ஜாதக கட்டத்தில் புதனை ஆக்டிவ் செய்ய 10 ரூபாய் செலவில் பரிகாரங்கள்.

budhan1
- Advertisement -

ஜாதக கட்டத்தில் புதன் பகவான் பலவீனமாக இருந்தால் ஒரு மனிதனுக்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மாணவர்களால் நன்றாக படிக்க முடியாது. படித்ததை நினைவில் நிற்காது. அறிவுத்திறன் சார்ந்த விஷயங்களில் இவர்களால் சாதிக்க முடியாது. உதாரணத்திற்கு டீச்சர் தொழிலில் செய்பவர்கள், வக்கீல் தொழில் செய்பவர்கள் மேடைப் பேச்சாளர்கள், இவர்களுக்கெல்லாம் புதன் பகவானின் பலம் கட்டாயம் தேவை.

இப்படிப்பட்ட அறிவு திறமை சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு புதன் பகவான் பலவீனமானால் அவர்களால் அந்த துறையில் ஜெயிக்க முடியாது. ரொம்பவும் பின் அடைந்த செல்வார்கள். அது மட்டுமில்லாமல் புதன் கெட்டுப் போய்விட்டால், காலியாக இடம் வாங்கி வீடு கட்ட முடியாது. தாய் மாமன் உறவு பலப்படாமல் இருக்கும்.

- Advertisement -

சின்ன குழந்தைகளுக்கு பேச்சு நன்றாக வராது. எழுத்து நன்றாக இருக்காது. இப்படி அறிவுசார் பிரச்சனையில் பல பிரச்சனைகளை கொடுக்கக்கூடிய சம்பவங்கள் ஒருவருடைய வாழ்க்கையில் தொடர்ந்து நடந்து வந்தால் புதன் ஜாதக கட்டத்தில் சரியாக இல்லை என்று நாமே தெரிந்து கொள்ளலாம். இதை இன்னும் ஊர்ஜிதப்படுத்த என்ன செய்வது.

உங்களுடைய ஜாதக கட்டத்தை கொண்டு போய் ஒரு ஜோதிடரிடம் காண்பித்தீர்கள் என்றால், புதன் உங்கள் ஜாதக கட்டத்தில் எப்படி இருக்கிறது என்பதை அவர் சரியாக கணித்து சொல்லிவிடுவார். இப்போது உங்கள் ஜாதக கட்டத்தில் புதன் வீக்கா இருக்குன்னு தெரிஞ்சுகிட்டீங்க. அதை பலப்படுத்த என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

புதனை பலப்படுத்த செய்ய வேண்டிய பரிகாரம்

வெண்டைக்காய், பொடலங்காய், பீர்க்கங்காய், இந்த மூன்று காய்களுமே பத்து ரூபாய் செலவு செய்தால் வாங்கிக் கொள்ளலாம். வாரம் தோறும் வரக்கூடிய புதன்கிழமை அன்று இந்த காய்கறிகளை சமைத்து சாப்பிடும் போது நமக்கு புதன் பகவானின் பலம் ஜாதக கட்டத்தில் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் 17 வாரம் தொடர்ந்து நவகிரக சன்னதியில் இருக்கும் புதன் பகவானுக்கு இரண்டு மண் அகல் விளக்குகளில் திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர வேண்டும்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி, இந்த மூன்றும் புதன் பகவானின் நட்சத்திரமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த மூன்று நட்சத்திரங்கள் வரக்கூடிய நாட்களில் புதன் பகவானை வழிபாடு செய்து மேலே சொன்ன மூன்று காய்கறிகளையும் இந்த தினத்தில் சாப்பிட்டு வரும்போது உங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் பலன் கிடைக்கும்.

- Advertisement -

புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. மரகத பச்சைையில் கல் வைத்து மோதிரம் அணிவது, புதன்கிழமை அன்று பச்சை நிற ஆடை அணிவது, எல்லாமே புதன் பகவானின் அனுகிரகத்தை நமக்கு பெற்றுத் தரும். இது எல்லாவற்றையும் விட புதன் என்றால் பெருமாள். இது புரட்டாசி மாதம். தினம் தினம் பெருமாள் வழிபாடு செய்தால் புதன் பகவானின் ஆசிர்வாதத்தை நிலையாக நன்றாக பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: கெட்ட நேரத்தைக் கூட நல்ல நேரமாக மாற்றி கிரக கோளாறு நீங்கி வாழ்க்கையில் ஜெயிக்க எளிய பரிகாரங்கள்

புரட்டாசி மாதம் முடியும் வரை வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு தினமும் சென்று துளசி வாங்கி கொடுத்து வழிபாடு செய்யுங்கள். முடியாதவர்கள் வாரம் தோறும் சனிக்கிழமை அன்று மட்டுமாவது பெருமாள் வழிபாடு செய்தால் புதன் பகவானின் ஆசீர்வாதம் கிட்டும். ஜோதிடத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கும் இந்த தகவல்களில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -