உங்கள் வீட்டு ஹாலில் இதை வைத்தால் குடும்பத்தில் சண்டையே வராதாம், பணம் கொட்டுமாம் தெரியுமா? ஹாலில் எப்போதும் இருக்க வேண்டிய தெய்வீகப் பொருள் என்ன?

hall-pachai-karpooram
- Advertisement -

நம்முடைய வீட்டில் பிரதான பகுதியாக இருக்கக்கூடிய வரவேற்பு அறையை ‘ஹால்’ என்கிறோம். இந்த ஹாலில் எப்பொழுதும் நேர்மறையான அதிர்வலைகள் இருக்கும் படியான பொருட்களை அமைக்க வேண்டும். அப்போது தான் வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு விதமான உற்சாகம் எப்போதும் தொற்றிக் கொண்டிருக்கும். இது எவ்வளவு பிரச்சினைகளையும் சமாளிக்க கூடிய ஒரு உத்வேகத்தை நமக்கு கொடுக்கும். அவ்வகையில் நம்முடைய ஹாலில் இருக்க வேண்டிய தெய்வீகப் பொருள் என்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஆன்மீகத்தில் சில குறிப்பிட்ட பொருட்களுக்கு எதிர்மறை ஆற்றல்களை துரத்திவிட்டு, நேர்மறை ஆற்றல்களை பெருக செய்யக் கூடிய அற்புதமான சக்தி உண்டு. இதை ரொம்பவே சூட்சுமமாக பலரும் பின்பற்றி வருவது உண்டு. குறிப்பாக வட மாநிலத்தவர்கள் பின்பற்றக் கூடிய ஒரு முக்கிய குறிப்பாகும் இவற்றில் சில இருக்கக்கூடும்.

- Advertisement -

வீட்டின் வரவேற்பறையில் எப்பொழுதும் பெரிய பெரிய உருவங்கள் இருக்கும் படியான அமைப்பு இருப்பது நல்லது. அவற்றில் சில உருவங்கள் அதிர்ஷ்டம் தரக்கூடியவையாக இருக்கின்றன. அவ்வகையில் யானை உருவம், குதிரைபடம், மகாலட்சுமியின் திருவுருவப்படம், வீணை வாசிப்பது போன்ற படங்கள் அல்லது வீணை போன்றவை இடம் பெற்றிருப்பது நல்ல ஒரு அதிர்வலைகளை உண்டு பண்ணக் கூடிய அற்புதமான பொருட்களாகும்.

‘என்னைப்பார் யோகம் வரும்’ என்று கழுதை படத்தை மாட்டி சிலர் வைத்திருப்பார்கள். அது போல ஏழு குதிரைகள் ஓடும் படம் சிலர் மாட்டி வைப்பது உண்டு. இத்தகைய படங்கள் வாஸ்து ரீதியாக நமக்கு நல்ல ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியதாக குறிப்பிடப்படுகிறது. அவ்வகையில் ஆன்மீக ரீதியாக ஒரு செம்பு அல்லது பித்தளை அல்லது வெள்ளி பாத்திரத்தில் முக்கால் பாகம் சுத்தமான பன்னீர் அல்லது தண்ணீரை ஊற்றி வையுங்கள். அதனுடன் நான்கைந்து ஏலக்காய்களையும், ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை நொறுக்கி சேருங்கள். பின்னர் இரண்டு கிராம்பு போட்டு அப்படியே யாருடைய கைகளிலும் தட்டுப்படாமல் மேலே உங்களுடைய வசதிக்கு ஏற்ப எங்காவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு நாட்கள் மாற்றுவது மிகவும் நல்லது.

- Advertisement -

பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு ஆகியவை சேரும் பொழுது அதனுடைய நறுமணம் வீடு முழுவதும் பரவ ஆரம்பிக்கும். வடமாநிலங்களில் இருப்பவர்கள் ஒரு கிண்ணம் நிறைய ஏலக்காய், கிராம்பை நிரப்பி இது போல வைத்திருப்பார்கள். ஏலக்காய் நிரப்பிய பாத்திரம் இருந்தால் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது. அது போல தென் மாநிலத்தவர்கள் இவ்வகையில் வரவேற்பறையில் இந்த மூலிகை பொருட்கள் கலந்த தீர்த்தத்தை வைப்பது வழக்கம், இப்படி நீங்களும் வைத்து பாருங்கள்.

உங்களுடைய வீட்டில் எந்த விதமான எதிர்மறை ஆற்றல்கள் இருந்தாலும் அவை நீங்கி உங்களுடைய குடும்பத்தில் நல்லதொரு மாற்றம் ஏற்படுவதற்கு வழி வகை செய்யும். எப்பொழுதும் வீட்டை சுத்த பத்ததுடன் வைத்திருங்கள். அது போல வரவேற்பரையில் குப்பைகளைச் சேர்க்காமல், பரண் போன்றவற்றை அமைக்காமல் இருப்பது மிகவும் நல்லது. வெளியிலிருந்து வருபவர்கள் நம் வீட்டுக்குள் வரும் பொழுதே இத்தகைய நறுமணங்களை சுவாசிக்கும் பொழுது அவர்களையும் மீறி நம்மை பார்த்து பொறாமைப் படாமல் மனதிற்குள் வாழ்த்திவிட்டு செல்வார்கள், இதனால் கண் திருஷ்டிகளும் கழியும்.

- Advertisement -