குலதெய்வ அருள் கிடைக்க பரிகாரம்

kula dheiva arul
- Advertisement -

குலதெய்வ வழிபாடு எத்தனை முக்கியம் என்பது யாருக்கும் சொல்லி தெரியாது. ஒவ்வொரு குடும்பமும் நல்ல முறையில் தலைப்பு வாழ வேண்டுமெனில் அங்கு குல தெய்வத்தின் அருள் வழிபாட்டு முறைகளில் குலதெய்வ வழிபாட்டிற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இப்படியான குலதெய்வத்தின் அருள் இல்லாமல் துன்பப்படும் பல்லாயிரக்கணக்கானவர்களை நாம் பார்த்திருக்கிறோம்.

குலதெய்வத்தின் அருள் இல்லையெனில் வீட்டில் எந்த சுப காரியங்களும் உடனே நடக்காது. காரிய தடைகள் ஏற்படும், ஏதேனும் ஒரு சுகவீனம் இருந்து கொண்டே இருக்கும். இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆகையால் குலதெய்வத்தை எப்போதும் முறைப்படி வணங்கி அவர்களின் ஆசீர்வாதத்தை பெற வேண்டும்.

- Advertisement -

இதில் இன்னொரு சிக்கல் பலருக்கும் குலதெய்வமே தெரியாது. அப்படியானவர்கள் என்ன செய்வது குலதெய்வத்தின் அருள் கிடைக்காதவர்களும் குலதெய்வமே தெரியாதவர்களும் குலதெய்வத்தின் அருளை முழுவதுமாக பெற எளிமையான இந்த பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

குலதெய்வ அருள் கிடைக்க பரிகாரம்

இந்த பரிகாரம் செய்ய நமக்கு தேவையான பொருள் தான் மிக மிக முக்கியம். அது வேறொன்றுமில்லை குளவி கூடு கட்டிய மண். இந்த குளவி கூடு பெரும்பாலான இடங்களில் இருக்கும். இதை கொஞ்சம் சிரத்தை எடுத்து தேடினால் கட்டாயமாக கிடைக்கும். ஆனால் நாம் இந்த மண்ணை எடுக்கும் போது அதில் குளவியோ குளவி குஞ்சுகளோ இருக்கக் கூடாது. அதை கவனமாக பார்த்துக் கொண்டு அதன் பிறகு எடுங்கள்.

- Advertisement -

அதே போல் இந்த பரிகாரத்தை வியாழன், வெள்ளி ஞாயிறு இந்த மூன்று கிழமைகளில் தான் செய்ய வேண்டும். அதுவும் வளர்பிறை நாட்களில் இந்த பரிகாரத்தை செய்தால் இன்னும் நல்ல பலனை பெறலாம். சரி இப்போது இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மேற் சொன்ன நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் இந்த மண்ணை எடுத்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிள்ளையார் போல பிடித்து இதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து கொள்ளுங்கள். இதை உங்கள் வீட்டில் குலதெய்வம் படம் இருந்தால் அங்கே வையுங்கள் இல்லையெனில் பூஜை அறையில் வைத்தாலும் கூட போதும். இப்போது குலதெய்வத்தை நினைத்து தீபம் ஏற்றி வைத்து விட்டு அவர்களுக்கு உகந்த நெய்வேத்தியத்தை படைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த மண் ஒரு நாள் முழுவதும் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கட்டும். அதன் பிறகு மறுநாள் மஞ்சள் நிற துணியில் இந்த மண்ணை கட்டி நிலை வாசலில் கட்டி விடுங்கள் போதும். இந்த பரிகாரத்தை செய்தாலே குலதெய்வம் நம் வீடு தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. மனிதர்களின் கால் படாத மண்ணிற்கு எப்போதும் ஒரு சக்தி உண்டு. அந்த வகையில் இந்த மண்ணை கொண்டு செய்யப்படும் இந்த பரிகாரம் நல்ல பலனை அளிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பணவரவை அதிகரிக்க மகாலட்சுமி மந்திரம்

ஒரு குடும்பத்திற்கு குலதெய்வத்தின் அருள் மட்டும் பரிபூரணமாக கிடைத்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் தோல்வி என்பதே கிடையாது. அப்படியான குல தெய்வத்தின் அருளை பெற எளிமையான ஒரு வழி தான் இந்த பரிகாரம் நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல பலன் அடைய முடியும்.

- Advertisement -