கருஞ்சீரக எண்ணெய்

karunjeeraga hair oil
- Advertisement -

ஆண் மற்றும் பெண்ணிற்கு இருக்கக்கூடிய அழகை மேலும் அழகாக காட்டுவது அவர்களின் தலைமுடியே. தலைமுடி ஆரோக்கியமாக இருந்தால் அவர்கள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் என்பது அர்த்தம். நம்முடைய உடல் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பாகவே, நம்முடைய தலைமுடி திகழ்கிறது என்றே கூற வேண்டும். அப்படிப்பட்ட தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஒரு எண்ணையைப் பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

வீட்டிலேயே பல மூலிகைகளைக் கொண்டு மூலிகை எண்ணெய் தயார் செய்து தலைக்கு தடவும் பழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இன்று வரை இருந்து வருகிறது. இதற்காக சில குறிப்பிட்ட மூலிகைகளை தேடி கண்டுபிடித்து சேர்ப்பார்கள். மேலும் எண்ணெய் காய்ச்சும் பதம் என்று ஒன்று இருக்கிறது. அதை சரியான பதத்தில் காய்ச்சினால் தான் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு கிடைக்கும். இந்த பிரச்சனைகள் எதுவுமே இல்லாமல் எளிமையான முறையில் எண்ணெய் தயாரிப்பதை பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றியும் பார்ப்போம்.

- Advertisement -

இந்த எண்ணையை தயார் செய்வதற்கு நமக்கு இரண்டே இரண்டு பொருட்கள் இருந்தால் போதும். ஒன்று வெந்தயம் மற்றொன்று கருஞ்சீரகம். வெந்தயம் 5 ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கருஞ்சீரகமும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் ஒரு இரும்பு கடாயில் போட்டு மிதமான சூட்டில் லேசாக வறுக்க வேண்டும். வறுத்த இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது 400மிலி தேங்காய் எண்ணெயுடன் 100மிலி விளக்கெண்ணெய் சேர்த்து அதில் அரைத்து வைத்திருக்கும் இந்த பொடியையும் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். விருப்பம் இருப்பவர்கள் கருவேப்பிலையை காய வைத்து நுணுக்கி இந்த எண்ணெயில் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அனைத்து பொடிகளையும் அந்த எண்ணையில் கலந்த பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் இந்த எண்ணையை ஊற்றி அந்த பாட்டிலின் மேல் ஒரு துணியை வைத்து நன்றாக கட்டி 10 நாட்கள் சூரிய ஒளியில் வைக்க வேண்டும்.

- Advertisement -

பதினோராவது நாள் இந்த எண்ணையை எடுத்து தலையில் தேய்த்துக் கொள்ளலாம். இப்படி தலையில் தேய்ப்பதற்கு முன்பாக ஒரு ஸ்பூனில் அடியிலிருந்து நன்றாக கலந்து விட்டு பிறகு தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும். நம் தலை முடிக்கு மிகவும் அற்புதமான ஒரு வரப் பிரசாதமாக திகழ்வதுதான் கருஞ்சீரகம்.

கருஞ்சீரகத்தில் ஆன்டி ஃபங்கள், ஆன்டி வைரல், ஆன்டி இன்ஃப்ளமேசன் இருக்கின்றன. இந்த கருஞ்சீரகத்தை தலைக்கு உபயோகப்படுத்துவதன் மூலம் தலைமுடி உதிர்தல் பிரச்சனை முற்றிலுமாக நிற்கிறது. அதோடு ஈறு, பேன், பொடுகு, அரிப்பு போன்ற அனைத்து பிரச்சனைகளையும் நீக்குகிறது. அதோடு தலைமுடியை உறுதியாகவும் அடர்த்தியாகவும் வளர உதவி செய்கிறது.

இதையும் படிக்கலாமே: தேங்காய் பால் அழகு குறிப்பு

கருஞ்சீரகத்தின் முழுமையான பலனை உணர்ந்த பல பேர் இதை தங்கள் தலைக்கு பயன்படுத்தி தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரித்து வருகிறார்கள்.

- Advertisement -