குரு தோஷத்தால் உண்டாகும் குழப்பங்கள் தீர தினமும் காலை 12 முறை இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தைச் சொல்லிப் பாருங்கள்

guru-astro-wheel
- Advertisement -

மனக்குழப்பம் என்பது இன்றளவில் பலருக்கும் ஒரு வியாதியாகவே மாறி இருக்கிறது. சாலையில் நடக்கும் ஒவ்வொரு மனிதனின் முகத்தை உற்று நோக்கினால் அவர்கள் நிச்சயம் எதையாவது சிந்தித்துக் கொண்டு தான் செல்வார்கள். அவர்களின் மனதில் எவ்வித குழப்பங்கள் இருக்கின்றது என்பதை அவர்களின் முகமே காட்டிக் கொடுக்கும். இவ்வாறு மனிதன் எப்போதும் குழம்பி தான் இருக்கின்றான். தெளிவாக செயல்படும் ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் வெற்றிப் படிகளில் ஏறிக் கொண்டே இருக்கிறான். எவனொருவன் குழம்பிக் கொண்டே இருக்கிறான் அவன் ஒரு படி கூட ஏற வழியில்லாமல் பாதியிலேயே நின்று விடுகிறான் இந்த சிறப்பு வாய்ந்த மந்திரத்தை காலை கண்விழித்ததும் தொடர்ந்து சொல்லுங்கள். வாருங்கள் அது என்ன மந்திரம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

success

எதை எடுத்தாலும் குழப்பம், எதை சொல்ல வேண்டும்? எதை செய்ய வேண்டும்? எங்கு செல்லக்கூடாது? எங்கு செல்ல வேண்டும்! இதை செய்யலாமா! வேண்டாமா? என்று எடுத்ததற்கெல்லாம் குழப்பம் கொள்பவர்கள் பலர் இருக்கின்றனர். தான் நினைப்பது ஒன்றாக இருக்கும், ஆனால் மற்றவர்களின் சொல் பேச்சு கேட்டு குழம்பி கொண்டு எதையும் சரியாக செய்ய மாட்டார்கள்.

- Advertisement -

ஒரு அலுவலகத்தில் முதலாளி கொடுத்த வேலையை இந்த நேரத்தில் சரியாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்று இருக்கும். ஆனால் உடன் வேலை செய்பவர்கள் இதனைச் செய்து கொடுத்தால் மறுபடியும் மற்றொரு வேலை இருக்கும் எனவே இதனை பொறுமையாக செய் என்று கூறுவார்கள். இப்படி உங்களை தூண்டி விட்டால் உடனே குழப்பம் கொள்வீர்கள். இதனை செய்யலாமா? வேண்டாமா? இது சரியா? தவறா? இதுபோன்ற குழப்பங்களில் இடம் கொடுக்காமல் உங்கள் மனதில் தோன்றியதை தெளிவாக செய்ய வேண்டும்.

job

அதுபோல கணவன் மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகளை எந்தவித குழப்பமும் இல்லாமல் உடனடியாக பேசி சரி செய்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் நான் ஏன் முதலில் பேச வேண்டும் இவரிடம் இறங்கிப் போக வேண்டும் என்ற குழப்பத்துடன் செயல்பட்டால் குடும்பத்தின் நிம்மதியும் சீர்குகுலையும்.

- Advertisement -

மனம் நிம்மதி பெற முதலில் தெளிவான சிந்தனை வேண்டும், எப்பொழுதும் தேவையற்றவற்றை யோசிப்பதை தவிர்த்துவிட்டு, இறைவனைப் பூஜிக்க வேண்டும், எப்போதும் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, நேர்மறை எண்ணங்களுடன் செயல்பட வேண்டும், உங்கள் மனதில் எப்பொழுதும் நம்பிக்கை இடம்பெறவேண்டும், இறைவனை மனதார வணங்க வேண்டும். இப்படி எப்போதும் நல்ல எண்ணத்துடன் செயல்பட்டால் அனைத்துமே நல்லவையாக நடைபெறும்.

guru-bhagavan

அதற்காக தினமும் காலையில் எழுந்ததும் படுக்கையில் அமர்ந்தபடியே (படுக்கை சுத்தமாக இருக்க வேண்டும்)
“ஓம்கார நாத பிருகு வர்த்தன் யாய குரு குரு
வரவரத சர்வ ஜனம்மே சுப வசமானய ஸ்வாஹா”

என்று உங்கள் உள்ளங்கையை பார்த்து, 12 முறை சொல்லிய பிறகு, கைகளை நன்றாக தேய்த்து உங்கள் கண்களில் ஒற்றி எடுக்க வேண்டும். இவ்வாறு தினமும் இந்த மந்திரத்தை சொல்லி வர மனக் குழப்பங்கள் தீர்ந்து, உங்கள் சிந்தனை என்றும் தெளிவானதாக மாறி அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

- Advertisement -