இனிமேல் வாழ்க்கையில் வரக்கூடிய தோல்வியை சந்திக்க உங்களுடைய மனதில் தெம்பு இல்லையா? எடுத்த காரியத்தில் வெற்றி பெற விநாயகரது இந்த 2 வரி மந்திரம் போதுமே.

- Advertisement -

நிறைய பேர் தங்களுடைய வாழ்க்கையில் திரும்பத் திரும்ப தோல்வியை சந்தித்து துவண்டு போய் இருப்பார்கள். ஒரு காரியத்தை புதியதாக முயற்சி செய்யவேண்டும் என்று நினைத்தாலே அவர்களுக்கு அத்தனை நடுக்கம் வந்துவிடும். காரணம், தோல்வி தந்த வலிகள். தோல்வியைக் கண்டு இனி நீங்கள் பயப்படவே வேண்டாம். புதியதாக முயற்சிகளை எடுக்கும் போது விநாயகரை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு அதன் பின்பு உங்களுடைய வேலையை தொடங்கினால், அந்த வேலை கட்டாயமாக உங்களுக்கு சாதகமாக முடியும். உங்களுக்கு இருக்கக்கூடிய காரியத் தடை விலகும். வெற்றியை கொடுக்க கூடிய விநாயகரது அந்த மந்திரம் என்ன? இந்த பதிவின் மூலம் நாமும் தெரிந்து கொள்வோமா.

vinayagar-abishegam

காலையில் எழுந்த உடன் சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறைக்கு வந்து, விநாயகருக்கு ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விட வேண்டும். அதன் பின்பு விநாயகரை மனதார நினைத்து மூன்று தோப்புக்கரணம் போட்டு கொள்ளுங்கள். மூன்று பிள்ளையார் கொட்டைகளையும் வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி விட வேண்டும். உங்களுக்கு எந்த ஒரு காரியத்திலும் தடை வரக்கூடாது என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அதன் பின்பு விநாயகரின் திருவுருவப் படத்திற்கு முன்பாக அமர்ந்து பின் வரும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான ஹேரம்ப விநாயகர் மந்திரம் இதோ.

- Advertisement -

ஓம் நமோ ஹேரம்ப
மதமோதித மம கஷ்டம்
நிவாரய நிவாரய ஓம்

karpaga-vinayagar

இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு நமஸ்காரம் செய்து கொண்டு உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். அதன் பின்பு உங்களுடைய தினசரி வேலையைத் தொடங்கி பாருங்கள். எதை தொட்டாலும் தோல்வி தோல்வி தோல்வி என்று இருந்த உங்களுடைய வாழ்க்கை, இந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்கிய பிறகு வெற்றி வெற்றி வெற்றி என்று மாறும்.

- Advertisement -

வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவதற்கு, பண கஷ்டத்தில்  இருந்து வெளியே வருவதற்கு, மனக்கஷ்டங்கள் சரியாவதற்கு, குடும்பத்தில் ஒற்றுமை நிலவுவதற்கு, எதிரிகள் தொல்லை நீங்குவதற்கு, உடல் உபாதைகள் சரியாவதற்கு, குழந்தைகள் நல்ல படிப்பினை பெறுவதற்கு என்று இப்படி உங்களுக்கு எந்த தேவைகள் இருந்தாலும் அந்த தேவையில் எந்த தடைகள் இருந்தாலும் விநாயகரிடம் முறையிட்டு இந்த மந்திரத்தை உச்சரித்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்து பாருங்கள்.

Vinayagar-1

உங்களுக்கு இருக்கக்கூடிய எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் அது தண்ணீரில் கரைத்த பெருங்காயம் போல காணாமல் போய்விடும். இந்த மந்திரத்தை இத்தனை நாட்கள்தான் உச்சரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களுக்கு எப்போது தேவையோ அப்போது பயன்படுத்திக் கொள்ளலாம். தினம்தோறும் சொல்லலாம். அப்படி இல்லை என்றால் முக்கியமான காரியங்களுக்கு வெளியே செல்லும் போது கூட சொல்லி விட்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

vinayagar-5

இந்த மந்திரத்தை மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டீர்கள் என்றால், ஒரு நல்ல காரியத்திற்கு செல்லும் போது, எடுத்துக்காட்டிற்கு இன்டர்வியூக்கு செல்லும்போது அந்த இடத்திலேயும் மனதுக்குள்ளேயே உச்சரித்துக் கொண்டிருந்தால், மன பயம் நீங்கி, புதியதாக ஒரு தெம்பு பிறக்கும் முயற்சி செய்து பாருங்களேன். பக்தியோடு நீங்கள் செய்யும் எந்த ஒரு பூஜைக்கும் முழு பலன் நிச்சயம் உண்டு என்ற நம்பிக்கையோடு அந்த விநாயகப் பெருமானை மனதில் நினைத்துக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -