குரு பெயர்ச்சி பலன்கள் 2019 கடகம்

Guru peyarchi palangal Kadagam
- Advertisement -

கடகம்: ( புனர்பூசம் 1ஆம் பாதம், பூசம், ஆயில்யம் )

Kadagam Rasi

உங்கள் ராசிக்கு குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை 6-ம் வீட்டில் மறைகிறார். இதனால் சில சங்கடங்கள் வந்தாலும் நன்மையும் நடைபெறும். பூர்வீக சொத்தை விற்று வேறு இடத்திற்கு குடிபெயரும் வாய்ப்புகள் வரலாம். வாக்கு கொடுத்தவர்கள் எல்லாம் பின் வாங்க நேரிடும் எனவே முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

- Advertisement -

வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். வீண் விரயங்கள் வந்து கொண்டே இருக்கும். அதனால் சேமிக்க முடியாமல் போகும். தம்பதியருக்குள் விட்டுக்கொடுக்கும் தன்மை இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். வாகன யோகமுண்டு. உங்களின் முன்கோபத்தால் பலரின் நட்புகளை இழக்க நேரிடலாம் கவனமாக பார்த்துக் கொள்ளவும்.

உங்களின் ராசிக்கு குருவானவர் குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் சுப காரியங்கள் நடைபெற்று குடும்பத்தில் குதூகலம் நிலவும். தன வரவு உண்டாகும். தங்கநகை சேர்க்கை உண்டு. பிள்ளைகளின் திருமணம் கைகூடும். பிறரால் முடியாத வேலைகளையும் நீங்கள் முடித்து காட்டுவீர்கள். ஆன்மீக சுற்றுலா சென்று இறைவனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

- Advertisement -
Guru peyarchi palangal Kadagam
Guru peyarchi palangal Kadagam

தொழில்:
இருக்கிற வேலையை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொள்வது நல்லது. சில நேரங்களில் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதற்காக கலங்க வேண்டும். அதே போல சில நேரங்களில் வேலைக்கேற்ற சன்மானமோ, பதவி உயர்வோ இல்லாமல் இருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனாலும் எதற்கும் கலங்காமல் உங்களுக்கான பணியை செம்மையாக செய்வதே நல்லது. இருக்கிற வேலையை விட்டுவிட்டு எக்காரணம் கொண்டும் புதிய வேலையை தேட வேண்டாம்.

வியாபாரிகளை பொறுத்தவரை போட்டிகள் அதிகரிக்கும். சில நேரங்களில் உங்களின் வேலை ஆட்கள் உங்களை மதிக்காமல் செயல்படுவார்கள். அதற்காக கோபம் கொள்ளாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. சில புதிய போட்டி நிறுவனங்கள் உருவாகும். அதனை எதிர்த்து நீங்கள் போராடி ஜெயிக்க வேண்டி இருக்கும்.

- Advertisement -
Guru peyarchi palangal Kadagam
Guru peyarchi palangal Kadagam

கல்வி:
மாணவர்களுக்கு எண்ணங்கள் சிதற வாய்ப்புகள் உள்ளது. அதனால் மனதை ஒருமுகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது. போட்டி தேர்விற்கு தயாராகுகையில் மிகுந்த கவனத்தோடு செயல்படுவது நல்லது. கல்லூரி மாணவர்கள் மனதை அலைபாய விட வேண்டாம். இதனால் உங்களுக்கு நிஷ்டமே மிஞ்சும்.

பொருளாதாரம்:
புதிய முதலீடுகளை போட்டு தொழில் தொடங்கி அதில் இருந்து லாபம் எடுக்கும் வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு இருக்கும். தாய்வழிச் சொத்துகள் உங்களை தேடி வரும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். சில நேரங்களில் தொழில் ரீதியான அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கான தக்க பண வரவும் இருக்கும்.

astrology

பெண்களைப் பொறுத்த வரை கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பிரிந்து போன நண்பர்கள் ஒன்று சேருவீர். பெற்றோருடன் ஒற்றுமை பலபட்டு கருத்து வேறுபாடுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு அவர்களின் கலை திறன் மேம்படும் வகையில் நல்லதொரு வாய்ப்பு கிடைக்கும்.

கடக ராசிக்குரிய பரிகாரம்::

பௌர்ணமி நாட்களில் திருவக்கரை காளி கோயிலிற்கு சென்று வழிபடுவது நல்லது. ஏழை பெண்களின் திருமணத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். நல்லது நடக்கும்.

- Advertisement -