என்றும் இளமையுடன் இருப்பதற்கு பாதாமை வைத்து இப்படி கிரீம் செய்து முகத்தில் அப்ளை செய்து பாருங்கள். பார்ப்பவர்கள் அனைவரும் கேட்கும் அளவிற்கு அழகுடனும், மெருகுடனும் மாறிவிடுவீர்கள்.

lady badam cream
- Advertisement -

முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் தான் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக அழகு நிலையங்கள் இருக்கின்றன. அழகு நிலையத்திற்கு செல்லாமல் கடைகளில் விற்கப்படும் கிரீம்களை வாங்கி முகத்தில் தடவிக் கொள்கிறோம். அதனால் முக சருமத்திற்கு பாதிப்புகள் தான் ஏற்படும். அதற்கு மாறாக நாமே வீட்டில் கிரீமை தயார் செய்து உபயோகப்படுத்தலாம். பாதாமை வைத்து எப்படி நம் வீட்டிலேயே கிரீம் தயார் செய்வது என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பருப்பு வகைகளில் ஒன்றுதான் பாதாம். இந்த பாதாம் எப்படி நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறதோ, அதே போல் தான் நம் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கக் கூடியதாக அமைகிறது. இப்படிப்பட்ட பாதாமில் நாம் கிரீம் செய்து உபயோகிப்பதன் மூலம் நம் முகம் என்றுமே இளமையாக இருக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? அந்த கிரீமை எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -

15 பாதாமை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பாதாமில் இருந்து தோலை உரித்து கொள்ள வேண்டும். பிறகு அந்த பாதாமை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். ஒருமுறை அரைத்து விட்டு, அதில் கால் கப் அளவிற்கு ரோஸ் வாட்டரை ஊற்றி அரைக்க வேண்டும். தண்ணீர் ஊற்றக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. நன்றாக அரைத்த பிறகு அதை வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் பாதாம் பால்.

இந்த பாதாம் பாலில் விட்டமின் இ கேப்ஸ்யூல் மூன்றை சேர்க்க வேண்டும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெயையும் சேர்க்க வேண்டும். அடுத்ததாக அதில் ஆலுவேரா ஜெல் 3 ஸ்பூன் சேர்க்க வேண்டும். வீட்டில் இருக்கும் இயற்கையான ஜெல்லை உபயோகப்படுத்த வேண்டும் என்றால் அதன் சதைப்பகுதியை சுத்தம் செய்து எடுத்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து சேர்க்க வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது இவை அனைத்தையும் நன்றாக ஸ்பூனை வைத்து கலக்க வேண்டும். அதை நாம் கலக்க கலக்க அது கிரீம் போன்ற பதத்திற்கு வரும். இந்த கிரீமை நாம் ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். பாதாம் கிரீம் தயாராகிவிட்டது. இதை நாம் 15 நாட்கள் வரை வெளியில் வைத்து உபயோகப்படுத்தலாம். இந்த கிரீமை இரவு நேரத்தில் நாம் படுக்க செல்வதற்கு முன்பாக முகத்தை நன்றாக கழுவி விட்டு முகத்தில் தடவிய பிறகு படுக்க வேண்டும்.

இவ்வாறு நாம் தொடர்ந்து செய்து வர நம் முகத்தில் இருக்கக்கூடிய தோல் சுருக்கங்களும், முகவறச்சிகளும் நீங்கும். மேலும் கரும்புள்ளிகளும் வடுக்களும் மறைய ஆரம்பிக்கும். இவை யாவும் இல்லை என்றால் நம் முகம் என்றும் இளமையாக பளிச்சென்று இருக்கும் அல்லவா.

இதையும் படிக்கலாமே: ஒரு ஸ்பூன் வெந்தயம் இருந்தால் போதும். ஒரே வாரத்தில் டல்லடிக்கும் உங்கள் சருமம் கூட, அப்படியே டால் அடிக்க தொடங்கி விடும். தங்கம் போல கன்னம் ரெண்டும் தக தகவென ஜொலிக்கும்.

கடைகளில் உள்ள கெமிக்கல் நிறைந்த கிரீம்களை உபயோகப்படுத்தாமல் நாமே எளிமையான முறையில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து கிரீம் தயார் செய்து உபயோகப்படுத்தி என்றும் இளமையுடன் இருப்போம்.

- Advertisement -