அழகுக்கும் அழகு சேர்க்கும் அழகிய குளியல் பொடி இது. இந்த குளியல் பொடியை பயன்படுத்தி குளித்து வந்தால், ஆயிசுக்கும் செயற்கையான அழகை தேடி நாம் போகவே வேண்டாம்.

face13
- Advertisement -

உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகள் உதிர, தோல் சுருக்கம் ஏற்படாமல் இருக்க, சருமத்தில் சின்ன சின்ன கொப்புளங்கள் வராமல் இருக்க, வியர்வை துர்நாற்றம் வீசாமல் நம்முடைய உடம்பு எப்போதும் வாசமாக இருக்க, உடம்பு குளிர்ச்சியாக இருக்க, உடம்பில் இருக்கும் இறந்த செல்களை நீக்க, இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய ஒரு பொடி இது.  நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக வாங்கி போட்டு அரைத்து குளியல் பொடி தயார் செய்து வைத்து பயன்படுத்தி வாங்க. நீங்க ஆய்சுக்கும் அழகாக இருக்கலாம்.

இந்த பொடி தயார் செய்ய எந்தெந்த பொருட்கள் என்னென்ன அளவுகளில் தேவை என்பதை பார்த்து விடுவோம். கடலை மாவு அல்லது பயத்த மாவு உங்களுடைய சருமத்திற்கு எது செட் ஆகுமோ அதை 200 கிராம் அளவு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கோரைக்கிழங்கு 20 கிராம், பூலாங்கிழங்கு 20 கிராம், கார்போக அரிசி 20 கிராம், மகிழம்பூ 20 கிராம், கஸ்தூரி மஞ்சள் 30 கிராம், ஆவாரம்பூ 20 கிராம், வெட்டிவேர் 20 கிராம், காய்ந்த ரோஜா இதழ் 30 கிராம், இந்த எல்லா பொருட்களையும் நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளுங்கள். எல்லாமே காய்ந்த பொருட்களாக உங்களுக்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை எல்லாம் வாங்கி நைசாக பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த இந்த பொடியோடு கடலை மாவு அல்லது பயத்த மாவு அல்லது பாசிப்பயறு மாவை சேர்த்து நன்றாக கலந்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்தால், நாம் குளிப்பதற்கு தேவையான குளியல் பொடி தயார். (இதை ஃப்ரிட்ஜில் சோறு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.) இந்த குளியல் பொடியை எப்படி பயன்படுத்துவது. இதை உடம்புக்கு ஸ்கிரப்பர் போல தேய்த்து குளிக்கப் போகின்றோம். இந்த குளியல் பொடியை பயன்படுத்துவதற்கு முன்பு உங்களுடைய உடம்பு முழுவதும் லேசாக ஆயில் தடவிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

நல்லெண்ணெய், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய், என்று உங்கள் வீட்டில் எந்த ஆயில் இருக்கிறதோ அதை உடல் முழுவதும் தேய்த்து நன்றாக இரண்டு நிமிடம் மசாஜ் செய்துவிட்டு அதன் பின்பு இந்த குளியல் பொடியை கொஞ்சமாக தண்ணீரில் போட்டு பேஸ்ட் போல கலந்து உடல் முழுவதும் தேய்த்து வட்ட வடிவில் ஸ்க்ரப் செய்து குளித்துப் பாருங்கள். உங்களுக்கே உங்கள் உடம்பில் ஏற்படும் வித்தியாசம் நன்றாகத் தெரியும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த குளியல் பொடியை பயன்படுத்தலாம். இதை பெண்கள் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். 12 வயதிற்கு மேலே இருக்கக்கூடிய எல்லா பெண் குழந்தைகளுக்கும் இந்த பொடியை பயன்படுத்தி வரலாம். இந்த பொடியில் நாம் பயன்படுத்தி இருக்கும் கோரைக்கிழங்கு கஸ்தூரி மஞ்சள் போன்ற பொருட்கள் முடி உதிர்வை கட்டுப்படுத்த கூடியவை. குறிப்பாக பெண்களுடைய அக்குள் பகுதியில் இந்த பொடியை தேய்த்து குளிக்கலாம். தேவையற்ற முடி வளர்ச்சி அதிகமாக இருக்கக்கூடிய இடத்தில் இந்த பொடியை பயன்படுத்தினால் அந்த இடத்தில் முடி வளர்ச்சி சீக்கிரம் தடைபடும். பெண்கள் இந்த குளியல் பொடியை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது அவங்களுடைய சருமம் ரொம்ப ரொம்ப அழகா மாறிடும். உங்களுக்கு ரெமிடி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -