நீங்கள் எப்பொழுதும் இளமையாக இருக்கவும், முகம் பளிச்சென்று பொலிவுடன் இருக்கவும் இந்த ஒரு ரகசியப் பொருளை உங்கள் வீட்டில் நீங்களே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்

serum
- Advertisement -

அழகாக இருப்பது யாருக்குத் தான் பிடிக்காது. ஒவ்வொருவரும் எப்பொழுதும் தான் அழகாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் காலை எழுந்தது முதல் மாலை வீடு திரும்பும் வரை வேலை என்பது அனைவருக்கும் சரியாக இருக்கிறது. தன் உடல்நிலையையே கவனித்துக் கொள்வதற்கு பலருக்கும் நேரம் கிடைப்பதில்லை. இதில் தங்கள் அழகினை எப்பொழுது கவனிக்க அவர்களுக்கு நேரம் கிடைக்கிறது. இதனாலேயே வெளியில் சென்று வரும் பலரும் முகம் பொலிவில்லாமல் எப்பொழுதும் தோய்வாகவே இருப்பார்கள். இவ்வாறு இருப்பவர்களின் முகம் வசீகரமாக மாற, இந்த ஒரு பொருளை தயார் செய்து வைத்துக்கொண்டால் போதும். தினமும் காலை அல்லது இரவு ஏதேனும் ஒருவேளை இதனை முகத்தில் லேசாக தடவி விட்டால் மட்டும் போதும். நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு முகத்தில் இருக்கும் கருமை நிறம், முகப்பரு தழும்பு, முகச்சுருக்கம், கரும்புள்ளிகள் அனைத்தும் மறைந்து எப்பொழுதும் இளமையாகவே இருப்பீர்கள்.

தேவையான பொருட்கள்:
ஆரஞ்சு பழத்தோல் – 1, ரோஸ் வாட்டர் – 2 ஸ்பூன், கிளிசரின் – அரை ஸ்பூன், விட்டமின் இ ஆயில் மாத்திரை – 3, அலோ வேரா ஜெல் – 3 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு ஆரஞ்சு பழத்தின் தோலை உரித்து, அதனை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு இவற்றை ஒரு தட்டில் பரவலாக வைத்து, வெயிலில் உலர வைக்க வேண்டும். இந்த தோல் நன்றாக காய்ந்ததும் இதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ள வேண்டும்.

பிறகு ஆரஞ்சு பழத்தோலுடன் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர், அரை ஸ்பூன் கிளிசரின் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் 3 விட்டமின் இ மாத்திரைகளை எடுத்துக் கொண்டு, அதனை கட் செய்து இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, ஒரு தட்டு போட்டு மூடி, 6 மணி நேரம் அப்படியே விட்டுவைக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு ஒரு வடிகட்டியை வைத்து இதில் இருக்கும் சக்கைகளை வடிகட்டி சாறை மட்டும் தனியாக எடுக்க வேண்டும். பின்னர் ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் அளவு அலோ வேரா ஜெல் எடுத்துக்கொண்டு, அதனுடன் இந்த ஆரஞ்சு பழத் தோலின் பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பிறகு இதனை பத்திலிருந்து இருபது நிமிடம் வரை நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும். இவற்றில் நுரை எழும்பி சாஃப்ட்டாக மாறி வரும் வரை நன்றாக ஸ்பூன் அல்லது ஃபோக் வைத்து கலந்து கொண்டே இருக்க வேண்டும். பிறகு இந்த கலவையை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேவைப்படும் நேரத்தில் எல்லாம் இதிலிருந்து இரண்டு அல்லது மூன்று சொட்டு எடுத்து முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்து அப்படியே விட்டுவிட்டால் போதும். தினமும் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர உங்கள் நிறம் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பளிச்சென்று மாறிவிடும்.

- Advertisement -