குரு பெயர்ச்சி 2023-ல் இந்த 5 ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் நடந்துகொள்வது நல்லது.

guru peyarchi palangal 2023
- Advertisement -

பொன்னன் எனப்படும் மஞ்சள் நிறத்திற்குரிய நவகிரக நாயகனான குரு பகவான் பொதுவாக அனைத்து ராசியினருக்குமே நன்மையான பலன்களை அடிக்கக்கூடிய கிரகமாக இருக்கிறார். எனினும் குரு பகவான் 12 ராசி கட்டங்களில் குறிப்பிட்ட சில வீடுகளில் இருக்கின்ற பொழுது, ஒரு சில ராசிகளுக்கு பாதகமான பலன்களை தருகிறார்.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற என்ற குருபெயர்ச்சியால் ஆண்டு முழுவதும் பாதகமான பலன்களை சந்தித்த கூடிய ராசியினர் யார் என்பதை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மேஷம்
ஏப்ரல் மாதம் 22ஆம் தேதிஏற்படவிருக்கும் குரு பெயர்ச்சியின் போது. மேஷ ராசியிலேயே குரு பகவான் பயிற்சியாவதால் “குரு நின்ற இடம் பாழ்” என்கிற பழமொழிக்கேற்ப மேஷ ராசியினர் பலவிதமான சோதனைகளை சந்திப்பார்கள்.

அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அதனால் பெரிய ஆதாயங்கள் ஏதும் இருக்காது. ஒரு சிலர் சில காலத்திற்கு குடும்பத்தைப் பிரிந்து சென்று வேறொரு இடத்தில் தங்க வேண்டிய நிலையும் ஏற்படும். அவ்வப்போது உணர்ச்சிவயப்படுதல் காரணமாக உடல் மற்றும் மனச்சோர்வு ஏற்படும்.

- Advertisement -

தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு கடுமையான போட்டிகளை சந்திக்கும் நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பதவிகள் பிறருக்கு மாறும் நிலை ஏற்படும். படித்து முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு சற்று தாமதத்திற்கு பிறகு கிடைக்கும். குடும்பத்தில் வீணான மனக்கசப்புகள் ஏற்படும். இந்த குரு பெயர்ச்சி பொருள் வரவில் சோதனையான காலகட்டமாக இருக்கும்.

ரிஷபம்
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத குரு பெயர்ச்சியின் போது, குருபகவான் ரிஷப ராசியினருக்கு விரய ஸ்தானம் எனப்படும் 12 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சியாகிறார். இதனால் பல வழிகளில் வீண் விரயங்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும்.

- Advertisement -

வருமானம் சீராக இருந்தாலும் அதை மிஞ்சிய செலவுகள் இருக்கும். அரசாங்க ரீதியான காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்று பின் தங்கும் நிலை ஏற்படும். பெண்களுக்கு உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும்.

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறாது. உடன் பிறந்தவர்களின் துரோகத்திற்கு சிலர் ஆளாக நேரிடும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் எளிதில் வெற்றி அடையாது.

கடகம்
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குரு பகவான் கடக ராசிக்கு கர்ம ஸ்தானம் எனப்படும் 10 ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். தொழில் ஸ்தானமாகிய பத்தாம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சியாவதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிட மாற்றம் அல்லது அந்த பணியையே விட்டு விடக்கூடிய சூழல் ஏற்படும்.

அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பதவிகள் பறிபோக வாய்ப்பு உண்டு. எந்த ஒரு செயலும் கடினமான முயற்சிக்குப் பிறகே வெற்றி அடையும். உடன் பிறந்தவர்களால் பொருள் விரயம் உண்டாகும். திருமணமான தம்பதிகளுக்குள்ளே கருத்து வேறுபாடு அதிகரிக்கும்.

வீட்டில் பெண்களுக்கு சுபகாரிய முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் அதிகரிக்கும். கடன் பாக்கிகளை எளிதில் கட்ட முடியாத நிலை இருக்கும். உண்ணும் உணவில் கட்டுப்பாடு இல்லாததால் சிலருக்கு மருத்துவர் ரீதியான செலவுகள் ஏற்படும்.

கன்னி ராசி
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறுகின்ற குரு பெயர்ச்சியில், குருபகவான் கன்னி ராசிக்கு 8 ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் கன்னி ராசியினருக்கு வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆடம்பர செயல்பாட்டால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.

தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் தங்களின் சராசரியான வருமானத்திற்கு கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிலருக்கு பெண்களால் அவப்பெயர்கள் ஏற்படலாம். வாகனங்களில் பயணிக்கும் பொழுது எச்சரிக்கை தேவை. பிறருடனான பிரச்சனைகளால் ஒரு சிலர் வழக்கு, நீதிமன்றம் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர் தங்களுக்கு கீழான பணியாளர்களுடன் விரோதம் ஏற்படும் கடன் கடன் வாங்கியவர்கள் அதை சரியான நேரத்தில் கட்ட முடியாமல் திணறுவார்கள். கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காது. வெளியூர், வெளிநாடு சென்று பணி புரிபவர்களுக்கு பெரிய ஆதாயங்கள் ஏதும் இருக்காது.

விருச்சிகம்
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறுகின்ற குரு பெயர்ச்சியில், குரு பகவான் விருச்சிக ராசிக்கு ருண, ரோக ஸ்தானமாகிய 6 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சியாகிறார். இதனால் விருச்சிக ராசியினருக்கு நேரடி, மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். சிலருக்கு தங்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களே எதிரிகளாகும் நிலை ஏற்படும்.

மருத்துவர் ரீதியிலான செலவுகள் அடிக்கடி ஏற்படும். குடும்பத்தில் மனைவி மற்றும் குழந்தைகள் வழியில் வீண் விரயங்கள் ஏற்படும். பூர்விக சொத்து தொடர்பான விவகாரங்களில் இழப்பறியான நிலை நீடிக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் எதிர்பாராத நஷ்டங்களை சந்திக்கும் நிலை ஏற்படலாம்.

இதையும் படிக்கலாமே: குரு பெயர்ச்சியால் யோகம் பெரும் 5 ராசிக்காரர்கள்

மாணவர்கள் கடினமான முயற்சிகளில் ஈடுபட்டால் மட்டுமே கல்வியில் சிறக்க முடியும். பெண்களுக்கு மன அழுத்த அதிகரிக்கும். பிறரின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.

- Advertisement -