செம்பருத்தி பூ போல உங்களுடைய சருமமும் அழகாக செக்க செவேலென மாறவேண்டுமா? வெறும் 10 நிமிடம் போதும். இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்களேன்.

face6
- Advertisement -

செம்பருத்தி பூ போல உங்களுடைய முகமும் மேக்கப் எதுவும் போடாமலேயே பார்ப்பதற்கு பிங்க் கலர்ல இருந்தா சந்தோஷமா தான் இருக்கும். அதுவும் இப்போது வரப்போவது பண்டிகை காலம். பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். முகம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சரி சரி, ஆண்களும் அழகாக இருக்க வேண்டுமென்று தான் நினைப்பார்கள். ஆண்களும் இந்த குறிப்பை தாராளமா ட்ரை பண்ணி பார்க்கலாம். ‘செம்பருத்தி செம்பருத்தி பூவை போல பெண் ஒருத்தி’ என்ற பாடல் வரிகளுக்கு இணையான ஒரு குறிப்பு தான் இது.

செம்பருத்தி பூ சிவப்பாக தானே இருக்கும். பிங்க் கலரில் இருக்காது என்று நினைக்காதீர்கள். உங்களுடைய முகம் பார்ப்பதற்கு பிங்கிஷா இருக்கணும் அப்படின்னா, இந்த டிப்ஸை ட்ரை பண்ணலாம். எந்த ஒரு பக்கவிளைவுகளும் வராத ரெமிடி. இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து நம்முடைய முகத்தை வெறும் 10 நிமிடத்தில் எப்படி அழகாக மாற்றலாம். நேரத்தைக் கடத்தாமல் குறிப்பை தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

ஒரு சிறிய பௌவுல் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நாட்டு சர்க்கரை – 1 ஸ்பூன், செம்பருத்தி பொடி – 1 ஸ்பூன், கடலை மாவு – 1 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து பேஸ்ட் போல தயார் செய்ய லிக்விட் ஆக இருக்கக் கூடிய ஒரு பொருள் நமக்குத் தேவை .

எடுத்துக்காட்டுக்கு தயிர், பால், ரோஸ் வாட்டர், அலோ வேரா ஜெல், கேரட் ஜூஸ், பீட்ரூட் ஜூஸ், தக்காளி பழச்சாறு, அல்லது வெறும் பச்சை தண்ணீர் இதில் ஏதாவது ஒன்றை தேவையான அளவு எடுத்து, நாம் எடுத்து வைத்திருக்கும் பொடியுடன் கலந்து, இதை ஒரு பேஸ்டாக தயார் செய்து உங்களுடைய முகத்தில் கீழிருந்து மேல் பக்கமாக நன்றாக அப்ளை செய்து, 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்பு உங்கள் முகம் நன்றாக உலர்ந்துவிடும். உங்கள் கையில் கொஞ்சம் தண்ணீரை தொட்டு உங்கள் முகத்தை நனைத்து விட்டு அப்படியே உங்கள் கையை வைத்து வட்ட வடிவத்தில் முகத்தை மசாஜ் செய்து கொடுக்க வேண்டும்.

- Advertisement -

5 நிமிடங்களில் இருந்து 7 நிமிடங்கள் ஜென்டிலாக முகத்தை மசாஜ் செய்தால் போதும். (குறிப்பாக மூக்கின் இடுக்குகள், தாடைப் பகுதி வாயை சுற்றி உள்ள கருமையான பகுதியில் நன்றாக மசாஜ் செய்யவும்.) பின்பு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட்டு ஒரு காட்டன் துணியை வைத்து முகத்தை துடைத்துவிட்டு நீங்களே கண்ணாடியில் சருமத்தை பாருங்கள். லேசான பிங்க் நிறத்தில் உங்களுடைய முகம் இன்ஸ்டன்ட் மாறியிருக்கும்.

செம்பருத்தி பூ பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது. ஆன்லைனில் வாங்குபவர்கள் வாங்கிக்கொள்ளலாம். எங்களுக்கு இதெல்லாம் எதுவுமே தேவை இல்லை. எங்கள் வீட்டின் அருகில் செம்பருத்தி மரமே உள்ளது என்றால், செம்பருத்திப் பூவைப் பறித்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, அதில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து பயன்படுத்தினால் இன்னும் சூப்பரான ரிசல்ட் கிடைக்கும்.

செம்பருத்தி பூவுக்கு நம்முடைய சருமத்தை மென்மையாக்க கூடிய, உடனடியாக பொலிவை கொடுக்கக்கூடிய தன்மை உள்ளது. வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படி செய்து கொள்ளலாம். இல்லை, உடனடியாக நாளைக்கு நான் வெளியே செல்ல வேண்டும். என்னுடைய முகம் ஜொலிக்க வேண்டும் என்பவர்கள் இரவு ஒரு முறை இப்படி செய்யுங்கள். காலை எழுந்த பின்பு ஒருமுறை இந்த ஃபேஸ் பேக்கை போட்டு கொள்ளுங்கள். அதன் பின்பு குளித்து விட்டு எப்போதும் போல வெளியே கிளம்பலாம். முகம் பார்ப்பதற்குப் பொலிவாக இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -