத்திரையை பற்றி தான். ஆள்காட்டி விரல் நடுவிரல் கட்டைவிரல் இந்த மூன்று விரல்களையும் சேர்த்து பிடிப்பதுதான் குபேர முத்திரை. இந்த குபேர முத்திரையை கையில் பிடித்தாலே குபேரரின் ஆசிர்வாதம் நமக்கு கிடைத்துவிடும். இதுதான் முதல் விஷயம்.

- Advertisement -

காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். முதல் முதல் முறை இந்த பரிகாரத்தை தொடங்கும் போது சூரிய உதயத்திற்கு முன்பு, இந்த பரிகாரத்தை செய்வது ரொம்ப நல்லது. முடியாதவர்கள் 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாவது இந்த பரிகாரத்தை செய்யுங்கள். கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். சமணம் போட்டு தரையில் விருப்பு விரித்து அமர்வது சிறப்பு. முடியாதவர்கள் சோபாவின் மீது, நாற்காலியின் மீதும் சமணம் போட்டு அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் குபேர முத்திரையை பிடிக்க வேண்டும். குபேர முத்திரையை பிடிக்க கூடிய விரல்களுக்கு நடுவில் நாம் வைக்க வேண்டிய பொருள் ‘அருகம்புல்’.

அருகம்புல், குபேரருக்கு மிக மிக விருப்பமான ஒரு பொருளாக சொல்லப்பட்டுள்ளது. குபேர முத்திரை பிடிக்கும் விரல்களுக்கு நடுவில் அருகம்புல் இருந்து விட்டால், குபேரர் உடனே மனம் இறங்கி நம் வீடு தேடி வந்து விடுவார். இப்படி அருகம்புல் வைத்த குபேர முத்திரையை கையில் பிடித்துக் கொண்டு, ‘ஓம் குபேராய வசிய’ என்ற மந்திரத்தை 1008 முறை உச்சரிக்க வேண்டும். உங்கள் கையில் இருக்கும் அருகம்புல்லுக்கு அத்தனை சக்தி வந்து விடும். அதை அப்படியே ஒரு மஞ்சள் துணியில் வைத்து மடித்து பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் மீண்டும் அந்த அருகம்புல்லை வெளியில் எடுத்து கையில் வைத்து இதே போல ‘ஓம் குபேராய வசிய’ என்ற மந்திரத்தை 1008 முறை சொல்லி மீண்டும் அந்த அருகம்புல்லை பணம் வைக்கும் பெட்டியிலேயே வைத்துவிடலாம். அருகம்புல் ரொம்பவும் காய்ந்து விட்டால் பிரச்சனை இல்லை அது அப்படியே இருக்கலாம். பூசனம் பிடித்தது என்னும் போதுதான் பழைய அருகம்புல்லை கால்படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் புதிய அருகம்புல்லை கொண்டு வந்து மந்திர உருவேற்றி பணப்பெட்டியில் வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மாதத்தில் 2 நாள் இந்த தண்ணீரில் குளித்தால், தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் சாபம் கூட, இந்த தலைமுறையோடு நீங்கிவிடும்.

இதே போல இந்த அருகம்புல்லை உங்கள் பணப்பெட்டியில் வைத்து வர குபேரரின் ஆசிர்வாதத்தை நீங்கள் பரிபூரணமாக பெறுவீர்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டங்கள் தீருவதற்கு இந்த ஒரு வழிபாட்டு முறையும் உங்களுக்கு உதவியாக இருக்கும். எளிய ஆன்மீகம் சார்ந்த இந்த குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -