ஒரு ஸ்பூன் வெந்தயம் இருந்தால் போதும். ஒரே வாரத்தில் டல்லடிக்கும் உங்கள் சருமம் கூட, அப்படியே டால் அடிக்க தொடங்கி விடும். தங்கம் போல கன்னம் ரெண்டும் தக தகவென ஜொலிக்கும்.

face
- Advertisement -

யாருக்குத்தான் ஆசை இருக்காது. கன்னங்கள் இரண்டும் தங்கம் போல தக தகவென ஜொலித்தால். ஆனால் நம்முடைய முகம் அப்படியா இருக்குது. தங்கம் போல கூட ஜொலிக்க வேண்டாம். பார்க்கும் அளவுக்காவது கன்னங்கள் இருக்க வேண்டாமா. கரும்புள்ளிகள், முகப்பருகள், சின்ன சின்ன துவாரங்கள், சின்ன சின்ன கட்டிகள் இவையெல்லாம் சேர்ந்து பார்ப்பதற்கே ரொம்பவும் மோசமாக இருக்கிறது. இவ்வளவு பிரச்சனைகளையும் சரி செய்ய எவ்வளவோ அழகு குறிப்பை பின்பற்றினாலும் வொர்க் அவுட் ஆக மாட்டேங்குது, என்பவர்கள் இந்த அழகு குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். இயற்கையான பொருட்களை வைத்து குறைந்த செலவில் தான் இதை தயார் செய்ய போகின்றோம். தினமும் இரவு நேரத்தில் இந்த நைட் கிரீமை பயன்படுத்தி வர, முகத்தில் இருக்கும் மாசு மங்கு கண்ணுக்கே தெரியாமல் படிப்படியாக குறைய தொடங்கி விடும்.

தங்கம் போல சருமம் பளபளக்க அழகு குறிப்பு:
இந்த குறிப்புக்கு நமக்கு மூன்று பொருட்கள் தேவை. வெந்தயம், கஸ்தூரி மஞ்சள், ஆலோவேரா ஜெல். ஆலவேரா ஜெல்லில் எந்த ஒரு வாசனை திரவியமும், கலரும் இருக்கக் கூடாது. ட்ரான்ஸ்பரெண்டாக இருக்கும் அலோவேரா ஜெல்லை, ஆர்கானிக் ஆக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். முதலில் 1 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். பாத்திரத்தில் 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி அடுப்பில் வையுங்கள். இந்த தண்ணீரில் பொடித்து வைத்திருக்கும் வெந்தயத்தை போட்டு கொதிக்க வையுங்கள். 10 நிமிடத்தில் தண்ணீர் தள தளவென நன்றாக கொதிக்கும்.

- Advertisement -

வெந்தயத்தில் இருக்கும் எசென்ஸ் எல்லாம் தண்ணீரில் இறங்கி வந்திருக்கும். தண்ணீர் நன்றாக அரைபாகமாக சுண்டி வரட்டும். அப்போது அடுப்பை அணைத்துவிட்டு, அந்த தண்ணீர் நன்றாக ஆரிய பின்பு வடிகட்டிக் கொள்ளுங்கள். வெந்தய தண்ணீர் உங்களிடம் இப்போது இருக்கிறது. அது அப்படியே இருக்கட்டும். அடுத்து ஒரு சிறிய பவுலில் 2 டேபிள் ஸ்பூன் அலோவேரா ஜெல், 1/4 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் போட்டு நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த வெந்தய தண்ணீரை போட்டு நன்றாக அடித்து கலந்தால் சூப்பரான ஜெல் பதத்தில் பேஸ்ட் கிடைத்திருக்கும்.

இதை அப்படியே ஒரு சின்ன பாட்டிலில் ஸ்டோர் செய்து வெளியில் வைத்தால் 3 நாட்கள் கெட்டுப் போகாது. அதுவே ஃப்ரிட்ஜில் வைத்தால் 10 நாட்கள் கெட்டுப் போகாது. இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவி விட்டு இந்த கிரீமை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். ரொம்பவும் திக்காக அப்ளை செய்ய வேண்டாம்.

- Advertisement -

இந்த ஜெல்லை தொட்டு முகத்தில் ஆங்காங்கே சின்ன சின்ன புள்ளிகள் ஆக வைத்து, கழுத்திலும் சின்ன சின்ன புள்ளிகளாக வைத்து உங்கள் கையை வைத்து இரண்டு நிமிடம் வட்ட வடிவில் கீழிருந்து மேல் பக்கம் மசாஜ் செய்ய, இந்த கிரீம் சருமத்தில் இறங்கிவிடும். அப்படியே விட்டுவிடுங்கள். ஐந்து நிமிடத்தில் கிரீம் கண்ணுக்கு தெரியாமல் காணாமல் போகும். மறுநாள் காலை எப்போதும் போல எழுந்து முகத்தை கழுவிக்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் மறைய இனி எந்த கஷ்டமும் பட வேண்டாம். உங்க வீட்ல இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும். கண் கருவளையத்தை காணாமல் ஆக்கி விடலாம்.

தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு இந்த ஜெல்லை முகத்தில் அப்ளை செய்து வர, உங்கள் சருமத்தில் இருக்கும் முகப்பரு பிரச்சனை, கரும்புள்ளி பிரச்சனை, கொப்பளம் போன்ற பலவிதமான சர்மம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும். நீங்க வேணும்னா அழகு குறிப்பு ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -