முடி ரொம்ப கொட்டுதா? ஷாம்பூவை நிறுத்திவிட்டு இயற்கையாக இப்படி செஞ்சு தலைக்கு குளித்து வந்தா 1 முடி கூட கொட்டாது, கொத்து கொத்தா முடி வளரும் தெரியுமா?

mulai-kattiya-thaniyam-hair-fall
- Advertisement -

நம் அன்றாட வாழ்க்கையில் நாம் உண்ணும் உணவு முறை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் தலைமுடி பிரச்சனையை அதிகரித்து வருகிறது. தலை முடிக்கு தேவையான சத்துக்கள் முழுமையாக கிடைக்காததால் வேகமாக முடி இழப்பு நிகழ்கிறது. ஒரு நாளைக்கு இவ்வளவு தான் முடி உதிர வேண்டும் என்று உள்ளது, அதற்கு மீறி முடி உதிர ஆரம்பித்தால் காலப்போக்கில் அது மீண்டும் வளராமல் போய்விட வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே முடி அதிகமாக உதிரும் பொழுதே கவனிக்க வேண்டும்.

ஒரு முடி கூட கொட்டாமல், கொத்து கொத்தாக முடி வளர செய்ய வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை ஷாம்புவாக இயற்கையாக முறையில் தயாரிக்க வேண்டும். இந்த இயற்கை ஷாம்பூ உபயோகிக்கும் பொழுது, செயற்கை ஷாம்பூவை பயன்படுத்தக் கூடாது. ஷாம்பூவுக்கு மாற்றாக எளிதான இயற்கை முறையில் தலையை அலசி தலை முடியை பாதுகாக்க என்ன செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

ஷாம்பூவில் இருக்கும் ரசாயன கலவைகள் நம் தலை முடி பிரச்சனையை அதிகரிக்க செய்து கொண்டிருக்கிறதே தவிர, குறைக்க செய்வது இல்லை. செயற்கை முறையை கைவிட்டு விட்டு முற்றிலுமாக ஷாம்பூ போடுவதை நிறுத்தி விடுங்கள். அதற்கு பதிலாக இயற்கையான முறையில் இப்படி தலையை அலசினால் தலைமுடி உதிர்தல் பிரச்சனை வேகமாக குறைய தொடங்கும். அதன் பிறகு மீண்டும் கொத்து கொத்தாக உங்களுடைய பழைய முடி வளரவும் செய்யும்.

இந்த இயற்கை ஷாம்பூ அதிகமான குளிர்ச்சி தன்மை கொண்டது. எனவே சைனஸ் பிரச்சினை, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் இதை செய்யக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இதை பயன்படுத்தும் பொழுது இருமல் அல்லது தலைபாரம், சளி பிடிப்பது போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால் நிறுத்தி விடுவது நல்லது. மற்றவர்கள் இதை தாராளமாக பயன்படுத்தி பலன் பெறலாம்.

- Advertisement -

முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதே மாதிரி ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு பச்சை பயறை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். ஒரு நாள் முழுவதும் ஊறிய பின்பு தண்ணீரை வடிகட்டி விடுங்கள். பின்னர் இதை உலர்ந்த காட்டன் துணியில் மூட்டை போல கட்டி ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ளுங்கள்.

ஒரு நாளில் இது முளைவிட ஆரம்பிக்கும். நன்கு முளைவிட்ட பிறகு அதை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் நான்கு சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேருங்கள். அரைப்பதற்கு அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்துங்கள். மிக்ஸியை இயக்கி நைசாக அரைத்து எடுத்த பின்பு, அதை தலை முழுவதும் வேரிலிருந்து நுனி வரை நன்கு தடவி ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு அலசினால் நுரைக்க ஆரம்பிக்கும். அந்த நுரையே உங்களுக்கு ஷாம்பூ போல செயல்படும். பிறகு தண்ணீர் ஊற்றி தலையை நன்கு அலசி வந்து விடுங்கள். இது போல வாரம் ஒரு முறை செய்தால் உங்களுடைய முடி வளர்ச்சி அபரிமிதமாக நிச்சயம் இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -