வீட்டை சுற்றி இந்த செடிகள் இருந்தால் உங்கள் கையில் பணம் சேரவே சேராது தெரியுமா? பணம் சேர உடனே செடிகளை அகற்றி விடுங்கள்!

home-cash
- Advertisement -

நம் வீடு என்பது ஒரு மிகப்பெரிய பொக்கிஷமாக இருக்கிறது. மனிதன் வாழக்கூடிய இடம் சரியான திசையில் வாஸ்துபடி அமைய பெற்றிருந்தால் அதற்கு உரிய நற்பலன்களும் கிடைக்கப் பெறுகிறது. ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றலை ஈர்க்கக்கூடிய சக்தி உண்டு, இதனால் தான் தலை வைத்து படுத்து உறங்கும் திசை வடக்காக இருக்கக் கூடாது என்று கூறுவார்கள். இந்த வகையில் வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த சில செடிகள் நம்முடைய பணவரவை தடை செய்வதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய செடிகள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வடக்கு திசையில் ஒருவர் தலை வைத்து தூங்கினால் அவர்களுடைய மகிழ்ச்சியானது பறி போகுமாம். இறந்த ஒருவரது தலையை வடக்கில் வைத்து தான் படுக்க வைப்பார்கள். மனிதனுடைய தலைப்பகுதி நேர் மின்னோட்டத்தையும், கால்பகுதி எதிர் மின்னோட்டத்தையும் கொண்டுள்ளது. அதே போல திசைகளில் வடக்கு திசை நேர் மின்னோட்டமும், தெற்கு திசை எதிர் மின்னோட்டமும் கொண்டுள்ளது.

- Advertisement -

எப்பொழுதும் ஒரே மின்னோட்டங்கள் இடையே இடையூறுகள் ஏற்படுகிறது. எதிராக இருந்தால் மின்னோட்டங்கள் ஈர்க்கப்பட்டு விடும் ஆனால் இப்படியான ஒரே மின்னோட்டங்கள் இருக்கும் திசையில் தலை வைத்து படுக்கும் பொழுது உங்களுக்கு ஆரோக்கியத்தில் பெரும் அளவு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நிதி சார்ந்த பிரச்சினைகளும், செல்வ சேர்க்கையும், மன நிம்மதியும் இதனால் தடைப்படுகிறது.

அதே போல வீட்டை சுற்றிலும் வளர்க்கக்கூடிய இந்த செடிகள் தேவையற்ற அதிர்வலைகளை உண்டு பண்ணுகிறது. இது இருக்கும் திசையை பொறுத்தும் நமக்கு பல்வேறு விதமான சிக்கல்களும், பிரச்சனைகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்று எச்சரிக்கிறது வாஸ்து சாஸ்திரம். எனவே வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய களை செடிகளை முதலில் அப்புறப்படுத்த வேண்டும். வீட்டை சுற்றிலும் களை செடிகள், தேவையற்ற முட்செடிகள் போன்றவை கட்டாயம் இருக்கக் கூடாது.

- Advertisement -

பயன் தரும் அல்லது கண்களுக்கு குளிர்ச்சியான மற்றும் தெய்வீக மூலிகை பொருட்களை வீட்டை சுற்றிலும் வளர்க்கலாம். ஆனால் முட்செடிகள், விஷம் நிறைந்துள்ள செடிகள் போன்றவற்றை வளர்க்க கூடாது. அது போல ரொம்பவும் வலிமையான ஆலமரம், அரசமரம் போன்றவற்றையும் வீட்டை ஒட்டி வளர்க்க கூடாது. இதனால் அதன் வேர் படர்ந்து வீட்டை இடித்து நொறுக்கும் அளவிற்கு சென்று விடும். மேலும் எருக்கஞ்செடி, கள்ளி செடி, சப்பாத்திக்கள்ளி, புதர் செடிகள், மூங்கில் கொம்புகள், சுவற்றைத் துளைத்துக் கொண்டு வளரும் செடிகள், தாழம்பூ செடி, மூக்குத்தி செடி போன்றவை வீட்டை சுற்றிலும் உங்கள் சுவற்றுக்கு அருகாமையில் வளர்ந்து இருந்தால் அதை வேருடன் புடுங்கி எறிந்து விடுங்கள்.

இத்தகைய செடிகள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் அதனுடைய பலனும் அதிகம். இதில் ஒரு சில செடிகள் மிகுந்த மருத்துவ குணம் கொண்டுள்ளது. தீராத புண்ணையும் சரி செய்யும் ஆற்றல் மூக்குத்தி இலைக்கு உண்டு. இப்படியான செடிகளை நீங்கள் காலியான இடங்களில் வைத்து வளர்க்கலாம். ஆனால் வீட்டில் சுவற்றை ஒட்டி வளர்ந்து வந்தால் அதை வேருடன் புடுங்கி எறிந்து விடுவது தான் நல்லது. இதனால் பணத்தடை, வருமானத்தடை, நிம்மதி இன்மை போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்று நம்பப்படுகிறது. எனவே உங்கள் வீட்டை சுற்றிலும் இத்தகைய செடிகள் இருந்தால் உடனே அப்புறப்படுத்தி சுத்தம் செய்து விடுங்கள், நன்மைகள் பெருகும்.

- Advertisement -