தலை முடி உதிர்வை குறைத்து அடர்த்தியாக முடியை வளர செய்ய அழகு குறிப்பு

hair
- Advertisement -

இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை முடி உதிர்வு பிரச்சனை. வெள்ளை முடி பிரச்சனை. இந்த இரண்டு பிரச்சனைக்கும் தீர்வு காண்பதற்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க. கையில் இருக்கும் பணத்தை அதிகமாக செலவு செய்கிறார்கள். தலை முடி பிரச்சனைக்கு எளிமையாக செலவில்லாத ஒரு தீர்வைதான் இந்த அழகு குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்த அழகு குறிப்பு

முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய முதலில் நம்முடைய வீட்டில் சூப்பரான ஒரு சீரம் தயார் செய்யலாம். இதற்கு நமக்கு முதலில் தேவைப்படக்கூடிய பொருள் 3 ஏலக்காய்க்கு உள்ளே இருக்கும் விதைகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக தூள் செய்து கொள்ளுங்கள். தோலை தூக்கி குப்பையில் போட வேண்டாம். டீ போட பயன்படுத்தலாம்.

- Advertisement -

ஒரு அகலமான பாத்திரத்தில், டீ குடிக்கும் டம்ளரில் 1 டம்ளர் தண்ணீரை, ஊற்றி கொதிக்க வையுங்கள். கொடுக்கின்ற நல்ல தண்ணீரை இதற்கு பயன்படுத்துங்கள். கொதிக்கின்ற தண்ணீரில் இடித்து வைத்திருக்கும் ஏலக்காய் தூளை போடவும். அந்த ஒரு டம்ளர் தண்ணீர் அரை டம்ளர் தண்ணீராக சுண்டி வந்தவுடன், அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த தண்ணீரில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1/4 ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி, நன்றாக கலந்து கொள்ளவும். சூப்பரான சீரம் தயார். இதை பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் இரண்டு வாரம் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

தலைக்கு குளிப்பதற்கு முன்பாக உங்களுடைய தலையில் நன்றாக தேங்காய் எண்ணெய் வைத்து மசாஜ் செய்து விடுங்கள். பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கிறோம் அல்லவா ஏலக்காய் தண்ணீர் சீரம், இந்த சீரமை உங்களுடைய வேர்க்கால்களில் அப்ளை செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்த தண்ணீரை ஒரு காட்டன் பஞ்சில் தொட்டு எடுத்து உங்களுடைய வேர்கால்களில் படும்படி வைக்கலாம்.

அது உங்களுடைய விருப்பம். அரைமணி நேரத்தில் இருந்து, ஒரு மணி நேரம் கழித்து விட்டு பிறகு ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி செய்தால் உங்களுடைய வேர்கால்கள் வலுப்பெறும். முடி உதிர்வு குறையும்.

- Advertisement -

ஷாம்புவை அப்படியே தலையில் போட்டு குளிப்பதை விட, இந்த தண்ணீரில், நீங்கள் தலைக்கு குளிக்கும் ஷாம்புவை கலந்து குளித்துப் பாருங்கள். உங்களுக்கே நல்ல வித்தியாசம் தெரியும். ஒரு பாத்திரத்தில் ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் 2 கொத்து கருவேப்பிலையை பொடியாக கிள்ளி போடுங்க. ஒரு ஸ்பூன் வெந்தயம் போடுங்க. ஒரு சின்ன ஸ்பூன் அளவு டீ தூள் போட்டு, நன்றாக கொதிக்க வையுங்கள்.

ஐந்திலிருந்து ஏழு நிமிடம் மிதமான தீயில் இந்த தண்ணீர் கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஒரு மூடி போட்டு தண்ணீரை ஆறவிடுங்கள். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். பிளாக் டீ போல இருக்கும். இந்த தண்ணீரில் நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்புவை ஊற்றி கலந்து, இந்த தண்ணீரை தலையில் போட்டு நன்றாக தேய்த்து தலை கசக்கினால், உங்களுடைய தலைமுடி உதிர்வு கட்டுப்படுத்தப்படும்.

நரைமுடி வருவது குறையும். இருக்கின்ற ஓரிரு வெள்ளை முடி கூட கருப்பு நிறமாக மாறிவிடும். ஆனால் இது எல்லாம் ஒரே நாளில் நடக்காது. வாரத்தில் மூன்று நாள் மேலே சொன்ன குறிப்பை நீங்கள் பின்பற்றி வர வேண்டும். மூன்று மாதத்தில் நிச்சயமாக நல்ல வித்தியாசத்தை உணர்வீர்கள்.

இதையும் படிக்கலாமே: கருத்த சருமம் உடனே வெள்ளையாக மாற

முடி உதிர்வு குறைந்து, வெள்ளை முடி வருவது குறைந்து, முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர தொடங்கிவிடும். பெண்கள் ஆண்கள், 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கும் இந்த குறிப்பை பின்பற்றலாம். தேவைப்படுபவர்கள் மேல் சொன்ன அழகு குறிப்பை பின்பற்றி பலன் தரலாம்.

- Advertisement -