இந்த 5 ராசிக்காரர்களுக்கு தங்கள் மணிபர்சில் எதை வைத்தால் பணம் அதிகமாக சேரும் தெரியுமா?

pursewithcash
- Advertisement -

12 ராசியில் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் அடிக்கடி வரும் என்கிறது ஜோதிடம். ஒரு சிலருக்கு ஒரு முறை வந்த வாய்ப்பு திரும்ப என்ன தான் குட்டிக்கரணம் போட்டாலும் கிடைப்பது இல்லை! ஆனால் இந்த சிலருக்கோ தவறவிட்ட வாய்ப்புகள் கூட மறுபடியும் மறுபடியும் வீட்டுக் கதவைத் தட்டும். இவர்கள் தங்களுடைய மணிபர்சில் எதை வைத்து இருந்தால் அதிகமாக பணம் சேரும்? என்று பொது பலனாக இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மேஷம்:
12 ராசிகளில் முதல் ராசியாகிய இருக்கும் மேஷம் தங்களுடைய வாழ்நாட்களில் எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தாலும் திடீர் திடீரென இவர்களுக்கு அதிர்ஷ்டம் வந்து வந்து தான் போகும். கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் பயன்படுத்திக் கொண்டால் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நீங்கள் உங்களுடைய மணிபர்சில் பணத்துடன் சேர்த்து மகாலட்சுமியின் அம்சமாக இருக்கும் மருதாணி விதைகளை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள் அதனுடன் மகாலட்சுமி படம் வைத்துக் கொண்டால் போதும் நல்ல ஒரு பணவரத்து இருக்கும்.

- Advertisement -

மிதுனம்::
மிதுன ராசிக்காரர்களுக்கு எவ்வளவு வாய்ப்புகள் வந்தாலும் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு படிக்கற்களாக மாற்றும் முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே முன்னேற்றத்தை காண முடியும். வாய்ப்புகள் பலருக்கும் எளிதாக கிடைப்பதில்லை என்பதை இவர்கள் உணர வேண்டும். நீங்கள் உங்களுடைய மணிபர்சில் பணத்துடன் சேர்த்து எப்போதும் குண்டு மஞ்சள் ஒன்றை வைத்துக் கொள்வது பேரதிர்ஷ்டத்தை உண்டு பண்ணும். அள்ள அள்ள குறையாத பண வரவு ஏற்படும்.

சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் பலமுறை வந்தாலும் அதனை எப்பொழுதும் கைநழுவ விடுவது தான் இவர்களுடைய வேலையாக இருக்கும். வரும் வாய்ப்புகளை எல்லாம் தவற விடும் பொழுது அதன் அருமை புரியாது. கைநழுவி சென்ற பின் தான் உட்கார்ந்து வருத்தப்பட்டு கொண்டிருப்பார்கள். எனினும் தளராத முயற்சி செய்தால் மீண்டும் அந்த வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும் என்பதால் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்களுடைய மணிபர்சில் பணத்துடன் சேர்த்து சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைத்தால் போதும்! அள்ள அள்ள குறையாத பணம் சேரும், பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்ப கூடிய அதிர்ஷ்டம் வரும்.

- Advertisement -

துலாம்::
துலாம் ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சாதுரியமாக செயல்படுவார்கள். ஆனால் ஒரு சில வாய்ப்புகளை தவற விட்டு பின்னால் ஏன் அப்படி செய்தோம்? என்று சிந்திப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் முந்திக் கொண்டால் மற்றவர்களுக்கு உங்களுடைய வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய மணிபர்சில் எப்பொழுதும் பணத்துடன் சேர்த்து குபேரன் படத்தையும், மாதுளை குச்சியையும் வைத்துக் கொள்ளுங்கள். செலவு செய்ய செய்ய பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

கும்பம்::
கும்ப ராசியில் பிறந்தவர்கள் உங்களுடைய ராசிக்கு நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அதற்குரிய பலன்கள் கிடைக்க சாதுரியமாக செயல்பட வேண்டும். சிறிய விஷயத்தில் தவற விட்டு, பெரிய விஷயத்தை இழக்க நேரிடும். எனினும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும் பொழுது உங்களுக்கு மீண்டும் மீண்டும் அதிர்ஷ்டம் வந்து கொண்டே தான் இருக்கும் எனவே கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை. நீங்கள் உங்கள் ராசிக்கு உங்களுடைய மணி பர்சில் எப்பொழுதும் பணத்துடன் சேர்த்து 2 ஏலக்காய் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். நீங்களே நினைத்து பார்க்காத அளவிற்கு பணமானது கரையாமல் சேர்ந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -