கெட்ட நேரத்தைக் கூட நல்ல நேரமாக மாற்றி கிரக கோளாறு நீங்கி வாழ்க்கையில் ஜெயிக்க எளிய பரிகாரங்கள்

jathagam dheepam
- Advertisement -

எல்லோருடைய வாழ்விலும் நல்ல நேரம் கெட்ட நேரம் என மாறி மாறி வரத் தான் செய்யும். இது அவரவரின் ஜாதக கிரக நிலையை பொறுத்து அமையும். நல்ல நேரம் வரும் போது எப்பேர்பட்ட நிலையில் இருப்பவர்களும் உயர்வதும், நேரம் கெட்டதாகும் போது உயர் நிலையில் இருப்பவர்கள் தாழ்ந்து போவது இயல்பு. இந்த கெட்ட நேரத்தை சரி செய்ய ஆன்மீகம் சில பரிகாரங்களை நமக்கு தந்திருக்கிறது அதை இப்போது பார்க்கலாம்.

வாழ்க்கையில் நல்லது மட்டுமே நடக்க பரிகாரம்

இதில் முதலில் நாம் அரச இலை பரிகாரத்தை பார்ப்போம். இந்த பரிகாரத்திற்கு நேரம் சரியில்லாதவர்கள் தினமும் அரச மரத்தை சுற்றி வர வேண்டும். அந்த நேரத்தில் அரச மரத்தில் இருந்து ஒரே ஒரு இலையை பறித்து சாப்பிட வேண்டும். சனிக்கிழமையில் இந்த அரச மரத்தடியில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

அடுத்து பூசணிக்காய் பரிகாரம் இந்த பரிகாரம் செய்வதற்கு பூசணிக்காயை வீட்டு வாசலில் வைத்து அதன் மேல் பச்சைக் கற்பூரம் ஏற்றிய பிறகு நீங்கள் பூசணிக்காய் முன் நின்று நான்கு புறமும் தாண்ட வேண்டும். அதாவது முன் நின்று ஒரு அடி எடுத்து வைத்து பிறகு அப்படியே திரும்பி எடுத்து வைக்க வேண்டும். பின்புறமாக காலை எடுத்து வைக்கக் கூடாது. உங்களுடைய எதிர்மறை ஆற்றலை அழிக்க இந்த பரிகாரம் உதவும்.

அடுத்து அருகம்புல்லை பச்சையாக கிடைத்தால் எடுத்துக் கொள்ளுங்கள். நாட்டு மருந்து கடைகளில் கிடைத்தால் அதை வாங்கி தினமும் காலையில் கொஞ்சம் தண்ணீரை கொதிக்க வைத்து இந்த பொடியை கலந்து குடித்து வர உங்களுடைய இந்த கிரக நிலையை மாற்றும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அருகம்புல்லுக்கு கிரக ஆற்றலை கட்டுப்படுத்தக்கூடிய சக்தி உண்டு.

- Advertisement -

அடுத்து வீட்டில் தீபம் ஏற்றுவது வீட்டில் ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி ஆறு மிளகை ஒரு சிறிய துணியில் கட்டி தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை தொடர்ந்து ஏற்றி வரும் போது உங்களை தொடரும் கெட்ட நேரங்கள் அனைத்தும் விலகும் என்று சொல்லப்படுகிறது. இதனால் ஜாதகத்தில் உள்ள கோளறுகள் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாகும் தீபம்

மேற்கூறிய இந்த பரிகாரங்கள் அனைத்தும் உங்களுடைய கெட்ட நேரத்தினால் வரக்கூடிய கேடுதல்களை பெருமளவு குறைத்து உங்களை காக்க உதவும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -