வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை உண்டு பண்ணக்கூடிய இந்த 5 செயல்களை இனி தவறியும் செய்யாதீர்கள்!

lakshmi-sleep-plant
- Advertisement -

இந்த பிரபஞ்சம் முழுவதும் எதிர்மறை ஆற்றல்களும், நேர்மறை ஆற்றல்களும் நிறைந்து உள்ளன. அதே போல வீட்டிலும், நம் உடலிலும் கூட எதிர்மறை ஆற்றல்களும், நேர்மறை ஆற்றல்களும் கலந்து தான் இருக்கும். இதில் எதிர்மறை ஆற்றல்களை எதிர்த்து போராடக்கூடிய தைரியமும், தன்னம்பிக்கையும் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். இவர்கள் எப்பொழுதும் நேர்மறையாக சிந்திக்க வேண்டும் என்று உறுதியுடன் இருப்பார்கள். அதற்குரிய செயல்களை வீட்டிலிருந்தே ஆரம்பிக்கவும் செய்வார்கள். அந்த வகையில் நீங்கள் வீட்டில் செய்யக்கூடிய இந்த 5 செயல்களை தவிர்த்தால் எதிர்மறை ஆற்றல்கள் உங்களை விட்டு சென்றுவிடும். அது என்னென்ன? என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

vijaya-lakshmi

முதலில் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தம் சோறு போடும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதே போல சுத்தமாக இருக்கும் இல்லத்தில் தான் மகாலட்சுமியும் தங்குகிறாள். எனவே நம் வாழ்க்கை பயணித்துக் கொண்டிருக்கும் திசைக்கும், நாம் செய்யும் செயல்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தேவையற்ற பொருட்களை முதலில் வீட்டிலிருந்து தூக்கி போட்டு விடுங்கள் தேவையற்ற பொருட்களை சேர்த்து வைப்பதால் தான் வீட்டில் தூசுகளும் அதிகரிக்கின்றன. எங்கு பார்த்தாலும் தூசு, தும்புகள் இருந்தால் அந்த வீட்டில் எப்படி நேர்மறை ஆற்றல் பெருகும்? அதைக் காணும் பொழுதெல்லாம் மனதில் நம்மையும் அறியாமல் எதிர்மறை ஆற்றல் குடிகொள்ள துவங்கும். இதனால் நம்முடைய செயல்களும் அதற்கேற்ப தீய வழியில் தான் செல்லும் என்கிறது சாஸ்திரம்.

- Advertisement -

அடுத்ததாக நாம் படுக்கும் அறையில் படுக்கைக்கு கீழே கட்டாயம் பிராணவாயு இருக்குமாறு செய்ய வேண்டும். நீங்கள் படுக்கும் கட்டிலுக்கு கீழே தேவையற்ற பொருட்களை குவித்து வைப்பதை தவிர்க்கவும். அந்த இடத்தில் எந்த அளவிற்கு நீங்கள் காலியாக வைத்து பிராண வாயு உள்ளே வர அனுமதி கொடுக்கிறீர்களோ! அந்த அளவிற்கு நீங்கள் நிம்மதியான தூக்கத்தையும் பெறுகிறீர்கள். கட்டிலுக்கு கீழே குடிக்கும் தண்ணீரை தவிர எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது. குடிக்கும் தண்ணீரை பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தில் ஊற்றி மூடி வைத்து விட்டு தூங்கி பாருங்கள், நிம்மதியான தூக்கம் வரும்.

sleep

பின்னர் நீங்கள் படுக்கும் தலையணைக்கு கீழே மணி பர்ஸ் வைப்பது, மாத்திரை, மருந்துகள், தைல பாட்டில்கள் வைப்பது, மொபைல்போன் வைப்பது போன்ற செயல்களை கட்டாயம் தவிர்க்கவும். தலையணைக்கு கீழே மருதாணி செடி உடைய இலை அல்லது கொஞ்சமாக வேப்பிலை ஏதாவது ஒன்றை வைத்து கொண்டு தூங்கி பாருங்கள், நல்ல ஒரு புத்துணர்வு ஏற்பட்டு ஆழ்ந்த தூக்கம் வரும்.

- Advertisement -

வீட்டின் சுவற்றில் விரிசல் விட்டிருப்பது, தண்ணீர் குழாய்களில் தண்ணீர் சொட்டுவது, கதவுகளில் தாழ்ப்பாள் உடைந்து இருப்பது, அல்லது மரக்கதவுகள் விரிசல் விட்டிருப்பது, கண்ணாடிகள் உடைந்து இருப்பது போன்ற ஏதாவது ஒரு விஷயங்களில் உங்களுடைய கவனம் செல்லும் பொழுது அங்கு எதிர்மறை ஆற்றல்கள் பெருகுகின்றன. எனவே இத்தகைய விஷயங்கள் உங்கள் வீட்டில் ஏற்பட்டால் உடனே அதனை சரி செய்து புதுப்பித்துக் கொள்ளுங்கள். இதனால் தேவையற்ற எதிர்மறை ஆற்றல்கள் வீட்டில் பெருகுவதை தவிர்க்கலாம்.

வீட்டிற்கு உள்ளேயே நீங்கள் வளர்க்கும் செடி வகைகள் புதர் போல வளர்க்க கூடாது. மேலும் அது கொடி வகைகளாகவும் இருக்கக் கூடாது. கொடி போல வளரும் தாவரங்களையும், புதர் போல வளரும் தாவரங்களையும் வீட்டிற்கு முன்னால் வைத்து வளர்க்கக் கூடாது. ஆனால் வீட்டிற்கு பின்னால் வைத்து தாராளமாக நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம். புதர் போல வளரும் செடிகள் மூலமும் எதிர்மறை ஆற்றல் பெருகும் என்கிறது வாஸ்து. எனவே இந்த விஷயங்களை எல்லாம் சரியாக தவிர்த்து வந்தால் நம்மிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நேர்மறை ஆற்றல் பெருகும்.

- Advertisement -