20 நிமிடத்தில் பளிச்சிடும் முகம்

bright face pack
- Advertisement -

ஒருவரின் முகத்தை நாம் பார்க்கும் பொழுது மறுபடியும் திரும்ப பார்க்கும் அளவிற்கு பளிச்சென்று பிரகாசமாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் முகத்திற்கு தான் ஈர்ப்பு சக்தியானது அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட ஈர்ப்பு சக்தி மிகுந்த முகத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய எளிமையான பொருட்களை வைத்து ஃபேஸ் பேக் செய்தால் போதும். அந்த ஃபேஸ் பேக்கை எப்படி செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

முகத்தில் இருக்கக்கூடிய தேவையில்லாத கருமைகள் நீங்கவும், தேவையில்லாத முடிகள் நீங்கவும், பளிச்சென்று பளிங்கு போன்ற முகத்தை பெறவும் நாம் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை பயன்படுத்துவோம். அதற்கு பதிலாக நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய அற்புதமான பொருட்களை பயன்படுத்தி நல்ல பலனை பெற முடியும். கெமிக்கல் நிறைந்த பொருட்களுக்கு பதிலாக இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களை நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் எந்த வித பக்க விளைவுகளும் நமக்கு ஏற்படாது. அதே சமயம் நம்முடைய அழகு நிரந்தரமாக நிலைத்து இருக்கும்.

- Advertisement -

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்றரை ஸ்பூன் கடலைமாவை சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். கஸ்தூரி மஞ்சளாக இருந்தாலும் சரி குளிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய சாதாரண மஞ்சளாக இருந்தாலும் சரி. அடுத்ததாக இதில் மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்க்க வேண்டும். சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெய் மிகவும் சிறப்பு மிக்கதாக திகழும். இவை அனைத்தையும் நன்றாக கலந்த பிறகு இதில் 5 சொட்டு பன்னீரை விட்டு கிரீம் பதத்திற்கு வரும் அளவிற்கு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

கலந்த இந்த பேஸ்ட்டை நம்முடைய முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். 20 நிமிடம் கழித்து கீழிருந்து மேல்புறமாக நம்முடைய கைகளை வைத்து முகத்தில் இருக்கும் பேக்கை அழுத்தி நீக்க வேண்டும். இப்படி நீக்குவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும். அதோடு மட்டுமல்லாமல் சூரியக் கதிர்களால் ஏற்பட்ட கருமை நிறம் மாறி முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும்.

- Advertisement -

முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும். முகத்திற்கு ஒருவித மினுமினுப்பை தரும். இதை அனைத்து சருமத்தினரும் பயன்படுத்தலாம். வாரத்திற்கு மூன்று நாட்கள் வீதம் பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கிவிடும். வெறும் கைகளை வைத்து முகத்தில் இருக்கக்கூடிய பேக்கை அழுத்தி தேய்த்து நீக்கிய பிறகு குளிர்ந்த நீரால் மட்டும் முகத்தை கழுவினால் போதும். சோப்பு, ஃபேஸ் வாஷ் என்று எதையும் உபயோகப்படுத்த கூடாது.

இதையும் படிக்கலாமே: வீட்டிலேயே கரோடின் சிகிச்சை செய்யும் முறை

முகத்தில் இருக்கக்கூடிய கருமையை நீக்கவும், தேவையற்ற முடிகளை அகற்றவும் இனிமேல் பியூட்டி பார்லர் போக வேண்டிய தேவையை இருக்காது. வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை பயன்படுத்தினாலே பளிச்சிடும் முகத்தை நம்மால் பெற முடியும்.

- Advertisement -