இந்தியாவிற்கு எதிராக 1000 ரன்கள், தேவையான நேரத்தில் அரைசதம் சாதனை படைத்த – நியூசி வீரர்

Ross
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் இன்று துவங்கியது. நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை அணி செய்தது. அதன்படி துவக்க வீரர்களாக குப்தில் மற்றும் முன்ரோ ஆகியோர் களமிறங்கினர்.

toss

இந்த போட்டியிலும் துவக்க ஜோடி சிறப்பான துவக்கத்தை அளிக்க தவறியது. அந்த அணியின் முன்ரோ 7 ரன்கள் அடித்து ஷமி பந்தில் வெளியேறினார். பின் குப்தில் உடன் கேப்டன் கேன் வில்லியம்சன் இணைந்தார். இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 13 ரன்கள் அடித்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

பிறகு, ராஸ் டெய்லர் களமிறங்கினார். வில்லியம்சன் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இக்கட்டான நிலையில் இருந்த நியூசிலாந்து அணியை தற்போது அரைசதம் அடித்து உயிர்ப்புடன் வைத்துள்ளார் ராஸ் டெய்லர். தற்போதுவரை அவர் 55 ரன்களை அடித்து களத்தில் உள்ளார். இவரது பேட்டிங் மட்டுமே தற்போது நியூசிலாந்து அணிக்கு சிறிய ஆறுதலாக இருக்கும்.

ross taylor

மேலும், இந்த போட்டியில் ராஸ் டெய்லர் 14 ரன்கள் அடித்திருந்தபோது அவர் இந்திய அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். தற்போதுள்ள நியூசிலாந்து அணியில் இவர் மட்டுமே இந்திய அணிக்கு எதிராக அதிகம் ஆடிய அனுபவ வீரர் ஆவார் .

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

தனது ஓவரில் சிக்ஸ் அடித்த குப்திலை அவுட் ஆக்கி பழிதீர்த்த இந்திய அணி வீரர் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -