இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் துவங்கியது. நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் நியூசிலாந்து அணி செய்தது. அதன்படி துவக்க வீரர்களாக குப்தில் மற்றும் முன்ரோ ஆகியோர் களமிறங்கினர்.
இந்த போட்டியிலும் துவக்க ஜோடி சிறப்பான துவக்கத்தை அளிக்க தவறியது. அந்த அணியின் முன்ரோ 7 ரன்கள் அடித்து ஷமி பந்தில் வெளியேறினார். பின் குப்தில் ஷமி கேப்டன் கேன் வில்லியம்சன் இணைந்தார். இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. குப்தில் 13 ரன்கள் அடித்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து 17 ஓவரை வீசவந்தார் சாஹல் அந்த ஓவரின் இரண்டாவது பந்தை தூக்கி அடிக்க முயன்றார் வில்லியம்சன். அந்த பந்து காற்றில் பறந்தது அப்போது கவர் திசையில் நின்றிருந்த பாண்டியா அதனை லாவகமாக பாய்ந்து பிடித்தார். அந்த கேட்ச் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த கேட்ச் உங்களுக்காக :
#teamindia #HardikPandya
Awesome catch … pic.twitter.com/41Ap3cQLJP— shankar more (@We_Indians_) January 28, 2019
தற்போது நியூசிலாந்து அணி 43 ஓவர்கள் முடிவில் 206 ரன்களை அடித்து 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. டெய்லர் 81 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் சதத்தை நோக்கி சிறப்பாக விளையாடி வருகிறார்.
இதையும் படிக்கலாமே :
இந்தியாவிற்கு எதிராக 1000 ரன்கள், தேவையான நேரத்தில் அரைசதம் சாதனை படைத்த – நியூசி வீரர்
மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்