ஒரே ஒரு ஜக் இந்த தண்ணீரை ஊற்றி உங்க முடியை அலசினால் போதும். முடிவில்லாத முடி உதிர்வை கூட, 3 நாட்களில் நிறுத்திவிடலாம்.

hair20
- Advertisement -

எதனால் முடி உதிர்கிறது என்றே தெரியவில்லை. எல்லா குறிப்பையும் முயற்சி செய்து பார்த்தாகிவிட்டது. எல்லா ஷாம்பூ போட்டு முயற்சி செய்து பார்த்தாச்சு. எல்லாம் எண்ணெயையும் வாங்கி தடவி டெஸ்ட் பண்ணியாச்சு. ஆனாலும் முடி உதிர்வு நின்ற பாடாக இல்லை. ஒரே ஒருமுறை இந்த ஒரு குறிப்பையும் முயற்சி செய்து பாருங்கள். ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டாம். உங்களுடைய வீட்டின் அருகில் இருக்கக்கூடிய மரத்திலிருந்து இந்த இலையை பறித்து வந்து பின் சொல்லக்கூடிய படி குறிப்பை பின்பற்றினாலே போதும்.

வீட்டின் அருகில் இருக்கக்கூடிய வேப்பமரம் தாங்க அந்த மரம். பெரும்பாலும் நம்மில் நிறைய பேர் வீட்டிற்கு அருகில் வேப்ப மரங்கள் இருக்கும். அந்த மரத்திலிருந்து கொஞ்சமாக இலையை மட்டும் பறித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அளவு ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை இருந்தால் கூட போதும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒரு பெரிய கப் அளவு தண்ணீரை ஊற்றி, அதில் இந்த வேப்ப இலைகளைப் போட்டு 10 நிமிடம் போல மிதமான தீயில் கொதிக்க வைக்கவேண்டும்.

- Advertisement -

இப்போது அந்த தண்ணீர் கசப்புத்தன்மை ஆக மாறியிருக்கும். அடுப்பை அணைத்துவிட்டு, இந்த தண்ணீரை வெதுவெதுப்பாக ஆறவிட்டு வடிகட்டி கொள்ளுங்கள். இந்த தண்ணீரை கொண்டு தான் தலையை அலச வேண்டும். முதலில் எப்போதும் போல நீங்கள் எந்த ஷாம்பு சீயக்காய் பயன்படுத்துகிறீர்களோ அதை பயன்படுத்தி உங்களுடைய தலையை அழுக்கு போக அலசிக் கொள்ளுங்கள்.

குளித்து முடித்து விட்டு இறுதியாக தலையை துவட்டுவதற்கு முன்பாக தயார் செய்து வைத்திருக்கும் வேப்ப தண்ணீரில் உங்களுடைய தலையை ஒரு முறை நன்றாக அலசி விட்டு விட வேண்டும். அவ்வளவு தான். அதன் பின்பு மீண்டும் நல்ல தண்ணீரை ஊற்றி அலச வேண்டாம். தலையை அப்படியே துவட்டி கொள்ளுங்கள்.

- Advertisement -

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்த தண்ணீரை ஊற்றி முடியை அலச வேண்டும். இப்படியாக 3 நாள் மட்டும், இந்த தண்ணீரை ஊற்றி உங்களுடைய தலைமுடியை அலசி வர தலையில் இருக்கும் பேன், பொடுகு, முடி உதிர்வுக்கு காரணமாக இருக்கும் இன்ஸ்பெக்சன் அனைத்தும் ஒரே வாரத்தில் சரியாகி விடும். பிறகு முடி உதிர்வு குறைவதை கண்கூடாக உங்களால் காண முடியும். (வேப்ப இலைகள் கிடைக்காத இடத்தில் நீங்கள் இருந்தால், ஆன்லைனில் இயற்கையான வேப்பம் பொடி கிடைக்கின்றது. அதை தண்ணீரில் 1 ஸ்பூன் போட்டு கலந்து வடிகட்டி அந்த தண்ணீரில் அப்படியே தலைக்கு குளிக்கலாம்.)

மூன்று நாட்கள் மட்டும் தான் இந்த குறிப்பை பயன்படுத்த வேண்டும்.  அதன் பின்பு தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. தேவைப்பட்டால் 3 மாதத்திற்கு ஒருமுறை இப்படி இந்த கசப்பு நிறைந்த தண்ணீரில் தலையை அலசும்போது தலையில் எந்த ஒரு நோய் தொற்றும், அரிப்பும், பேன், பொடுகு தொல்லையும் இல்லாமல் இருக்கும். எளிமையாக இருக்கக்கூடிய இந்த குறிப்பை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். முடியில் இருக்கக்கூடிய பிரச்சினைக்கு நிச்சயமாக நல்லதொரு தீர்வு கிடைக்கும்.

- Advertisement -