மராட்டிய மன்னன் சிவாஜியை அனுமனே நேரில் சென்று காத்த உண்மை சம்பம்

sivaji-5-1
- Advertisement -

இராமாயணக் காலத்தில் “ஸ்ரீ ராமருக்காக” தன் உயிரையும் பொருட்படுத்தாது, தன்னிகரில்லா சேவையாற்றியவர் “ஸ்ரீ ஆஞ்சநேயர்”. தன் பிரபு ஸ்ரீராமர் வைகுண்டம் சென்ற பிறகு “ஸ்ரீ ராமரின் புகழைப் பாடிக்கொண்டே இன்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அனுமன் தன்னை வழிபடும் பக்தர்களை பல நெருக்கடியான சூழ்நிலைகளில் ரட்சித்த நிகழ்வுகள் பல. அப்படியான ஒரு சம்பவம் தான் இது.

Sivaji

அது முகலாயர்களின் ஆட்சிக்காலம். அந்த முகலாயர்களின் மதவெறியால் இந்துக்கள் துன்புற்ற போது அவர்களுக்கு ஆன்மிக சக்தியளிக்க “ஸ்ரீ ராமதாசரும்”, “ஸ்ரீ பக்த துக்காரமும்” மராட்டிய மண்ணில் அவதரித்தனர். அதே காலத்தில் தன் வீரவாளின் மூலம், தன் திடீர் தாக்குதலின் மூலம் முகலாயர்களின் தூக்கத்தைக் கெடுத்து அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய “மராட்டிய சிங்கம் மாவீரன் சத்ரபதி சிவாஜியும்” அவதரித்தார். மேற்சொன்ன ஸ்ரீ ராமதாசரையும், பக்த துக்காராமையும் தன் ஆன்மிக குருவாக வாய்க்கும் பேறு பெற்றார் சிவாஜி.

- Advertisement -

அப்படி ஒரு சமயம் வனத்திலிருந்த “ஸ்ரீ ராமதாசரின்” ஆசிரமத்திற்கு தன் வீரர்கள் துணையின்றி தனியாகவே வந்தார் சிவாஜி. அப்போது “ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு” பூஜைகள் செய்து கொண்டிருந்த ராமதாசர், சிவாஜியை உள்ளே அழைத்து அப்பூஜையில் பங்கேற்கச் செய்தார். அப்பூஜையில் பங்கேற்ற சிவாஜி ஆழ்ந்த தியான நிலைக்கு சென்றார். அப்போது ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியில் வந்த ராமதாசர், முகலாய வீரர்கள் சிவாஜி தனியாக இந்த ஆசிரமத்திற்கு வந்ததை அறிந்து, அவரை கொல்வதற்கு இந்த ஆசிரமத்தை சுற்றிவளைத்து மெதுவாக முன்னேறிக்கொண்டிருந்ததைக் கண்டார், உடனே தன் சீடன் சிவாஜிக்கு எவ்வித ஆபத்து நேரக்கூடாதென தன் தெய்வமான “அனுமனை” வணங்கினார்.

Sivaji

அப்போது ஒரு அதிசயம் நடந்தது. எங்கிருந்தோ திடீரென்று வந்த காட்டுக்குரங்குகள் கூட்டம், ஆசிரமத்தை நோக்கி முன்னேறிய முகலாய வீரர்களை கடித்து குதறத் தொடங்கின. குரங்குகளின் இந்த முரட்டுத்தனமான தாக்குதலைத் தாங்க முடியாமல் முகலாய வீரர்கள் அங்கிருந்து தலைத் தெறிக்க ஓடினர். சற்று நேரம் கழித்து தியானம் கலைந்த நடந்ததெல்லாம் கேள்விப்பட்ட சிவாஜி, ராமதாசருக்கு நன்றி கூறினார்.

- Advertisement -

hanuman

அப்போது ராமதாசர் தான் சிவாஜியின் உயிரை காப்பாற்றவில்லை என்றும் தான் வழிபடும் “ஸ்ரீ அனுமனே” சிவாஜியை காப்பாற்றியதாக கூறினார். “ஸ்ரீ அனுமன்” தனக்கு அருள்புரிந்ததை எண்ணி மெய்சிலிர்த்தார் வீர சிவாஜி.

இதையும் படிக்கலாமே:
விக்ரமாதித்தன் கதைகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

இது போன்று மேலும் பல ஆன்மீக கதைகள், சிறுவர் கதைகள் என பலவற்றை அறிய தெய்வீகம் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

- Advertisement -