இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரின் முடிவை நிர்ணையிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது . இந்நிலையில் நாளைய போட்டி குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி நாளைய போட்டிக்கான மைதானம் ஒரு பேட்டிங் பிட்ச் ஆகும். குறைந்தபட்சம் 168 ரன்கள் அடிக்க கூடிய அளவுக்கு மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்வது அணிக்கு உதவும்.
மேலும், நாளை ஹாமில்டன் நகரம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதால் மழை வர சிறிதளவு வாய்ப்பு இருக்கும். இருப்பினும் போட்டி நடைபெறும்போதே முழுநிலவரம் தெரியும். போட்டி நியூசிலாந்தில் மாலையில் துவங்குவதால் குளிர் இருக்கும் என்று பிட்ச் ரிப்போர்ட் கூறியுள்ளது.
இருப்பினும் வீரர்கள் ஏற்கனவே அங்குள்ள சூழ்நிலைகளுக்கு பழகியுள்ளதால் அது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது. என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், நாளைய போட்டியில் வெற்றி பெரும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் நாளைய போட்டியில் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்பலாம்.
இதையும் படிக்கலாமே :
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்