தலை முடி உதிராமல் அதிவேகமாக வளர இந்த ஒரு எண்ணையை நீங்கள் பயன்படுத்தி வந்தால் போதும். இப்படி ஒரு முடி வளர்ச்சியான்னு நீங்க ஆச்சரியப்படுற அளவுக்கு அபாரமான முடி வளர்ச்சியை பார்க்கலாம்.

hair1
- Advertisement -

முடி உதிர்வு வழுக்கை இளநரை இது போன்ற பிரச்சனைகள் எல்லாம் இன்று இளம் வயதினர்களுக்கு கூட இருக்கத் தான் செய்கிறது. இந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்ய வேண்டுமானால் நாம் தலைமுடிக்கு போதுமான அளவு ஊட்டச்சத்தை தர வேண்டும். அப்படி ஒரு ஊட்டச்சத்து மிக்க எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று தான் இந்த அழகு குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

தலைமுடி உதிராமல் வேகமாக வளர எண்ணெய்:
இந்த எண்ணெய் தயாரிக்க முதலில் ஒரு கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலை எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை நான்கு மணி நேரம் ஊற வைத்து அந்த வெந்தயத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். வெந்தயம் ஊற வைத்து தண்ணீரை கீழே ஊற்றாமல் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், ஐந்து செம்பருத்தி இதழ் (ஒற்றை செம்பருத்தி மட்டும் இதற்கு பயன்படுத்துங்கள்) இவை எல்லாம் சேர்த்து பிறகு ஊற வைத்து வெந்தயம் தண்ணீரை ஊற்றி மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பயன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் அரைத்த இந்த பேஸ்ட்டை சேர்த்த பின்பு அரை லிட்டர் சுத்தமான செக்கில் ஆற்றிய தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய் சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இதை ஒரு பத்து நிமிடம் வரை மிதமான தீயில் சூடு படுத்த வேண்டும். இந்த எண்ணெயின் சலசலப்பு தன்மை அடங்கிய பிறகு பத்து மிளகு மட்டும் சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை அப்படியே ஆற விடுங்கள்.

அதன் பிறகு இந்த எண்ணையை ஒரு கண்ணாடி பாட்டிலில் வடிகட்டி ஊற்றி வைத்துக் கொள்ளலாம். இந்த எண்ணெய் வெளியில் வைத்தால் கூட இரண்டு மாதம் வரை பயன்படுத்தலாம் ஒன்றும் ஆகாது. இந்த எண்ணையை கொஞ்சமாக எடுத்து தலையின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து ஐந்து நிமிடம் வரை மசாஜ் செய்து கொடுங்கள். அதன் பிறகு எப்போதும் போல நீங்கள் சீயக்காய் அல்லது மயில்டான ஷாம்பு சேர்த்து தலைமுடியை அலசி விடுங்கள்.

- Advertisement -

இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறை தேத்தாலே போதும். ஒரே வாரத்தில் முடி உதிர்வு பிரச்சனை முழுவதுமாக நீங்கி புதிய முடிகள் வளர தொடங்கி விடும். அதே போல வழுக்கை விழுந்த இடங்களில் எல்லாம் கூட புதிய முடி வளர தொடங்கி விடும்.

இந்த எண்ணெயில் சேர்த்து இருக்கும் கருவேப்பிலையில் உள்ள புரோட்டின் சத்து முடி வளர பெரிதும் உதவி செய்யும். அது மட்டும் இன்றி வெந்தயம் முடியை மிருதுவாக்கி தலையில் ஏற்படும் அரிப்பு போன்றவற்றை நீக்கும். கற்றாழை முடியில் ஈரப்பதத்தை உருவாக்கி முடி நீளமாக வளர உதவும். அதே போல் செம்பருத்தி முடி உதிர்ந்த இடத்தில் எல்லாம் புதிய முடிகள் வளர பெரிய அளவில் உதவி செய்யும். இதில் சேர்க்கப்படும் மிளகு இந்த எண்ணையின் குளுமை தன்மையை நீக்கி விடும். இதனால் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் கூட இந்த எண்ணெயை பயன்படுத்தும் போது எந்த பிரச்சனையும் வராது.

இதையும் படிக்கலாமே: இந்த எண்ணெயை யார் தலையில் தடவினாலும் மூன்றை மாதத்தில் 3 மடங்கு முடி வளர்ச்சி நிச்சயம் அதிகரிக்கும். பக்காவான ஹெர்பல் ஆயில் நம் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?

முடி வளர பயன்படுத்தும் இந்த எண்ணெய் தயாரிப்பு பற்றிய குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்களும் உங்களின் முடி சார்ந்த பிரச்சனைகள் சரியாக இந்த எண்ணெய் பயன்படுத்தி பலன் அடையலாம்

- Advertisement -